உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஊருக்குள் வந்தது இன்னொரு ஓநாய் கூட்டம்; உ.பி., கிராமங்களில் தொடரும் அச்சுறுத்தல்!

ஊருக்குள் வந்தது இன்னொரு ஓநாய் கூட்டம்; உ.பி., கிராமங்களில் தொடரும் அச்சுறுத்தல்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லக்னோ: மனித வேட்டையாடிய ஓநாய்களில் ஒன்று மட்டுமே பிடிபடவில்லை என உ.பி., வனத்துறை எண்ணியிருந்த நிலையில், இன்னொரு கூட்டம் ஊருக்குள் வந்தது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.உத்தரபிரதேச மாநிலத்தில், பஹ்ரைச் மாவட்டம், வனப்பகுதியை ஒட்டிய கிராம மக்கள் எல்லாம் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக அச்சத்துடன் வசிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். வனத்தில் இருக்கும் ஓநாய்கள், இரவு நேரங்களில் ஊருக்குள் வந்து மனிதர்களை தாக்குவதும், கால்நடைகளை கொல்வதுமாக இருப்பதே இதற்கு காரணம்.ஓநாய்களின் தாக்குதலால் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர். 35 பேர் காயம் அடைந்துள்ளனர். இதையடுத்து ஆபரேஷன் பேடியா என்ற ஓநாய்களை பிடிக்கும் பணியை மாநில வனத்துறை தொடங்கியது. தாக்குதல் நடத்திய 6 ஓநாய்களில் 5 ஓநாய்களை வனத்துறையினர் பிடித்துவிட்டனர். ஒரு ஓநாய் மட்டும் டிமிக்கி கொடுத்து வருகிறது. அதை பிடிக்கவும் தீவிர கண்காணிப்பில் வனத்துறையினர் உள்ளனர்.இந்நிலையில் மற்றொரு ஓநாய் கூட்டம் ஊருக்குள் புதிதாக வந்திருப்பது, கிராம மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

மீண்டுமா?

தனது பண்ணை வீட்டின் அருகே நான்கு ஓநாய்கள் காணப்பட்டன என பா.ஜ., வை சேர்ந்த சவுத்ரி கூறி பகீர் கிளப்பி உள்ளார். அவர் ஆங்கில செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டி: பண்ணை வீட்டின் அருகே நான்கு ஓநாய்கள் காணப்பட்டன. அவை புதிய ஓநாய்கள். அவற்றில் ஒன்று நொண்டியாக இருந்தது. இந்த இடத்திற்கு அருகில் ஓநாய்களின் குகை உள்ளது. மழை மற்றும் ஆறுகளின் நீர்மட்டம் உயர்வதால், வன விலங்குகள் அடிக்கடி வெளியேறுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

வனத்துறை விளக்கம்!

இது குறித்து தலைமை வனப்பாதுகாவலர் சிங் கூறி இருப்பதாவது; புதிதாக ஓநாய் கூட்டங்கள் கிராமத்திற்கு வந்ததாக தெரியவில்லை. அவற்றைப் பிடிப்பதற்கான முயற்சிகளும் நடந்து வருகிறது. தெஹ்சில் ராம்கான் பகுதியில் உள்ள சில கிராமங்களில் ஓநாய்கள் காணப்படுவதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன. இருப்பினும், மனித வேட்டையாடும் ஓநாய் அவற்றில் இருந்ததா என்பது உறுதியாகத் தெரியவில்லை.அவற்றைப் பிடிக்க எடுக்கும் முயற்சிகள் புதிய சிக்கலை உருவாக்கலாம். அவை மனிதர்களைத் தாக்கத் துவங்கிவிடும். ஓநாய்கள் காணப்பட்ட பகுதியை நாங்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். முழுமையான ஆய்வுக்கு பின்னரே இவை எந்த வகையான ஓநாய்கள் என்பதை உறுதியாகக் கூற முடியும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

J.Isaac
செப் 19, 2024 21:51

இந்தியாவின் எந்த மாநிலத்திலும் நிகழாத அரிய அதிசயம்.


என்றும் இந்தியன்
செப் 19, 2024 16:35

டாஸ்மாக்கினாட்டில் பலப்பல கூட்டம் இருந்து, அதுவும் ஆட்சி வேறு புரிகின்றதே


Barakat Ali
செப் 19, 2024 16:17

இன்னொரு ஓநாய் கூட்டம் புகுந்தது ........ ஒரு கழக ஆட்சி நடந்து முடிந்து இன்னொரு கழக ஆட்சி நடப்பதை மூன்றாண்டுகளுக்குப் பிறகு சிம்பாலிக்கா சொல்றாங்க .......


Narayanan Muthu
செப் 19, 2024 19:54

உபியில் ஓநாய்கள் அதிகம்தான் என்பது தெரிந்த விஷயம் தானே


நிக்கோல்தாம்சன்
செப் 19, 2024 16:10

தமிழக சினிமாவில் சேர சொல்லுங்க , ஏற்கனவே வங்கதேசத்தில் இருந்து கூட்டம் கூட்டமா வந்துகிட்டு இருக்குங்க , அதுவும் தமிழகம் நோக்கி வரும் ஓநாய் கூட்டத்தை கண்டு களிப்பில் இருக்காங்க சில ஈனப்பிறவிங்க , நீங்க வேற


Sivagiri
செப் 19, 2024 16:02

இஸ்ரேல் வேலை மாதிரி இங்க இட்டாலி வேலையா irukkumo


Narayanan Muthu
செப் 19, 2024 19:57

ஆட தெரியாதவளுக்கு கூடம் கோணலா இருக்கு என்பது மாதிரி உங்களின் கருத்து.


venugopal s
செப் 19, 2024 15:02

இவைகளுக்கு எதிராக மாநில அரசு புல்டோசர்களை பயன் படுத்தலாமே!முடியாதோ?


sridhar
செப் 19, 2024 14:21

ஓநாய் என்றால் ஆங்கிலத்தில் ஓdog தானே .


P. VENKATESH RAJA
செப் 19, 2024 14:10

ஓநாய்கள் கூட்டத்தை எப்போது விரட்டி அடிப்பது என்றே தெரியவில்லை


சமீபத்திய செய்தி