உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உலகின் மிக நீண்ட ரயில் பாலத்தில் வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம் வெற்றி

உலகின் மிக நீண்ட ரயில் பாலத்தில் வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம் வெற்றி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜம்மு காஷ்மீர்: உலகின் மிக நீண்ட ரயில் பாலமான செனாப் பாலத்தில் வந்தே பாரத் ரயிலின் முதல் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது. காஷ்மீர் பள்ளத்தாக்கை நாட்டின் பிற ரயில்வே சேவையுடன் இணைக்கும் உதாம்பூர் - ஸ்ரீநகர் - பாராமுல்லா ரயில் இணைப்பு திட்டத்தை மத்திய அரசு துவக்கியது. இதன் ஒரு பகுதியாக, காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் உள்ள செனாப் ஆற்றின் மீது ரயில் பாலம் கட்டப்பட்டுள்ளது. இது பிரான்சில் உள்ள ஈபில் கோபுரத்தை விட 115 அடி அதிக உயரத்தில் கட்டப்பட்டுள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=jyos1hff&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த செனாப் பாலத்தில் முதல்முறையாக வந்தே பாரத் ரயிலின் சோதனை ஓட்டம் இன்று வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது. ஸ்ரீ மாதா வைஷ்ணவி தேவி கத்ரா ரயில் நிலையத்தில் இருந்து ஸ்ரீநகர் வரையில் இந்த சோதனையாக மேற்கொள்ளப்பட்டது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் நிலவு குளிர்ச்சியான காலநிலைக்கு ஏற்ப ரயில் பெட்டிகள் உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.ஏற்கனவே, இந்த ரயில் பாலத்தின் மீது, சங்கல்தான் - ரியாசி இடையே ரயில் சோதனை ஓட்டத்தை மத்திய அரசு வெற்றிகரமாக நடத்தி காட்டியது குறிப்பிடத்தக்கது. சாலை போக்குவரத்தை மட்டுமே நம்பியிருக்கும் காஷ்மீர் பள்ளத்தாக்கு மக்கள், குளிர்காலத்தில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டால், வாகனங்களை இயக்க முடியாத சூழல் உண்டாகும். தற்போது, செனாப் பால ரயில்வே திட்டத்தின் மூலம், அவர்களுக்கு மாற்று வழி உருவாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

M Ramachandran
ஜன 25, 2025 18:06

நம் இந்தியா பல உலக சாதனைகள் புரிந்து வருகிறது. இதை சாதாரண பாலமல்ல உயரமான இடத்தில் இரு கணவாய் நடுவில் ஓடும் ஆற்றின் மேல் செங்குத்தான தூண்கள் பாறையின் மேல் கட்டப்பட்டுள்ள பாலம். இவ்விடத்திற்கு கட்டுமான தளவாடங்கள் கொண்டு செல்வதில் உள்ள கஷ்டங்கள் மற்றும் உயரத்தில் வேலை செய்யும் பணியாட்கள் உயிர் முதலியன எண்ணி பார்க்க வேண்டும். நம் ICF தயாரித்துள்ள உலக தரமிக்க அதுவும் காஷ்மீர் சூழ்நிலைக் கேற்ப தயாரிக்கப்பட்ட ரயில் பெட்டிகள் நிச்சயம் போற்றுதற்குரியது.


M Ramachandran
ஜன 25, 2025 17:48

Pats, Kongunadu, Bharat, ஹிந்துஸ்தான் உங்களுக்கு அங்கு பட்ட கஷ்டங்கள் தெரிய வாய்ப்பில்லை.தென்கோடி மூலையில் உட்கார்ந்து அழுவதில் பயனில்லை. முட்டை இடும் கோழிக்கு தான் வலி தெரியும். உலக சாதனை புரிந்தது அதன் உச்ச கட்ட பிரச்னைகள் தெரிய வாய்பில்லை. கர்நாடக கொங்கன் ரயில்வேபாதையை போடும் போது எவ்வளவு பிரச்சனைகள். அதில் பனி புரிந்த வல்லுநர்களுக்கு தான் தெரியும் அதில் ஈடு பட்டிருந்த ஸ்ரீதர் தலமை பொறியாளர் இரவு பகல் பாராமல் வேலையில் ஈடுபட்டு உடனுக்குடன் பிரச்சனைகளை அணுகி மேலிடத்து உதவியும் பெற்று வேலை நடந்தது. அது திட்டதை முடிக்க முடியுமா என்ற கேள்வியும் எழுந்தது. நிறைய சுரங்க வழி பாதைகள். சுரங்கம் தோண்டுவதில் பிரச்சனை. கெட்டியான பாறைகள் அல்ல.பொடிந்து விழுந்து கொண்டே இருக்கும். நிறைய ஆற்று பால கட்டுமானங்கள்.


sankaranarayanan
ஜன 25, 2025 17:40

நமக்கு எட்டு வழிச்சாலை வேண்டாம் ராமேஸ்வரம் தனுஷ்கோடி ரயில் மயமாக்க வேண்டாம் இன்னும் பல பல திட்டங்கள் வேண்டாம் வேண்டாம் என்ற வரிசையில் உள்ளன அவைகள் எல்லாமே வடக்கே சென்று மக்களுக்கு பயன்பட்டு வருகின்றன திதுதான் திராவிட மாடல் அரசின் வெற்றி பயணம்


Pats, Kongunadu, Bharat, Hindustan
ஜன 25, 2025 14:42

ஒரு முக்கியமான செய்தி விரைவில் வர இருக்கிறது. கன்னியாகுமரி - ஶ்ரீநகர் இடையே நேரடி ரயில் போக்குவத்து துவங்க இருக்கிறது. நாம் பயணிக்கிறோமோ இல்லையோ, நம் அனைவரின், நெடுநாளைய கனவு நிறைவேற இருக்கிறது. இந்த மகிழ்ச்சியான செய்தி, விரைவில்...


V வைகுண்டேஸ்வரன்
ஜன 25, 2025 13:43

இதில் என்ன செய்தி இருக்கிறது? ஒரு நாளைக்கு சராசரி 50 லிருந்து 60 ரயில் பாதைகள் சீரமைக்கப்பட்டு சோதனை ஓட்டங்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. ரயில்வே ட்ராக் இன்ஸ்பெக்ஷன் டிபார்ட்மென்ட் டின் வேலையே இது தான். வந்தே பாரத் என்று சொல்லி ரயில் பயணங்களையும், இந்த அரசு, நடுத்தர வர்க்கத்தினருக்கு எட்டாக்கனி ஆக்கிக் கொண்டிருக்கிறது.


ஆரூர் ரங்
ஜன 25, 2025 17:06

அப்போ காங்கிரஸ் அரசு இந்தியன் ஏர்லைன்ஸ், ஏர் இந்தியா துவக்கியது ஏழைகளின் பயண வசதிக்காக?


guna
ஜன 25, 2025 18:46

வைகுண்டம் எப்பவுமே டிக்கெட் வாங்காம திருட்டு இரயில் ல தான் போவரு....அவருக்கு எல்லாமே அத்துப்படி


Ramona
ஜன 25, 2025 13:36

இவ்வளவு முன்னேறிய மாநிலமா மாறாமல் பார்த்துக் கொண்டு ,இருந்த கா. கட்சிக்கு போடும் ஒவ்வொறு ஓட்டும் நம்ம நாட்டின் அஸ்திவாரத்தை உடைப்பதற்கு இணையானது. காஷ்மீர் மக்கள் இதனை உணர்ந்தால் போதும்.


M Ramachandran
ஜன 25, 2025 12:35

ராணுவமும் மக்களும் ஜாக்கிரதை. பாகிஸ்தானில் உண்டு கொளுத்திருக்கும் தீவிரவாதிகளின் மனதில் அரிப்பு. தின்ன பிரியாணி செருமானம் ஆக வில்லையாம். ISI காரன் குண்டு சப்ளைக்கு ரெடி. ஏமாளி எவன் அம்புடுவான் மூளை சலவை செய்து திருட்டு கனமாக இங்கிருக்கும் அரசியல் கருங்காலிகளை அணுகி குண்டு வைக்க முனைவான். இந்திய ராணுவம் உஷாரகா இருக்க வேண்டும்.


Pats, Kongunadu, Bharat, Hindustan
ஜன 25, 2025 12:27

இரயில் தடத்தில் வண்டி ஓடுவதெல்லாம் ஒரு சாதனையா? எதுக்கு இதுபோன்ற தேவையற்ற பீற்றல், தம்பட்டம்? எரிச்சல்தான் ஏற்படுகிறது..


N Sasikumar Yadhav
ஜன 25, 2025 12:49

அப்ப உங்க எஜமானர்கள் அந்த இடத்துக்கு எதற்கு வண்டி விடவில்லை கொத்தடிமையான உங்களின் இந்த கருத்து எல்லோருக்கும் எரிச்சலை வரவைக்கிறது


A.C.VALLIAPPAN
ஜன 25, 2025 14:02

r u really educated person . before writing just ask your selves . Do you thin all the railway track installation are same . we should consider climate condition it is not same like Ramanathapuram climate and kashmir climate atlease go out of tamilnadu and see the india before writing otherise keep your finger in your mouth and drink once again milk ask your teacher ask your father ask your mother they will teach you.


veera
ஜன 25, 2025 14:03

சரி சரி ரெண்டு பொங்கல் பரிசு வாங்கிட்டு டாஸ்மாக் ஒடிடு


Ray
ஜன 25, 2025 15:26

வெள்ளைக்காரன் காலத்துலே போட்டு விட்டிருக்கலாம் ஆனா அங்கே BJP ஆச்சி இல்லைன்னு போடாம விட்டுட்டான்


A1Suresh
ஜன 25, 2025 12:23

ஜாதி ஓட்டெடுப்பு, 100 ரூபாய் தினசரி வேலைதிட்டம், சொத்து கணக்கெடுப்பு, சிறுபான்மையினர் மேம்பாடு என்னும் டாங்கிரேஸ் அரசின் நாட்டை திவாலாக்கும் ஓட்டிற்கான போலிசாதனைகள் போலின்றி உண்மையாகவே நாட்டின் உட்கட்டமைப்பு சாதனைகளை பாஜக அரசு நிறைவேற்றி வருகிறது.


Vaduvooraan
ஜன 25, 2025 12:39

சுரேசு..நீ கும்மிடிப்பூண்டி தாண்டி வடக்கே போனதில்லைன்னு நெனக்கிறேன்..அதுதான் வெவரமில்லாம இப்புடி ஒரு கருத்து பதிவு பண்ணற ஒயு தபா வடக்கே குளுரு சீசன்ல போயிட்டு வா...அதுவும் காஷ்மீருக்கு அப்போதான் தெரியும் இந்த டிரெயினோட முக்கியத்துவம்


Ray
ஜன 25, 2025 15:30

காங்கிரஸ் ஆட்சில விடாம இப்போதான் நானூத்தி அம்பது கிலோமீட்டர் வேகத்திலே சீனாக்காரன் ரயில் விடறதுக்கும் மோடிதான் காரணம்


A1Suresh
ஜன 25, 2025 12:20

இனி ஸ்ரீநகருக்கு ரயிலில் பயணிக்கும் மக்கள் ஜம்முதாவி வரை சென்று அங்கிருந்து பனிஹால் வரை பஸ்-டாக்சி-டெம்போக்களில் பயணம் செய்து பிறகு பனிஹால் முதல் ஸ்ரீநகர் வரை ரயிலில் செல்வது என்ற சிரமம் இல்லை. நேராக ஸ்ரீநகர் வரை பயணிக்கலாம். மேலும் டெல்லியிலிருந்து 12 மணிநேரம் என்றில்லாமல் வெகுவிரைவில் பயணத்தை முடிக்கலாம்.


சமீபத்திய செய்தி