உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நீதியின் வெளிச்சம் கடைக்கோடி மனிதரையும் சென்றடைய வேண்டும்: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி வலியுறுத்தல்

நீதியின் வெளிச்சம் கடைக்கோடி மனிதரையும் சென்றடைய வேண்டும்: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி வலியுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: நீதியின் வெளிச்சம் இந்த நாட்டின் கடைக்கோடி மனிதரையும் சென்றடைய வேண்டும் என சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கவாய் வலியுறுத்தினார்.சுப்ரீம் கோர்ட்டில், சட்ட உதவி வழங்கும் வழிமுறைகளை வலுப்படுத்துதல் குறித்த தேசிய மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கவாய் பேசியதாவது: நீதி என்பது ஒரு சிலரின் சலுகை அல்ல, மாறாக ஒவ்வொரு குடிமகனின் உரிமை. நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற அதிகாரிகள் என்ற வகையில் நமது பங்கு, சமூகத்தின் ஓரங்களில் நிற்கும் கடைசி நபரைக் கூட நீதியின் வெளிச்சம் சென்றடைவதை உறுதி செய்வதாகும்.அனைவருக்கும் சட்ட உதவி மற்றும் நீதி கிடைப்பதற்கான நோக்கத்தை முன்னெடுப்பதில், நீதித்துறையின் முக்கிய பொறுப்பை பிரதமரின் வருகை பிரதிபலிக்கிறது. பொருளாதாரம், ஜாதி, பாலினம், மொழி அல்லது சூழ்நிலைகளைப் பொருட்படுத்தாமல் ஒவ்வொரு நபரும் நீதித்துறை தனக்குச் சொந்தமானது என்று உணர வேண்டும். இவ்வாறு தலைமை நீதிபதி கவாய் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 44 )

Gajageswari
நவ 16, 2025 05:56

தாமதிக்க பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என்று தலைமை நீதிபதிக்கு தெரியாதா? கடந்த ஏப்ரல் மாதம் என் மேல் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, இன்று வரை ஒரு முறை கூட பட்டியல் இடப்படவில்லை


Ravikrishna Ravigurukkal
நவ 13, 2025 13:59

எப்போது அனைத்து நீதிமன்றங்களிலும் எக்ஸ்பேட் தீர்ப்புகள் ஒழிக்கபடுகின்றனவோ அப்போது தான் கடைக் கோடியில் இருக்கும் சிலருக்காவது தீர்ப்பு வெளிச்சம் கிடைக்கும். இது தான் மிகவும் வேதனையான உண்மை


Ravikrishna Ravigurukkal
நவ 13, 2025 13:51

வேண்டும் என்றால் மாண்புமிகு உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதிகள் வேண்டும் என்றால் நீதி கடைக்கோடியில் இருப்பவருக்கும் கிடைக்க வேண்டும் எனக் கூறிக் கொண்டே செல்லலாம். எப்பொழுது அனைத்து நீதிமன்றங்களிலும் வழக்கறிஞர்கள் பணம் பெற்றுக் கொண்டு நீதியை அழிக்கும் எஸ்பியாதே தீர்ப்புகள் அழிக்கப்படுகின்றன? அப்போதுதான் கடைக்கோடியில் உள்ள சிலருக்காவது நீதி கிடைக்கும் என்பதே எனது தாழ்மையான உண்மயான வேண்டுகோள்.


NATARAJAN R
நவ 10, 2025 13:07

ஆஹா கேட்க கேட்க ஆனந்தம். திமுக அமைச்சர்கள் மீது ஊழல் வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு உயர் நீதிமன்றம் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது என்றால் உடனே உங்கள் உச்ச நீதிமன்றம் தடை விதிக்கிறது.


Lax Shiva
நவ 10, 2025 06:59

ஏழைகள் சாதாரண நீதிமன்றத்துக்கே செல்ல முடியவில்லை உச்ச நீதிமன்றத்துக்கு எப்படி செல்ல முடியும் சிந்திங்க


RADHAKRISHNAN
நவ 09, 2025 19:43

இருளில் வெளிச்சங்கள் மறைக்கப்படுகிறது அய்யா நீதிபதி அவர்களே? கடைக்கோடி மனிதனுக்கு பெரும்பாலும் நீதி கல்லறையில்தான் சமர்க்கிப்படுகிறது அல்லது நினைவற்ற சூழலில்தான் சென்றடைகிறது, நீதிமட்டும் அல்ல அனைத்துமே நமது பட்டாபட்டிகளின் அரசியல் நதியில் கந்துதான் கரை சேரவேண்டியுள்ளது, நாடு அரசியல் கழிவுகளில் மூழ்கிக்கொண்டுள்ளது.


Raja K
நவ 10, 2025 10:16

எளியரை ஏசுவதும் எட்டி உதைப்பதும், வலியவருக்கு வளைந்து கொடுப்பதும் எழுதப்படாத சட்டமாக இருக்கிறது.


ராஜா
நவ 09, 2025 19:26

இந்த வடக்கன்ஸ் இருக்கும் வரை தமிழ்நாட்டு மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்காது


theruvasagan
நவ 09, 2025 16:53

ஐயா. கொஞ்சம் தள்ளி நி்ல்லுங்க.


bharathi
நவ 09, 2025 16:05

If you come to TN we will provide a plastic chair nothing more ...that is called social justice in our model


V Venkatachalam, Chennai-87
நவ 09, 2025 14:09

ஆமாம் ஐயா டமில் நாடு இந்தியாவின் கடைக்கோடியில் தான் இருக்குங்க. அந்த டமில் நாடு விடியல் ஆட்சியின் கீழ் இருக்குங்க. ஆக கடைக்கோடி மாநில முந்திரிங்க பண்ணுகிற ரௌடிராஜ்யத்துக்கு இதுவரை சாதகமான நல்ல தீர்ப்பு வழங்கியிருக்கீங்க. இனிமேலும் அதே மாதிரி பண்ணி நீதியை நிலை நாட்ட உங்க ஜுனியர் எல்லாருக்கும் அட்வைஸ் பண்ணிட்டு போங்க. குட்பை.


Senbagakumar
நவ 09, 2025 21:20

சரியான பதிவு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை