உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / "இந்த 7 கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்": பா.ஜ.,விடம் கேட்கிறார் கார்கே

"இந்த 7 கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்": பா.ஜ.,விடம் கேட்கிறார் கார்கே

புதுடில்லி: எங்களிடம் 7 கேள்விகள் உள்ளன. இதற்கு பா.ஜ., அரசு பதில் சொல்ல வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் கார்கே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ரயில் விபத்து ஏற்படும் போதெல்லாம், தற்போதைய ரயில்வே அமைச்சர் கேமராக்களுடன் சம்பவ இடத்திற்கு வந்து எல்லாம் சரியாகிவிட்டது என சமாளித்து விடுகிறார். எங்களிடம் 7 கேள்விகள் உள்ளன. இதற்கு பா.ஜ., அரசு பதில் சொல்ல வேண்டும். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=leh48y2r&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0* ஒடிசா மாநிலம் பாலாசோரில் நடந்த விபத்துகளுக்குப் பிறகு, அதிக விளம்பரப்படுத்தப்பட்ட “கவச்” பாதுகாப்பு கருவியை ஏன் ஒரு கிலோமீட்டர் கூட பொறுத்த நடவடிக்கை எடுக்கவில்லை..* ரயில்வே துறையில் சுமார் 3 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் ஏன் நிரப்பப்படவில்லை?.* 2017ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை மட்டும் 1,00,000 பேர் ரயில் விபத்துகளில் இறந்துள்ளனர். இதற்கு யார் பொறுப்பேற்பார்கள்?* ஆள் பற்றாக்குறையால் லோகோ பைலட்டுகள் நீண்ட நேரம் வேலை செய்வதே விபத்துகள் அதிகரித்து வருவதற்கு முக்கியக் காரணம் என ரயில்வே வாரியமே சமீபத்தில் ஒப்புக்கொண்டுள்ளது. பிறகு ஏன் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை?.* பொதுவான ஸ்லீப்பர் வகுப்பில் ரயிலில் பயணம் செய்வது ஏன் மிகவும் விலை உயர்ந்தது?* ஸ்லீப்பர் கோச்சுகளின் எண்ணிக்கை ஏன் குறைக்கப்பட்டது?*கடந்த ஆண்டு 2.70 கோடி பேர் சீட் பற்றாக்குறையால் டிக்கெட்டை ரத்து செய்யதுள்ளனர். இதற்கு ரயில் பெட்டிகளின் எண்ணிக்கையை குறைத்தது தான் காரணம்.* பா.ஜ., அரசு 2017-18 ஆம் ஆண்டு பொது பட்ஜெட்டுடன் ரயில்வே பட்ஜெட்டை இணைத்ததா?.ரயில்வே துறையில் பா.ஜ., அரசு செய்துள்ள குற்றங்களை, தன்னை புகழ்ந்து கொள்வதன் மூலம் மாற்ற முடியாது. இவ்வாறு கார்கே கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 33 )

Swaminathan L
ஜூன் 19, 2024 14:27

பார்ஸிகள் பண்டைய பெர்ஷியாவின் ஜொராஷ்ட்ர மதத்தைச் சார்ந்தவர்கள். திரு. ஃபெரோஸ் ஜஹாங்கிர் காண்டி Ghandy, தனது பெயரை காந்தி காந்தி என் மாற்றம் செய்து கொண்டார் என்ற விபரம் பலருக்கும் தெரியும். பார்ஸிகள் இந்துக்களோ, இஸ்லாமியரோ கிடையாது.


Jegan Babu
ஜூன் 19, 2024 12:56

ஹாய்


sundar
ஜூன் 19, 2024 08:49

Let Kharge direct his scamgress government in Karnataka to withdraw taxes imposed on fuel to fund freebies.


grg
ஜூன் 19, 2024 07:26

i dont know whether what mr karghe says is true or not. bjp people may say they are lies. but why not parliament enact a law whereby if a law maker makes false allegations and baseless allegations - he should be barred from coning elections for 10 years or so and also a heavy monetary punishment. our country needs very severe punishments. they can take lot of things from sharia also.


grg
ஜூன் 19, 2024 07:23

பெரோஸி காந்தி உண்மை பெயர் பெரோஸ் ஜெஹாங்கிஹிர் . பார்சி .


narayan
ஜூன் 18, 2024 21:56

கார்கேக்கு ஒரே கேள்வி 8500ரூவாய் பொய்யான சொன்னதுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் அதன் பின் காங்கிரஸ் கட்சியில் இருந்து மாத சந்தாவாக பத்திரம் கொடுத்தவர்களுக்கு கொடுக்கவும் இதை செய்துவிட்டு மீண்டும் கேள்வி கேட்க வேண்டும்


தாமரை மலர்கிறது
ஜூன் 18, 2024 18:54

ரயில் விபத்துகளை தடுக்க தனியாரிடம் விடுவதே நல்லது. டிக்கெட் விலை குறையும். போட்டி ஏற்படும். தரம் உயரும். அதானி ரயில்வேயை சிறப்பாக இயக்குவார்.


rsudarsan lic
ஜூன் 18, 2024 18:47

நான்கு ஆண்டுகளில் ஒரு லட்சம் உயிர்களா? நிஜமா? ஸ்லீப்பர் பேட்டிகள் குறைந்து 3ஏ பெட்டிகள் அதிகரித்து இருப்பது போல் தெரிகிறது. வேலை வாய்ப்பு? அதுவும் ரயில்வே இரு மடங்கு பெருகியுள்ள நிலையில்? தேவை ஓர் உண்மை விளம்பி


M S RAGHUNATHAN
ஜூன் 18, 2024 18:32

கார்கே அவர்களுக்கு ஒரு கேள்வி. இந்திரா குடும்பத்திற்கு காந்தி என்ற surname எப்படி வந்தது ? எதற்காக, எந்த அடிப்படையில் அவர்கள் பெயருக்கு பின்னால் காந்தி என்று போட்டுக் கொள்ளுகிறார்கள். இந்த ஒரு கேள்விக்கு கார்கேயோ அல்லது யாராவது மூத்த காங்கிரஸ் தலைவரோ பதில் சொல்லட்டும். இல்லை என்றால் இவர்கள் அந்த குடும்பத்தின் fraud activity க்கு துணை போகிறார்கள் என்று அர்த்தம்.


Vathsan
ஜூன் 18, 2024 20:22

கொஞ்சம் பொது அறிவை வளர்த்தால் அதற்கு விடை தெரியும். வாட்ஸாப்ப் யூனிவெர்சிடியில் படிப்பதை நிறுத்துப்பா . இந்திரா நேரு பெரோஸ் காந்தி என்ற பார்சியை மணமுடித்த பின் இந்தியா பாரம்பரியப்படி தன பெயருக்கு பின்னால் தன கணவர் பெயரை சேர்த்துக்கொண்டார். இதெல்லாம் போலியாக தேசியம் பேசுபவர்களுக்கு தெரிய போவதில்லை. இன்னும் சில தற்குறிகள், பெரோஸ் காந்தி ஒரு இஸ்லாமியர் என்று கட்டுக்கதைகளை பரப்புவது என்ன நோக்கத்துக்கு என்று அவர்களது மனசாட்சிக்கே விட்டு விடுகிறேன் . அரவிந்தா உனக்கு இப்போதாவது புரிந்ததா?


SANKAR
ஜூன் 18, 2024 21:03

she is the wife of Feroz GANDHI


நிக்கோல்தாம்சன்
ஜூன் 18, 2024 18:26

கருநாடகவில் எல்லாருக்கும் ரூ 1 லட்சம் , மற்றும் மாதம் 8500 கொடுப்பீர்களா ? அல்லது சம்பள பணத்தையாவது கொடுப்பீர்களா ? இதுநாள் வரை ஐடி ஊழியர்கள் தான் லே ஆப் செய்யப்பட்டுள்ளனர் , கருநாடகவிலோ அரசு ஊழியர்களும் லே ஆப் செய்யப்படவுள்ளனர் , இது குறித்து கார்கே கூறுவானா ?


Vathsan
ஜூன் 18, 2024 20:24

மோடி எத்தனை வேலை வாய்ப்புக்களை உருவாக்கினார் ?


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை