உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தாய்லாந்து- கம்போடியா மோதல்: நிலைமையை உன்னிப்பாக கவனிக்கும் இந்தியா

தாய்லாந்து- கம்போடியா மோதல்: நிலைமையை உன்னிப்பாக கவனிக்கும் இந்தியா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: தாய்லாந்து, கம்போடியா எல்லை பிரச்னையில், தற்போதையை நிலை குறித்து உன்னிப்பாக கவனித்து வருவதாக வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறினார்.தென்கிழக்கு ஆசிய நாடுகளான தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே, நீண்ட காலமாக இருந்து வந்த எல்லை பிரச்னை நேற்று முன்தினம் மோதலாக வெடித்தது. ஏவுணைகள் மற்றும் பீரங்கி குண்டுகளை வீசி, இரு நாடுகளும் தாக்குதல் நடத்தின.இந்த தாக்குதலில் தாய்லாந்தில் ராணுவ வீரர் ஒருவர் உட்பட 15 பேர் உயிரிழந்தனர். கம்போடியாவில் ஒரு ராணுவ வீரர் பலியானார்.இந்நிலையில் டில்லியில் வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையிலான தற்போதைய நிலை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.இது தொடர்பாக ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது:கம்போடியாவுக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான எல்லையில் உள்ள நிலைமையை நாங்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம்.இந்தியா இரு நாடுகளுடனும் நெருக்கமான மற்றும் நட்புறவைக் கொண்டுள்ளது, மேலும் இரு தரப்பினரும் விரோதங்களை நிறுத்துவதற்கும் மேலும் மோதலைத் தடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.அங்குள்ள இந்திய பயணிகள், உதவிக்கு இரு நாடுகளிலும் உள்ள இந்திய தூதரகங்களைத் தொடர்பு கொள்ளலாம்.தாய்லாந்தின் பாங்காக்கில் உள்ள இந்திய தூதரகம்உதவி எண்: +66 61 881 9218 (வாட்ஸ் ஆப் அழைப்பு உள்பட),கம்போடியாவின் புனோம் பென்னில் உள்ள இந்திய தூதரகம் உதவி எண்: +855 92 881 676 (வாட்ஸ் ஆப் அழைப்பு உள்பட) ஆகிய எண்களில் தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.இவ்வாறு ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறினார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

aaruthirumalai
ஜூலை 27, 2025 07:32

உன்னிப்பாக கவனிக்க வேண்டிய முக்கியமான காலகட்டம்.


அப்பாவி
ஜூலை 27, 2025 06:37

இது போருக்கான நேரம். தளவாடம் வித்தாச்சு.


Ramesh Sargam
ஜூலை 26, 2025 22:09

இந்திய பிரதமர் மோடிஜி நினைத்தால் இந்த போரை ஆரம்பத்திலேயே முடிவுக்கு கொண்டுவர வாய்ப்பிருக்கிறது.


Ramesh Sargam
ஜூலை 26, 2025 22:07

அமெரிக்காவின் ட்ரம்ப் இன்னும் இந்த போரில் மூக்கை நுழைக்காதது ஆச்சர்யம் அளிக்கிறது.


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஜூலை 27, 2025 05:54

ட்ரம்ப் மகன்கள் இந்த நாடுகளில் எந்த வியாபாரமும் செய்ய வில்லையோ என்னவோ. அதனால் தான் இன்னும் ட்ரம்ப் களத்தில் இறங்கவில்லை. திராவிட மாடல் அமெரிக்கா வரை கொடி கட்டிப் பறக்கிறது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை