உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்: என்.ஐ.ஏ., விசாரணை தீவிரம்

காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்: என்.ஐ.ஏ., விசாரணை தீவிரம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில், பயங்கரவாதிகளால் தாக்கப்பட்ட பஸ், பள்ளத்தாக்கில் கவிழ்ந்த விபத்தில், 10 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்த, சம்பவ இடத்திற்கு என்.ஐ.ஏ., அதிகாரிகள் விரைந்துள்ளனர். போலீசாருக்கு உதவ என்.ஐ.ஏ., குழுவினர் திட்டமிட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீரில், ரியாசி மாவட்டத்தில் உள்ள ஷிவ்கோரி குகைக் கோவிலுக்கு, 30க்கும் மேற்பட்ட பக்தர்களை ஏற்றி பஸ் ஒன்று சென்றது. போனி பகுதியில் உள்ள டெரியாத் கிராமம் அருகே பஸ் வந்த போது, பயங்கரவாதிகள் துப்பாகிச் சூடு நடத்தினர். இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=0epv7tr8&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த விபத்தில், 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 33 பேர் காயமடைந்தனர். இந்த விபத்து குறித்து வழக்கு பதிந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக விசாரணை நடத்த, சம்பவ இடத்திற்கு என்.ஐ.ஏ., அதிகாரிகள் விரைந்துள்ளனர். போலீசாருக்கு உதவ என்.ஐ.ஏ., குழுவினர் திட்டமிட்டுள்ளனர். தாக்குதலில் ஈடுபட்டவர்கள் குறித்து, விவரங்களை சேகரிக்க என்.ஐ.ஏ., அதிகாரிகள் களத்தில் இறங்கி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Pari
ஜூன் 10, 2024 19:10

நீங்கள் எதிர்கட்சி என்றவுடன் எப்படி தைரியம் வருகிறது தீவிரவாதிகளுக்கு? எனது இந்தியாவை காப்பாற்ற மோடி அவர்களால் மட்டும் முடியம் என்பதை முழுமையாக நம்புகிறேன்


T Jayakumar
ஜூன் 10, 2024 12:44

தீவிரவாதிகளை அடியோடு ஒழிக்க வேண்டும்.


மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ