உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கடற்படையிடம் உதவி கேட்டுள்ளோம்: கேரள முதல்வர்

கடற்படையிடம் உதவி கேட்டுள்ளோம்: கேரள முதல்வர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவனந்தபுரம்: மீட்புகுழுவினர் செல்வதற்காக தற்காலிக பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது; சவாலான இடங்களில் மீட்பு பணிகளை மேற்கொள்ளவும், உணவுப்பொருட்களை எடுத்துச் செல்லவும் கடற்படையின் உதவி கோரப்பட்டுள்ளது என கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு தொடர்பாக முதல்வர் பினராயி விஜயன் கூறியதாவது: மீட்புகுழுவினர் செல்வதற்காக தற்காலிக பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது; சவாலான இடங்களில் மீட்பு பணிகளை மேற்கொள்ளவும், உணவுப்பொருட்களை எடுத்துச் செல்லவும் கடற்படையின் உதவி கோரப்பட்டுள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=clh7vq46&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0வயநாட்டில் மீட்பு பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. இது கணிக்க முடியாது மற்றும் வேதனை நிறைந்த பேரிடர். 191 பேர் இன்னும் காணவில்லை. பேரிடர் பாதித்த பகுதிகளில் இருந்து மக்களை விரைவில் மீட்பதற்கான பணிகள் நடந்து வருகிறது.பழங்குடியினரை வேறு இடத்திற்கு மாற்றி வருகிறோம். செல்ல விரும்பாதவர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது. இதுவரை 1,592 பேர் மீட்கப்பட்டு உள்ளனர். தற்போது 82 நிவாரண முகாம்களில் 2,017 தங்கி உள்ளனர். மேப்பாடியில் 8 முகாம்கள் அமைக்கப்பட்டு 1,486 பேர் தங்கி உள்ளனர். முண்டக்கல் பகுதியில் மீட்பு பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அட்டமாலா மற்றும் சூரமலை பகுதியில் நிலைமை மேம்பட்டு உள்ளது. இன்று கூடுதலாக 132 ராணுவ வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். நேற்று முதல் பிரேத பரிசோதனை நடக்கிறது. அவர்களுக்கு உதவ கோழிக்கோடு மற்றும் தலசேரி பகுதியில் இருந்து டாக்டர்கள் விரைந்துள்ளனர். நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க வசதியாக, மேப்பாடி பாலிடெக்னிக் கல்லூரி தற்காலிக மருத்துவமனையாக மாற்றப்பட்டு உள்ளது. மண்ணுக்குள் புதைந்துள்ள சடலங்களை மீட்க ஓய்வுபெற்ற துறை சார்ந்த நிபுணர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Ravichandran S
ஆக 01, 2024 05:19

தமிழகத்தில் இருந்து தமிழகசிறப்புபடைகளை அனுப்புங்கள் முதல்வரே நமக்கு அருகில் உள்ளது


ganapathy
ஆக 01, 2024 01:16

ஏன் நீயே நீஞ்சி போறதுதானே...மத்த நேரத்துல மட்டும் முப்படைகளை கிண்டலடிக்க தெரியதுல்ல...இதுல எது உன்னோட நாறவாய்? அதுவா? இதுவா?


C.SRIRAM
ஜூலை 31, 2024 21:09

இந்த நபர் கடல் படையிடம் உதவி கேட்பார் . வெளியுறவு துறை செயலரை நியமிப்பார் எந்த அதிகாரமும் இல்லாமலே . மறை கழண்ட மனிதன்


Jysenn
ஜூலை 31, 2024 19:54

A brave and bold central government, like that of Chandrasekar, would have promulgated 356 years ago in Kerala like what was done to karunanithi in the aftermath of the killing of one Rajiv Gandhi.


Ramesh Sargam
ஜூலை 31, 2024 19:53

இன்னும் சில நாட்கள் ஆனபின்பு, இத்தனை கோடி நிவாரணம் கொடுக்க வேண்டும் மத்திய அரசு என்று போராட்டத்தில் இறங்குவார்கள். அந்த நிவாரணத்தைப்பெறக்கூட யாரும் இல்லாமல் பல குடும்பங்கள் மொத்தமாக இந்த இயற்கையின் தாண்டவத்திற்கு பலியாகி இருக்கின்றன. பிறகு யாருக்கு அந்த நிவாரணம்?


Matt P
ஜூலை 31, 2024 19:04

கடற்படை உதவி இவரை கேட்டு தான் கொடுப்பங்களா? இந்த நவீன காலத்தில் மாநிலத்தில் இப்படி ஏற்படும் அவல நிலைகளை தெரிந்ததும் மத்திய அரசு உடனே மாநில அரசை தொடர்பு கொண்டு கடற்படை உதவி தேவையா என்பதை தெரிந்து அவசர அவசரமாக செயல்படாதா? மக்கள் உயிர் விலை மதிப்பற்றது என்பதை எல்லோரும் உணரும் காலம் வர வேண்டும்.


Svs Yaadum oore
ஜூலை 31, 2024 18:59

நீர் வழி , வான் வழி , தரை வழி படை என்றாலே இந்தியாவில் வடக்குதான் .... இப்போது மட்டும் சமூக நீதி மத சார்பின்மையாக வடக்கு என்றால் இனிக்குதா ?? ...மீதி நேரம் வடக்கு என்றால் படிக்காதவன் , பானிபூரி என்று கொஞ்சம் கூட மனிதம் இல்லாமல் பேசுவானுங்க ...


Barakat Ali
ஜூலை 31, 2024 18:34

நோய்பரவலுக்கான வாய்ப்பும் அதிகம் ..... விஷ ஜந்துக்களின் நடமாட்டமும் அதிகரிக்கும் .... சிகிச்சையுடன் இவற்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும் .....


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை