உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நெருங்குது மத்திய பட்ஜெட்: 21ல் அனைத்து கட்சி கூட்டம்

நெருங்குது மத்திய பட்ஜெட்: 21ல் அனைத்து கட்சி கூட்டம்

புதுடில்லி: மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 22ம் தேதி துவங்க உள்ள நிலையில், சபையை சுமுகமாக நடத்துவது பற்றி விவாதிக்க, வரும் 21ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.லோக்சபா தேர்தலுக்கு முன், பிப்., 1ல் இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதைத்தொடர்ந்து புதிய அரசு பதவியேற்றபின், நடப்பு, 2024 - 25 நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான கூட்டத்தொடர், வரும் 22ம் தேதி துவங்கி, ஆகஸ்ட் 12ம் தேதி வரை நடக்க உள்ளது. இதன்படி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட்டை, 23ம் தேதி தாக்கல் செய்ய உள்ளார். இதன் வாயிலாக, தொடர்ந்து, ஏழாவது முறையாக அவர் பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார். இந்த பட்ஜெட் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்தி முடிப்பது குறித்து விவாதிக்க, வரும் 21ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. பார்லி வளாகத்தில் நடக்கும் இந்த கூட்டத்தில் லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், முதல்முறையாக பங்கேற்க உள்ளார். இந்த கூட்டத்தை திரிணமுல் காங்., புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 1993ல் மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ., ஆட்சியின்போது, மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவராக மம்தா பானர்ஜி இருந்தார்.அப்போது நடந்த பேரணியில், 13 பேரை போலீசார் சுட்டுக்கொன்றனர். அவர்களின் நினைவாக, திரிணமுல் காங்கிரஸ் சார்பில் ஆண்டுதோறும் ஜூலை 21ல் பேரணி சென்று அஞ்சலி செலுத்துவது வழக்கம். இதன் காரணமாக அக்கட்சி உறுப்பினர்கள், அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க மாட்டார்கள் என கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

கங்கம்மா
ஜூலை 17, 2024 19:37

வெற்றிகரமா மூணாவது தடவையா கொல்லைப்புறமா வந்து அல்வா கிண்டுகிறார்.


S BASKAR
ஜூலை 17, 2024 11:30

பட்ஜெட்டுக்கு முன்னாடி அல்வா கிண்டுற பழக்கத்தை ஏற்படுத்திய அதி மேதாவியை எவ்வளவு பாராட்டினாலும் தகும்


ஆரூர் ரங்
ஜூலை 17, 2024 11:10

மக்களே அநாவசிய இறக்குமதிப் பொருட்களை வாங்குவதை நிறுத்துங்க. அப்கிரேட் என்ற பெயரில் அடிக்கடி மின்னணு சாதனங்கள் வாங்குவதை நிறுத்துங்கள். இல்லாவிடில் அன்னியச் செலாவணி மதிப்பு குறைந்து பட்ஜெட் துண்டு அதிகரிக்கும்.பின்னர் புலம்பிப் பயனில்லை.


M.COM.N.K.K.
ஜூலை 17, 2024 09:54

எத்தனையோ பட்ஜெட்டை நாங்கள் பார்த்துவிட்டோம் ஏழை மக்களுக்கு எந்த நன்மையையும் இருக்காது இதுதான் உண்மை. மேலும் நடுத்தர மக்களுக்கு கண்டிப்பாக ஏமாற்றமே வரும்.பண முதலாளிகளுக்கு நன்மைகள் கிடைக்கலாம் என நம்பலாம்.


Duruvesan
ஜூலை 17, 2024 11:09

கரெக்ட், எனக்கு லாபமா தான் இருக்கும்


Rajarajan
ஜூலை 17, 2024 08:57

இதற்கு எதற்கு அனைத்துக்கட்சி கூட்டம்? ஆளும் அரசு எடுக்கும் எந்த முடிவையும், எதிர்க்கட்சிகள் ஏற்க போவதில்லை. பிறகு எதற்கு வீணான தேநீர் செலவு? அது இருக்கட்டும். நமது பொருளாதார மேதை திரு. மன்மோகன் சிங்கை விடவா, இந்த அணைத்து கட்சியினர் பொருளாதார அறிவும், ஆற்றலும், திறமையும், அனுபவமும் உள்ளவர்கள்? அவர்தான் ஏற்கனவே, உலகளாவிய வர்த்தகத்தில் கையெழுத்து போட்டு, நாட்டின் தலையெழுத்தை நேர்மறையாக மாற்றி விட்டாரே. அந்த ஒப்பந்தப்படி, அத்தியாவசிய அரசு மற்றும் பொது துறைகளை தவிர, மற்றவற்றை தனியார்மயமாக்க வேண்டும் என்பது தானே நிபந்தனை. மேலும், அரசின் வருவாயில் பெரும்பகுதி, அரசு / பொதுதுறை ஊழியரின் சம்பளம், சலுகை மற்றும் இரவாக செலவுக்கே சென்றுவிடும்போது, எங்கிருந்து புது புது திட்டங்கள் மற்றும் முதலீடுகள் அரசினால் சாத்தியமாகும்? நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி என்ன ஆகும்? மேலும், வாங்கும் கடன் மேல் கடன், வட்டி மேல் வட்டி ஆகியவும், அரசின் பொருளாதார வெட்டி தேய்மான சலுகைகள் தானே. விலைவாசி மற்றும் வரிகள் மட்டும் நாட்டில் அனைவர்க்கும் பொதுவாக இருக்க, தனியார் மற்றும் திறமைசாலிகள் மற்றும் அரசு ஊழியருக்கு மட்டும் மென்மேலும் கூடுதல் சுமை தானே விதிக்கப்படுகிறது. நஷ்டத்தில் இயங்கும் அரசு / பொதுத்துறை போன்ற தேவையற்ற நிர்வாக வீண் சுமை மற்றும் அவர்களின் அதீத சம்பளம், ஓய்வூதியம், பஞ்சபடி, போனஸ் மற்றும் சலுகைகள் போன்றவற்றை ஈடுசெய்ய, பொதுமக்கள் மீது மேலும் மேலும் வரி மற்றும் கூடுதல் விலைவாசியை ஏற்றுவது, ஏற்றுக்கொள்ள முடியாத செயல். இது ஒரு கண்ணில் வெண்ணை மற்றும் மற்றொரு கண்ணில் சுண்ணாம்பு வைப்பதற்கு சமம். அரசு ஊழியரின் மற்றும் அவர்களின் குடும்ப வாக்கு வங்கிக்கு பயந்தே, எந்த ஆளும் மத்திய மற்றும் மாநில அரசுகள், நிர்வாக சீர்திருத்தத்தை எடுப்பதே இல்லை. உழைத்து வரி செலுத்த தனியார் ஊழியர், ஆனால் அதை அனுபவிக்க அரசு ஊழியரா ?? என்ன கொடுமை சார் இது. இந்த பட்ஜெட்டிலாவது இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வையுங்கள். நஷ்டத்தில் இயங்கும் அரசு / பொதுத்துறை நிறுவனங்களை மூடக்கூடாது, தனியாருக்கு கொடுக்க கூடாது என எந்த கட்சி வற்புறுத்துகிறதோ, அவர்களையே இதை வாங்கி நடத்த சொல்லுங்கள். அல்லது அந்த நஷ்டத்தை அவர்களை ஈடு செய்ய சொல்லுங்கள். பிறகு பாருங்கள். பின்னங்கால் பிடரியில் பட தப்பித்து ஓடுவதை. இதை புலம்பல் என நக்கல் செய்வதை விடுத்து, இதில் கொடுத்துள்ள சாராம்சத்தை செயல்படுத்தினால், இந்தியா அடுத்த ஐந்து வருடங்களில் பொருளாதாரத்தில் மிக முன்னேறிவிடும். ஆனால், பூனைக்கு யார் மணி கட்டுவது ??


ஆரூர் ரங்
ஜூலை 17, 2024 11:06

அரசு ஊழியர்கள் சங்கங்கள் சம்பள உயர்வுக்காக பிளாக் மெயில் செய்வதாக ஆளும் தரப்பு முனகும் நிலை புதிதில்லை. நிதீஷ் குமார் அதிகாரிகள் காலில் விழ முயன்றதும் இதனால்தான். அரசு ஊழியர்கள் மீது கடுமை காட்டிய MGR, ஜெயா பட்டபாடு கொஞ்சமா?


Barakat Ali
ஜூலை 17, 2024 08:21

அல்வா கிண்டி மக்களுக்கு கொடுங்க ......


Duruvesan
ஜூலை 17, 2024 09:07

ஆக மக்களின் விரோத பட்ஜெட் என விடியல் அறிக்கை விடுவார் . விடியல் வழியே இல்லாம பால் மின்சார கட்டணம் ஏத்துவாரு


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை