உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இதுவே கடைசி: 5ம் முறையாக டாக்டர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தார் மம்தா!

இதுவே கடைசி: 5ம் முறையாக டாக்டர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தார் மம்தா!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள டாக்டர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ள, அம்மாநில அரசு இதுவே கடைசி முயற்சி எனக்கூறியுள்ளது.மேற்கு வங்க தலைநகர் கோல்கட்டாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஆக.,09 ம் தேதி பயிற்சி பெண் டாக்டர் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டை அதிர வைத்தது. பாதிக்கப்பட்ட டாக்டருக்கு நீதி கேட்டு அம்மாநிலத்தில் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பேச்சுவார்த்தை நடத்த இரு தரப்பிலும் குழு அமைக்கப்பட்டது. ஆனால், பேச்சுவார்த்தைக்கு முதல்வர் மம்தா நேரடியாக வர வேண்டும். டிவியில் நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் என டாக்டர்கள் கோரிக்கை விடுத்தனர். முதல்வர் நேரடியாக பங்கேற்பார் என அறிவித்த மாநில அரசு, நேரடி ஒளிபரப்பு செய்ய முடியாது என அறிவித்தது. இதனால், இழுபறி ஏற்பட்ட நிலையில், அவர்களை நேரில் சந்தித்து மம்தா பேசினார். அப்போதும் முடிவு ஏற்படாததால் டாக்டர்களின் போராட்டம் தொடர்கிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=upoqx7ol&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், போராட்டக்குழுவினருக்கு, தலைமை செயலாளர் மனோஜ் பான்ட் அனுப்பிய இமெயிலில் கூறியுள்ளதாவது: உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி டாக்டர்கள் தங்களது பணியை துவக்க வேண்டும். முதல்வருக்கும், போராட்டக் குழுவினருக்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு அழைப்பது இது 5வது முறை மற்றும் கடைசியும் ஆகும். இதற்கு முன்பு நாம் பேசியபடி, முதல்வரை அவரது இல்லத்தில் சந்தித்து திறந்த மனதுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இது வீடியோ பதிவு செய்யப்படாது. நேரடி ஒளிபரப்பும் செய்ய முடியாது. இதில் நல்ல முடிவு எடுக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

Venkataraman
செப் 16, 2024 23:51

விடியோ எடுக்ககூடாது என்று மம்தா சொல்லும்போதே தெரிகிறது, அவர் ஏதோ உண்மைகளை மறைக்கப் பார்க்கிறார் என்று. அவர்களை தனியாக அழைத்து மிரட்டி பார்க்கலாம் என்ற எண்ணம் இருக்கலாம்.


nagendhiran
செப் 16, 2024 20:07

இப்ப தெரியுதா மம்தா?


முருகன்
செப் 16, 2024 18:52

இவர்களின் நோக்கம் வேறு இனிமேல் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்க மம்தா பானர்ஜி அவர்கள் முயற்ச்சி செய்ய வேண்டும்


Sriniv
செப் 16, 2024 17:28

If there is no live tele, what is the Govt trying to hide ? Clearly, they dont want proof of said something. No live tele, no talks. Docs should not buckle to the threat of the Govt.


Sudha
செப் 16, 2024 16:50

ஒரு மாநிலத்தில் ஆயிரம் துறைகள் இருக்கும் ஒவ்வொரு துறையும் தமது பிரச்சனை க்காக முதலவர் படாவி விலக வேண்டும் என்று கூவுவது தான் ஜனநாயகம்?மம்தாவின் கட்சியினர் அல்லது அவரது சொந்த அலட்சியமாக இந்த பாதகச்செயலுக்கு காரணமா? இதே உபி யில் நடக்கவில்லை? 108 குழந்தைகள் கோரக்பூரில் இற ந்தார்களே 150 பேர் பாலம் இடிந்து குஜராத் மாநிலத்தில் இறந்தார்கள் நமது தமிழகத்தை இதே பாதக செயல்களும் கள்ள சாராய சாவுகள் பயங்கர வாத நிகழ்வுகள்- இதற்கு முதலவர் பதவி விலக தயாரா? என்ன பொறுத்தவரை இது அப்பட்டமான பெண்ணின காழ்ப்புணர்ச்சி பிஜேபி யிடம் அதிகம் உள்ள குணம் விரைவில் சுப்ரீம் கோர்ட் இது போன்ற கேள்விகள் எழுப்பி அனைத்து மாநிலங்களையும் உசுப்ப வேண்டும்


vijai Mathur
செப் 16, 2024 17:07

ஜால்ரா அடிக்காத


ஆரூர் ரங்
செப் 16, 2024 18:27

INDI கூட்டணியிலுள்ள கம்யூனிஸ்டு காங்கிரசும் கூட வங்காளத்தில் போராட்டம் நடத்துகிறார்களே. அவர்களுக்கும் உள்நோக்கம் உள்ளதா?


பேசும் தமிழன்
செப் 16, 2024 19:16

ஏம்பா..... இப்படி முட்டு கொடுக்க கூடாது.... விபத்தும்.... இது போன்ற இழி செயலும்..... அதை மறைக்க அவர்கள் செய்த தகிடுதத்தங்கள்....இரண்டும் ஒன்றா ???....உங்கள் பார்வையில் ஏதோ கோளாறு இருக்கிறது.


nagendhiran
செப் 16, 2024 20:11

விபத்திற்கும் கற்பழிப்பும் அதுவும் மருத்துவமனையில் நடந்ததையும்? அதை மறைக்க முயர்ச்சி நடந்ததையும்? நிகழ்வு நடந்து பல மணி நேரம் கழித்து பெற்றோர்களிடம் தெரிவித்தது? தற்கொலைனு சொன்னது? தடயங்களை போராட்டம் பெயரில் அழித்தது? பல வழக்குகளில் உள்ளவனை காவல் நண்பனாக்கியது? குற்றம் தடுக்க தவறிய மருத்துவமனை தலைவரை? பெயரலவில் மாற்றி? பிரச்சனை முற்றிய பிறகு கைது செய்தது? இதெல்லாம் வேற எங்க நடந்ததுனு சொல்லு


rama adhavan
செப் 16, 2024 20:26

ஐயா பிறகு எதற்குத்தான் ஆள வேண்டும்? மாநில தலை நகரில், கொடூர கற்பழிப்பு, கொலை, மூடி மறைக்க சதி, மிரட்டல், இதயாதி. இதற்கு மேல் என்ன வேண்டும்? ஓ, 67 நபர் கள்ள சாராயத்தில் இறந்தது, ஆனால் பதவி விலகள் இல்லை, இது ஆட்சிக்கு முறை அல்ல. அராஜகம்.


saravan
செப் 16, 2024 16:20

இதனை வருடம் ஒரு இரக்கமில்லாத ஒரு பெண்மணிக்கு வாக்களித்ததை நினைத்து மக்கள் இனிவராது திருந்துவார்களா ?


Santhakumar Srinivasalu
செப் 16, 2024 15:07

இதுவே கடைசி. மருத்துவ மாணவர்கள் பேச்சு வார்த்தைக்கு போகலேன்னா அவரோட முதல்வர் பதவியை ராஜினாமா பன்னிடுவாங்க மாணவர்களே!


சமூக நல விரும்பி
செப் 16, 2024 14:54

வீடியோ பதிவு டிவி ஒளிப்பதிவு இரண்டும் கிடையாது என்றால் அது மக்களையும் மருத்துவர்களையும் ஏமாற்றும் செயல்


GMM
செப் 16, 2024 14:52

குற்றவாளியிடம் நீதிபதி பேச்சு சரியா ?


Sck
செப் 16, 2024 14:31

ஜுனியர் டாக்டர்களும் அடாவடிதனத்தில் ஈடுபடாமல் நல்ல முடிவு எடுக்க அரசுடன் சுமுகமாக பேச்சு வார்த்தை நடத்த வேண்டும்.


செல்வேந்திரன்,அரியலூர்
செப் 16, 2024 15:01

தீதி கூடிய விரைவில் கங்காவா மாறுவார் என்று அனைவராலும் எதிர்பார்க்க படுகிறது.


Barakat Ali
செப் 16, 2024 15:33

பிரச்னை பற்றிய புரிதல் இல்லாமல் கருத்தெழுதாதீர் .....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை