உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வாக்காளர் பட்டியல் திருத்த பணி அலுவலர்கள் பீதி

வாக்காளர் பட்டியல் திருத்த பணி அலுவலர்கள் பீதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கொல்கட்டா: மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கான பயிற்சி துவங்கி உள்ள நிலையில், பாதுகாப்பு குறைபாட்டால், அதில் பங்கேற்க ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். பாதுகாப்பை மேம்படுத்தக் கோரி, மாநில தலைமை தேர்தல் அதிகாரியிடம் அவர்கள் முறையிட்டுள்ளனர். மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம் உடன் சேர்த்து, இம்மாநிலத்துக்கும் அடுத்தாண்டு ஏப்ரலில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. விரைவில் தேர்தல் நடக்கவுள்ள பீஹாரை தொடர்ந்து, தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், குஜராத், கோவா, ராஜஸ்தான் உட்பட 12 மாநிலங்களில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி, நவ., 4 - டிச., 4 வரை நடக்க உள்ளது. வரைவு வாக்காளர் பட்டியல், டிச., 9ல் வெளியாக உள்ள நிலையில், 2026 பிப்., 7ல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகிறது. இந்த பணிக்காக, தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கான பயிற்சி நேற்று துவங்கியது. இந்நிலையில், மேற்கு வங்கத்தில் பாதுகாப்பு குறைபாடால், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் பங்கேற்க, ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். பாதுகாப்பை மேம்படுத்தக் கோரி, மாநில தலைமை தேர்தல் அதிகாரியிடம் அவர்கள் முறையிட்டுள்ளனர்.

ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் கூறியதாவது:

ஏற்கனவே பல்வேறு மாவட்டங்களில், அரசியல் கட்சிகளால் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் துன்புறுத்தப்பட்டு உள்ளனர்; மிரட்டலுக்கும் ஆளாகி உள்ளனர். இந்த சூழலில், சிறப்பு தீவிர திருத்தப் பணியில் ஈடுபட உள்ள ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களின் பாதுகாப்பு தான் எங்களுக்கு முக்கியம். மேற்கு வங்கத்தில் இந்த பணியை நிறுத்த பல்வேறு அரசியல் கட்சிகள் அழுத்தம் கொடுத்து வருகின்றன. களத்தில் பணியாற்றும் நாங்கள் தான் அச்சுறுத்தலை எதிர்கொள்கிறோம். குறிப்பாக, பெண் அலுவலர்களின் நிலை பற்றி கவலைப்படுகிறோம். எனவே, அரசியல் ரீதியாக பதற்றம் நிறைந்த பகுதிகளில் துணை ராணுவப் படையினரை பாதுகாப்பில் ஈடுபடுத்த வேண்டும். மேலும், பெண் அலுவலர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, அதிகளவில் பெண் பாதுகாப்பு அதிகாரிகளை நியமிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். மேற்கு வங்கத்தில் தற்போதைய நிலவரப்படி, 80,681 ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் உள்ளனர். இவர்களில், 1,000 பேர், பாதுகாப்பு காரணங்களுக்காக சிறப்பு தீவிர திருத்தப் பணியில் பங்கேற்க மாட்டோம் என, கடந்த மாதத்தில் தேர்தல் கமிஷனுக்கு கடிதம் எழுதி உள்ளனர். தற்போது அவர்களிடம் விளக்கம் கேட்டு, தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

என்றும் இந்தியன்
அக் 30, 2025 16:52

ப்ரெசிடெண்ட் ஆட்சி கொண்டு வருவதில் ஒரு பைசா பிரயோஜனமில்லை. ஏன்???மீண்டும் தேர்தல் நடந்தால் அதே கஸ்மால கட்சி தான் பதவிக்கு வரும். ஆகவே இந்த அரசியல்வாதி இந்த கட்சி இன்னும் 15 வருட காலத்திற்கு போட்டியிட தகுதியில்லை என்ற சட்டம் கொண்டு வரவேண்டும் . மற்றும் இந்த சட்டத்தில் இந்த குற்றவாளி மற்றும் இந்த குடும்ப வாரிசுகள் தேர்தலில் 5 வருடம் நிற்க தகுதியில்லை என்று கொண்டு வரவேண்டும்.


Rathna
அக் 30, 2025 16:21

அரசு அதிகாரிகளை மிரட்டுவதில் முன்னோடி. பல தொகுதிகளில் வோட்டு வித்தியாசம் 1000-3000 வரை உள்ள நிலையில் அதை ஈடுகட்ட பங்களாதேஷி மர்ம நபர்களை இறக்குமதி செய்ய பல கட்சிகள் முயற்சி செய்கின்றன. இங்கு வந்து தங்கி பங்களாதேஷி மர்ம நபர்கள் பண்டிகை காலங்களில் கலவரம் செய்கின்றனர்.


N Sasikumar Yadhav
அக் 30, 2025 13:51

உடனடியாக தமிழகம் மேற்குவங்கம் மாநிலங்களில் ஆட்சியை கலைத்துவிட்டு ஜனாதிபதி அமல்படுத்தி அதிகாரிகளுக்கு பாதுகாப்பு அதிகமாக கொடுக்க வேண்டும்


sankar
அக் 30, 2025 15:17

சரியாக சொன்னீர்கள்


gvr
அக் 30, 2025 11:26

All the states who want to regularise illegal immigrants must be brought under president's rule. How dare this fellow talk about CAA?


visu
அக் 30, 2025 11:11

அரசியல் கட்சிகள் பிரச்சனை செய்ய மட்டுமே ஆர்வம் காட்டுகின்றன ராகுல் வாக்கு பட்டியல் திருத்தத்தை எதிர்க்கிறார் சந்தேகமா இருந்தால் BLO உடன் அணைத்து கட்சி ஏஜெண்ட்களையும் அழைத்து செல்லலாம் வீடியோ பதிவும் கட்சிகள் செய்யவேண்டும் என்றும் ஆட்ஸ்ப்பினை இருந்தால் உடனே விடியோவை அனுப்பலாம்


V K
அக் 30, 2025 10:53

அவசரம் வேண்டாம் மே மாதம் பிறகு கவர்னர் ஆட்சி ஆறு மாதம் செயல்படுத்தி பிறகு தேர்தல் நடத்தலாம்


ஈசன்
அக் 30, 2025 09:56

மேற்கு வங்கத்தில் மட்டுமல்ல. நாடு முழுவதும் அமைதி மார்க்கத்தினரால் ஏதாவது அடாவடித்தனம் நிகழ்ந்தால், உடனே சோஷியல் மீடியா வழியாக தெரியப்படுத்த படுகிறது. ஆனால் காவல் துறை நடவடிக்கையோ அல்லது ராணுவ நடவடிக்கையோ தெரிவதில்லை. எப்போதோ சில சில யோகியின் நடவடிக்கைகள் தெரிய வருகிறது. அனைத்து அக்கிரமங்களின் எதிர் நடவடிக்கை மக்களுக்கு தெரிய வரும்போதுதான் அரசு அலுவலர்கள் தேர்தல் பணி செய்ய தயங்க மாட்டார்கள்.


Mohan
அக் 30, 2025 09:50

ரொம்ப சிம்பிள் இனிமேல் எந்த மாநிலத்திலும் SIR முடிக்காம தேர்தல் கிடையாதுன்னு ஒரு போடு போட்டா எல்லா வாலை சுருட்டிட்டு அடங்கிருவானுக ..ஆனா அப்படிப்பட்ட ஸ்டேட்மெண்ட் தேர்தல் ஆணையம் சொல்லணும் ஆனா சொல்லாது ..பயம் ...உச்ச நீதிமன்றம் கேள்வி கேக்கும் போதே எங்களை கேக்க ஜனாதிபதிக்கு மட்டும் தான் உரிமை இருக்குனு சொல்ல வக்கில்லாத ஆணையம் இதையா சொல்ல போகுது ..


R Ramesh
அக் 30, 2025 08:49

ஒரு சம்பவம் நடந்தாலும் ஜனாதிபதி ஆட்சியை அமல் படுத்த வேண்டும். ஆட்டத்தை கலைத்தால் எல்லாம் சரியாகி விடும்.


திகழ் ஓவியன், AJAX ONTARIO
அக் 30, 2025 08:47

எவனோ ஓட்டு திருட்டு அப்டின்னு சொன்னான். அவனை கைது செய்து நாடு கடத்த வேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை