உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பீஹாரை இந்தியாவின் குற்றத் தலைநகராக மாற்றிவிட்டனர்: சொல்கிறார் ராகுல்

பீஹாரை இந்தியாவின் குற்றத் தலைநகராக மாற்றிவிட்டனர்: சொல்கிறார் ராகுல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பீஹாரை இந்தியாவின் குற்றத் தலைநகராக மாற்றிவிட்டனர் என ஆளும் பா.ஜ., அரசு மீது காங்கிரஸ் எம்.பி.,யும், லோக்சபா எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் குற்றம் சாட்டி உள்ளார்.பீஹார் மாநிலம் பாட்னாவில் தொழிலதிபர் கோபால் கெம்கா கொலை செய்யப்பட்டது குறித்து ராகுல் கருத்து தெரிவித்துள்ளார். அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: பாட்னாவில் தொழிலதிபர் கோபால் கெம்காவை சுட்டுக் கொன்றது, பா.ஜ.,வும், முதல்வர் நிதிஷ் குமாரும் இணைந்து பீஹாரை இந்தியாவின் குற்றத் தலைநகராக மாற்றியுள்ளனர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது.இன்று, பீஹார் கொள்ளை, துப்பாக்கிச்சூடு மற்றும் கொலையின் நிழலில் வாழ்கிறது. குற்றம் நடப்பது இங்கே வழக்கமாகிவிட்டது. இந்த அநீதியை இனி பொறுத்துக்கொள்ள முடியாது. உங்கள் குழந்தைகளைப் பாதுகாக்க முடியாத அரசாங்கம் உங்கள் எதிர்காலத்திற்கும் பொறுப்பேற்க முடியாது.ஒவ்வொரு கொலையும், ஒவ்வொரு கொள்ளையும், ஒவ்வொரு தோட்டாவும், மாற்றத்திற்கான கூக்குரல். இப்போது ஒரு புதிய பீஹாருக்கான நேரம். அங்கு முன்னேற்றம் இல்லை, பயம் இல்லை. இந்த முறை ஓட்டு அரசாங்கத்தை மாற்றுவதற்கு மட்டுமல்ல, பீஹாரை காப்பாற்றுவதற்கும் ஆகும். இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

vadivelu
ஜூலை 07, 2025 08:20

இதை தானே லல்லு ஆட்சிக்கு வந்ததில் இருந்தே சொல்லி அறிகிறோம். அதே லல்லுவுடன் கூட்டணி வைத்துள்ள நீங்க சொல்லலாமா


panneer selvam
ஜூலை 06, 2025 22:44

Rahul ji , now capital of Bihar - Patna may be bad but during your friend Lalu regime , whole Bihar state was burning . Are you aware of its past ?


Nagarajan D
ஜூலை 06, 2025 21:54

இவர் வேற பித்தலாட்டம்


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜூலை 06, 2025 17:07

கண்ணாடி வீட்டில் இருந்துகொண்டு கல் எறியும் ......


Suppan
ஜூலை 06, 2025 15:52

அடிச்சு விடுங்க...


krishnamurthy
ஜூலை 06, 2025 14:53

இவன் குடும்ப கட்சி டெல்லியியே மற்றதை விடவா


Rajamani K
ஜூலை 06, 2025 14:43

நான் மிகவும் வறுத்தப்பட்ட, இவரது "நீதி" ராகுல் காந்தியை 2 வருட தண்டனையில் இருந்து காப்பாற்றியது


என்னத்த சொல்ல
ஜூலை 06, 2025 14:24

NCRB data தகவல்படி, தமிழ் நாடு குற்ற விகிதத்தில் மிகவும் பின்தங்கியுள்ளது. முதல் 10 இடத்தில் கூட இல்லை. NCRB யை நம்புவதா வேண்டாமானு தெரியல.


ஆரூர் ரங்
ஜூலை 06, 2025 18:53

FIR போட்டா தானே NCRB க்கு தகவல் போகும்? உதாரணமாக அஜித் குமார் கொலை வழக்குல புகாரே பதிவு செய்யவில்லை.


Jack
ஜூலை 06, 2025 14:21

பீகாரில் அதிகாலை மாணவ மாணவிகள் புத்தகங்களுடன் IAS IPS மற்றும் IIT மருத்துவ படிப்பு கனவுகளுடன் சைக்கிள்களில் செல்வது சர்வ சாதாரண காட்சி ..டாஸ்மாக் இல்லாத நகரம் …புத்த ஜைன மதங்களின் பிறப்பிடம் ..கிலோமீட்டர் கணக்கில் அகலமாக ஓடும் கங்கை …சாணக்கியன் பிறந்த மகதம் ..இப்படியெல்லாம் பெருமை பறைசாற்றும் நகரத்தை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக குறை சொல்வது சரியல்ல


Prasath
ஜூலை 06, 2025 13:52

புலம்ப வந்துட்டார்


சமீபத்திய செய்தி