உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ‛வயநாடு தொகுதியை கலக்க வருகிறது திப்பு அரசியல்

‛வயநாடு தொகுதியை கலக்க வருகிறது திப்பு அரசியல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வயநாடு: வயநாடு தொகுதி எம்.பி.யாக நான் வெற்றி பெற்றால்இத்தொகுதியை சேர்ந்த சுல்தான் பத்தேரி நகரின் பெயரை மீண்டும் கணபதிவட்டம் என பெயர் மாற்றம் செய்வேன் என பா.ஜ., வேட்பாளராக போட்டியிடும் கேரள மாநில பா.ஜ., தலைவர் சுரேந்திரன் தெரிவித்தார். கேரளா வயநாடு தொகுதியில் காங். வேட்பாளராக ராகுல், பா.ஜ., வேட்பாளராக சுரேந்திரன், கம்யூ., வேட்பாளராக ஆனி ராஜா ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதனால் இங்கு மும்முனை போட்டி நிலவுகிறது. இந்நிலையில் பா.ஜ. வேட்பாளரான சுரேந்திரன் தெரிவித்துள்ளதாவது, வயநாடு தொகுதி எம்.பி.யாக என்னை வெற்றி பெற செய்தால் இத்தொகுதியை சேர்ந்த சுல்தான் பத்தேரி நகரின் முந்தைய பெயரான கணபதி வட்டம் என மீண்டும் பெயர் மாற்றம் செய்வேன். 18-ம் நூற்றாண்டில் மைசூரை ஆண்ட திப்புசுல்தான் 1798-ல் இங்கு வடக்கு கேரளாவின் மலபாரை கைப்பற்றி கணபதி வட்டம் பெயரை சுல்தான் பத்தேரி என பெயர் மாற்றினர். இங்கு கோட்டையும் கட்டப்பட்டுள்ளது. என்னை வயநாடு எம்.பி.யாக வெற்றி பெற செய்தால் சுல்தான் பத்தேரி என்ற பெயரை நீக்கி விட்டு மீண்டும் முந்தைய பெயரான ‛கணபதி வட்டம்' என மாற்றம் செய்ய முன்னுரிமை அளிப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.முன்னதாக கர்நாடகாவில் திப்புசுல்தான் பிறந்த நாளை கொண்டாட பா.ஜ., எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் காங்., கொண்டாட முனைந்தது. இந்த திப்பு அரசியல் கேரளாவின் வயநாடு தொகுதிக்கு பரவி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Barakat Ali
ஏப் 12, 2024 14:28

மெட்ராஸ் -ஐ சென்னைன்னு கட்டுமரம் மாத்திச்சு மக்களின் வறுமை போயிருச்சா ??


Velan Iyengaar
ஏப் 12, 2024 08:01

பெயரை மாத்திட்டா மக்களுக்கு பசியாறிடுமா ?? ஏழ்மை பறந்து போய்டுமா ?? இவனுங்க எந்த காலத்துல ஆக்கபூர்வமான அரசியல் பேசி இருக்கானுனுங்க ??? இதே தான் வேலை கேரளா மக்கள் அறிவார்ந்த மக்கள் நல்லா பாடம் கற்று கொடுப்பார்கள்


Kasimani Baskaran
ஏப் 12, 2024 06:26

வெறியாட்டம் போட்ட திப்பு சுல்தானை போற்றி புகழ்வது இந்தியாவில் மட்டுமே நடக்கக்கூடிய ஒன்று


Rpalnivelu
ஏப் 11, 2024 23:29

திப்பு கொன்று குவித்த இந்து மக்கள் ஏராளம் ஏராளம் வரலற்று ஆய்வாளர்கள் இவர் மிகக் கொடூரமானவர் யென்ற இவர விவரிக்கிறார்கள்


மேலும் செய்திகள்













அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை