உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பொங்கல் நாளில் அறிவிக்கப்பட்டு இருந்த யு.ஜி.சி. நெட் தேர்வு தள்ளி வைப்பு

பொங்கல் நாளில் அறிவிக்கப்பட்டு இருந்த யு.ஜி.சி. நெட் தேர்வு தள்ளி வைப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி; பொங்கல் நாளில் நடத்துவதாக அறிவிக்கப்பட்டு இருந்த யு.ஜி.சி. நெட் தேர்வு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும் ஜனவரி 15 ல் யு.ஜிசி. நெட் தேர்வுகள் நடத்தப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்து இருந்தது. பொங்கல் நாளில் தேர்வு என்பதால் தேதியை மாற்றக் கோரி முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் கோவி. செழியன் உள்ளிட்ட பலர் கடிதம் எழுதி இருந்தனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=69mit42o&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந் நிலையில், ஜன. 15ம் தேதி நடத்தப்பட இருந்த யு.ஜி.சி. நெட் தேர்வு தள்ளி வைக்கப்பட்டு உள்ளதாக தேசிய தேர்வுகள் முகமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தேர்வு எப்போது நடைபெறும் என்ற தேதி பின்னர் தெரிவிக்கப்படும் என்றும் தேசிய தேர்வுகள் முகமை கூறி உள்ளது. அதே நேரத்தில் ஜன.16ம் தேதி நடைபெறும் தேர்வுகள் திட்டமிட்டபடி நடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

aaruthirumalai
ஜன 14, 2025 00:23

அனைத்து செயல்களிலும் தொலைநோக்கு பார்வை அவசியம்.


V வைகுண்டேஸ்வரன்
ஜன 13, 2025 21:27

நல்ல முடிவு. சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நன்றிகள். பொங்கல் வாழ்த்துக்கள்.


vivek
ஜன 14, 2025 06:56

பெரிய VIP...வாழ்த்து சொல்லிட்டாரம் ....ஹி. ஹி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை