உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஸோஹோவுக்கு மாறினார் மத்திய அமைச்சர் நட்டா

ஸோஹோவுக்கு மாறினார் மத்திய அமைச்சர் நட்டா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, சிவராஜ் சிங் சவுகானைத் தொடர்ந்து மத்திய அமைச்சரும், பாஜ தலைவருமான நட்டாவும் சுதேசி தயாரிப்பான ஸோகோ நிறுவனத்தின் இமெயிலுக்கு மாறிவிட்டதாக அறிவித்துள்ளார்.உள்நாட்டு தயாரிப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையைத் தொடர்ந்து நமது நாட்டில் உருவான ஸோகோ நிறுவனத்தின் இமெயில், அரட்டை செயலி மற்றும் அதன் தயாரிப்புகள் இந்தியளவில் கவனத்தைப் பெற்றுள்ளது. ஏராளமானோர் அதனை பயன்படுத்த துவங்கி உள்ளனர். இதனால், அந்த செயலிகளின் பதிவிறக்கம் லட்சக்கணக்கில் அதிகரித்து செல்கிறது. சமீபத்தில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்வும் ஸோகோவுக்கு மாறியதாக அறிவித்து இருந்தார். இதனைத் தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, சிவராஜ் சிங் சவுகான் ஆகியோரும் ஸோகோ இமெயிலுக்கு மாறியதாக கூறியிருந்தனர். இந்நிலையில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் நட்டாவும் ஸோகோ இமெயிலுக்கு மாறியுள்ளதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: வணக்கம். எனது இமெயில் தொடர்புகளுக்கு, உள்நாட்டு தயாரிப்பான ஸோகோ மெயிலுக்கு மாறிவிட்டேன் என்பதை அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். எனது புதிய இமெயில் முகவரி:Jpnadda. Zohomail.In. வருங்காலத்தில் இந்த இமெயில் முகவரியை பயன்படுத்துங்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் நட்டா தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Priyan Vadanad
அக் 14, 2025 00:27

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அனைத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்பதில் மாறுபட்ட கருத்து இருக்கமுடியாது. இருந்தாலும் நம்பகத்தன்மை என்பது மிகவும் முக்கியம். இதை உருவாக்கியவர் யார்? அவரது பின்புலம் என்ன? ஏதாவது குறிப்பிட்ட இயக்கத்தில் இருந்தாரா? அதன் பாதிப்பு இவரிடம் உள்ளதா? பயனாளர்களின் தனிப்பட்ட விஷயங்கள் திருடுபோகக்கூடாதல்லவா? பாஜாக்க மந்திரிகள் மட்டுமே இதை ஏற்று வருகிறார்கள் என்னும்போது கொஞ்சம் விவரங்கள் தேவைதான்.


KR india
அக் 13, 2025 22:19

நம்பகத்தன்மையற்ற வெளிநாட்டு ஈமெயில்-க்கு பதிலாக, உள்நாட்டு தயாரிப்பான ஈமெயில் வசதி வேண்டும் என்று பல வருடங்களாக தொடர்ந்து, வெவ்வேறு தளங்களில் கருத்து எழுதி வந்துள்ளேன். இப்பத்தான், நம்மவர்களுக்கு சற்று எச்சரிக்கை முழிப்பு வந்துள்ளது. எனக்கு, பல வருடங்கள் முன்பே வந்து உஷாராகி விட்டேன்.


சமீபத்திய செய்தி