உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜனாதிபதிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவா: துணை ஜனாதிபதி எதிர்ப்பு

ஜனாதிபதிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவா: துணை ஜனாதிபதி எதிர்ப்பு

புதுடில்லி: ''ஜனாதிபதிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிடும் சூழ்நிலை இருக்கக்கூடாது,'' என துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் கூறினார்.ராஜ்யசபா குழு தொடர்பாக நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஜக்தீப் தன்கர் பேசியதாவது: நாட்டில் சட்டத்தின் ஆட்சியை செயல்படுத்துவது தான் ஒருவரின் வேலை. அதற்கு யாரின் அனுமதியும் தேவையில்லை. ஆனால், நீதிபதிகள் மீது நேரடியாக வழக்குப்பதிவு செய்ய முடியாது. நீதித்துறை அனுமதி பெற வேண்டும். ஆனால், அரசியலமைப்பில் அவ்வாறு கூறப்படவில்லை.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=9sqhk2za&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0வழக்கு தொடர்வதில் இருந்து ஜனாதிபதி மற்றும் கவர்னருக்கு மட்டுமே விலக்கு அளித்து உள்ளது. அப்படியானால் சட்டத்திற்கு அப்பாற்பட்ட ஒரு பிரிவு எப்படி இந்த விலக்கை பெற்றுள்ளது. இதன் விளைவுகள் அனைவரின் மனதிலும் உணரப்படுகிறது. சமீபத்திய தீர்ப்பு மூலம் ஜனாதிபதிக்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. நாடு எதை நோக்கி செல்கிறது. நாட்டில் என்ன நடக்கிறது. தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு செய்கிறோமா இல்லையா என்பது பற்றி அல்ல. ஜனநாயகத்திற்காக நாங்கள் எப்போதும் பேரம் பேசியது கிடையாது. குறிப்பிட்ட காலத்திற்குள் ஜனாதிபதி முடிவெடுக்க வேண்டும் அல்லது அது சட்டமாகிவிடும்.நம்மிடம் உள்ள நீதிபதிகள் சட்டம் இயற்றுபவர்களாகவும், நிர்வாக செயல்பாடுகளை ஆய்வு செய்பவர்களாகவும், சூப்பர் பார்லிமென்ட் ஆக செயல்படுபவர்களாகவும் உள்ளனர்.நாட்டின் சட்டம் அவர்களுக்கு பொருந்தாத காரணத்தினால் அவர்களுக்கு எந்த பொறுப்பும் இல்லை.ஜனாதிபதியை உச்சநீதிமன்றம் வழிநடத்தும் சூழ்நிலையை அனுமதிக்க முடியாது.அரசியலமைப்பின் கீழ் உச்சநீதிமன்றத்திற்கு உள்ள ஒரே உரிமை சட்டப்பிரிவு 145(3) ஐ விளக்குவதுதான். அங்கு ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நீதிபதிகள் இருக்க வேண்டும். பிரிவு 142 ஜனநாயக சக்திகளுக்கு எதிரான ஏவுகணையாக மாறி உள்ளது. இவ்வாறு ஜக்தீப் தன்கர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 90 )

veeramani
ஏப் 22, 2025 09:52

தென் தமிழ்நாட்டின் சீனியர் சிட்டிஸினின் தாழ்மையான வேண்டுகோள் .. எனது சிறு பிராயத்தில் பல இந்திய சுதந்திர போராட்ட தியாகிகளுடன் மற்றும் நேதாஜியின் இந்திய ராணுவ மக்களுடன் பழகு வாய்ப்பு கிட்டியிருந்தது. ஐம்பதுகளில் இந்திய குடியரசு ஆனவுடன் உடனடியாக இந்திய மக்கள் அரசாங்கம் தனக்கென ஒரு நிர்வாக அமைப்பை திறம்பட உருவாக்கியது. கிட்டத்தட்ட நம்மை ஆட்சிசெய்த பிரிட்டிஷாரின் நிர்வாகம் போன்றே இன்று வரை உள்ளது. அன்றைய பிரிட்டிஷ் தற்சமயம் இந்திய ராஷ்ட்ரபதி என அழைக்கப்படுகிறார். இந்திய ராஷ்டிரபதியின் அதிகாரம் சக்தி இவைகளுக்கு எல்லை நிர்ணயம் செய்யமுடியாது. வானமே எல்லை. அதேபோல் இந்திய ராஷ்டிரபதிக்காக இந்திய மாநிலங்களை ஆட்சிசெய்யும் மேதகு ஆளுநர் அவர்களின் அதிகாரமும் வானமே எல்லை. இந்திய ராஷ்டிரபதிதான் மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதம மந்திரி மற்றைய மந்திரிகளுக்கு பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைக்கிறார். அதேபோல் இந்திய மாநிலங்களில் மேதகு ஆளுநர் மக்களால் மாநிலம் அசெம்பிளிக்கு தேர்வு செய்த மணிலா முதன் முந்திரி மற்றைய மந்திரிக்களுக்கும் பதவி பிரமாணம் செய்கிறார். இந்திய நாட்டில் உள்ள அனைத்து அரசாங்க சொத்துக்களும் இந்திய ராஷ்டிரபதியால் சகல உரிமையுடன் நிர்வாகம் செய்யப்படுகிறது. ஒரு ஒய்வு பெற்ற மய்ய அரசு ஊழியனாகிய நான், இந்திய ராஷ்டிரபதியின் பெயரில் உறுதிமொழிகள் எடுத்து பல வேலைகளை சிறப்பாக செய்திருக்கிறேன். எனக்கு தெரிந்த மட்டில் , வானளாவிய அதிகாரம் மற்றும் பல சக்திகளை வைத்திருப்பவர்களை காலம் கெடுவு கொண்டுவர முடியாது


K.n. Dhasarathan
ஏப் 18, 2025 21:26

ஐயா டேங்கர் பாராளுமன்றம் தான் சூப்பர் பவர் என்று சொல்கிறீர்கள். சரிதான், அதுபோல சட்டசபை, மாநிலத்திற்கு சூப்பர் பவர் தானே, ஆனால் தமிழக கவர்னர் யாரையும் மதிக்காமல் தனியாக ஆட்சி நடத்துவது சட்டப்படி தவறு தானே.இவரை நீதி மன்றம் தண்டிப்பது வேண்டியது தானே ? அதையும் சேர்த்து சொல்லுங்கள், எந்த மாநிலத்திற்கும் சட்டசவை தான் சூப்பர் பவர் என்று உரக்க சொல்ல முடியுமா ?


Narayanan
ஏப் 18, 2025 14:15

உண்மையிலேயே நாட்டின் உச்சநீதிமன்றம் கட்டுத்தறியில் கட்டாத மாடாகத்தான் இருக்கிறது . சட்டம் படித்தோம் நீதிபதி ஆகிவிட்டோம் . அதுவும் உச்சநீதிமன்றத்தில் . பிறகென்ன நம்மை யாரும் கட்டுப்படுத்தமுடியாது என்ற ஆணவம் குடியரசுத்தலைவரின் / அவரின் பிரதிநிதி ஆளுநர் இவர்களின் கடமைகளில் தலையிடுவது ஜனநாயகப்படுகொலை .


Subramanian
ஏப் 18, 2025 04:07

SC judges are be as if they are super power in the country. VP has rightly pointed out. If SC can direct President, Parliament at their will, then why these institutions are required. Let the SC run the government also


Narayanan
ஏப் 18, 2025 14:32

நீதிபதிகளின் எண்ணமே நாமே நாட்டை ஆண்டால் என்ன என்பதுதான் .. அரசியல்வாதிகள் ஆண்டு பணத்தில் கொழுக்கிறார்கள் . நாமும் கொழுக்க நாட்டை நாமே ஆளலாம் என்ற எண்ணம் பேய் ஆட்டம் ஆடுகிறது. அதன் தாக்கம்தான் இது. பதவி ஓய்வு பெறும்போது பணக்காரர்களின் வழக்கை அவர்களுக்கு சாதகமாக செய்து காசு பார்த்து ஒதுங்கிய சிலர் கொடுக்கும் தெய்கிரியம்தான் இப்படி தீர்ப்பு எழுத வைக்கிறது. உதாரணம் ஆ. ராஜா வழக்கு .


Thetamilan
ஏப் 17, 2025 23:52

அரசியல் ஆட்டத்தை மாற்றவேண்டும். இந்துமதவாதிகளின் பில்லி சூனியம் நிறைந்தது அரசியல் சட்டம்


Thetamilan
ஏப் 17, 2025 23:52

வழக்கு தொடர்வதில் இருந்து ஜனாதிபதி மற்றும் கவர்னருக்கு மட்டும் ஏன் விலக்கு அளித்து உள்ளது? அவர்களும் மனிதர்கள்தானே


jaya
ஏப் 18, 2025 10:29

அப்ப நீதிபதி ஆகாயத்திலிருந்து குதித்தவரா?


Rajendra kumar
ஏப் 17, 2025 23:06

துணை ஜனாதிபதி மிக சரியாக, துணிச்சலாக, உண்மையை சொல்கிறார். நீதிபதிகளுக்கு அளவற்ற அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் எந்த பொறுப்பும் இல்லை.அவர்களின் பொறுப்புகளை கட்டுப் படுத்த கொலீஜியம் முறையை ஒழிக்க வேண்டும்.


Karthik
ஏப் 18, 2025 09:51

சரியாக சொன்னீர்


J.Isaac
ஏப் 17, 2025 22:23

யாரையும் கேள்வி கேட்க எல்லாருக்கும் உரிமை உண்டு. அது தான் ஜனநாயகம்


C.SRIRAM
ஏப் 17, 2025 23:42

எதற்கெடுத்தாலும் மாரி மாரி கேள்வி கேட்டுக்கொன்டே இருந்தால் நாடு நாசமாகத்தான் போகும். முதலில் கேள்விகேட்கும் நபர் அல்லது அமைப்பு தான் ஒழுங்காக இருக்கவேண்டும். இதனையும் தான் கேட்டிருக்கிறார் நீதிபதி வர்மா மீது ஏன் "FIR" இல்லை என்று. இதெற்கு ஏன் அ நீதி அமைப்புகளிடம் இருந்து பதில் இல்லை. அடுத்தவருக்கு கால கெடு விதிப்பவர்கள் ஒவ்வொரு சாதாரண மனிதன் சம்பந்தப்பட்ட வழக்குகளை முடிக்க ஏன் அளவுக்கு மீறிய நேரத்தை வீணடிக்கிறார்கள் .


Mariadoss E
ஏப் 17, 2025 21:35

ஜனாதிபதி ஆளும் கட்சியால் நியமனம் செய்யப்படுபவர் தான். நடுநிலை தவறும் போது யாராக இருந்தால் என்ன கடிவாளம் தேவை தான். எல்லா சட்டங்களும் ஜனாதிபதி ஒப்புதல் பெற்றே வருகிறது அதனால் சரியாகி விடுமா வக்ஃபு சட்டம் உட்பட.


Ray
ஏப் 18, 2025 08:57

The President is elected by the members of an electoral college consisting of the elected members of both the Houses of Parliament and the elected members of the Legislative Assemblies of States and the Union Territories of Delhi and Pondicherry.


sankaranarayanan
ஏப் 17, 2025 21:25

கொலிஜியம் முறையை ஒழித்தால்தான் நாட்டில் நியாயம் நிலைக்கும் .ஜாயிண்டு ஜூடிசியல் கமிஷன் அமைத்தால்தான் அதிலே பிரதமர், தலைமை நீதிபதி, பாராளுமன்ற எதிர் கட்சி தலைவர், மத்திய அமைச்சர் ஒருவர் பாராளுமன்ற நபர் ஒருவர் என்று ஐவர் தேர்ந்தெடுத்த கமிஷன்தான் சிறந்தது உலகில் உள்ள எல்லா நாடுகளிலும் அப்படித்தான் நடந்து கொண்டிருக்கிறது எதோ வினோதம் இந்தியாவில் மட்டும்தான் இப்படி தலைகிழாக நடக்கிறது.


baala
ஏப் 18, 2025 09:40

அரசியல் திருடர்கள் இருக்கும்வரை இந்த நாடு முன்னேற வாய்ப்பில்லை


புதிய வீடியோ