உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆசிரியர்களுக்கு 8 மாதமாக நியமன ஆணை தர மறுப்பது ஏன்: அன்புமணி கேள்வி

ஆசிரியர்களுக்கு 8 மாதமாக நியமன ஆணை தர மறுப்பது ஏன்: அன்புமணி கேள்வி

சென்னை: தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு 8 மாதங்களாக நியமன ஆணை வழங்க மறுப்பது ஏன்? முறைகேடு செய்ய சதியா? என்று பா.ம.க., தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.அன்புமணி அறிக்கை:தமிழக அரசு பள்ளிகளில் நியமிப்பதற்காக 3,192 பட்டதாரி ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு 8 மாதங்களாகி விட்ட நிலையில், அவர்களுக்கு இன்னும் பணி நியமன ஆணை வழங்கப்படாததைக் கண்டித்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்கள் அனைவரும் அவர்களின் குடும்பத்துடன் சென்னையில் இன்று போராட்டம் நடத்தியுள்ளனர். அரசு பள்ளி ஆசிரியர் பணியில் நியமிப்பதற்கான போட்டித் தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பு உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளையும் அவர்கள் நிறைவேற்றி விட்ட நிலையில், அவர்களுக்கு பணி ஆணை வழங்க தமிழ்நாடு அரசு மறுத்து வருவது கடுமையாக கண்டிக்கத்தக்கது.தமிழக பள்ளிக்கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் பள்ளிகளில் 3,192 பட்டதாரி ஆசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிப்பு கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 25 ஆம் நாள் வெளியிடப்பட்டது. அதன்படி விண்ணப்பித்தவர்களுக்கு கடந்த ஆண்டு பிப்.4 ஆம் தேதி போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு, அதன் முடிவுகள் மே மாதம் 18 ஆம் தேதி வெளியிடப்பட்டன.ஆள்தேர்வு அறிக்கை வெளியிடப்பட்டு 16 மாதங்கள் ஆகி விட்டன. தேர்வு நடத்தப்பட்டு ஓரு வருடம் முடிந்துவிட்டது. தேர்ந்தெடுக்கப்பட்டோர் பட்டியல் வெளியிடப்பட்டு 8 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில் நியமன ஆணைகள் இன்னும் வழங்கப்படவில்லை.அவர்களுக்கு இன்னும் பணி நியமன ஆணை வழங்கப்படவில்லை என்றால் அவர்களின் மனநிலை எப்படி இருக்கும்? என்பதை ஆட்சியாளர்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்.தற்போது பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 3,192 பேரும் இரு தேர்வுகளை எழுதி வெற்றி பெற்றவர்கள். அப்படியிருந்தும் அவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்படவில்லை. இது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துகின்றன. அதை தமிழக அரசு தடுக்க வேண்டும்.ஆசிரியர்கள் நியமனத்திற்கு முதல்வர் ஒப்புதல் அளித்து விட்டதாக செய்திகள் வெளியாயின. அதன்பின்னரும் 3 மாதங்களாகி விட்ட நிலையில், இன்னும் பணி நியமன ஆணைகள் வழங்கப்படாதது நியாயம் அல்ல.எனவே பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 3,192 பேருக்கும் உடனடியாக பணி நியமன ஆணைகளை தமிழக அரசு வழங்க வேண்டும்.இவ்வாறு அன்புமணி கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

அப்பாவி
பிப் 22, 2025 08:49

அங்கே மும்மொழி நால்மொழின்னு பணத்தை விடுவிக்காம இருக்காங்க. அவிங்களை கேள்வி கேளுங்க.


Indhuindian
பிப் 22, 2025 06:23

இப்போ நியமன ஆணை கேப்பீங்க அப்புறம் சம்பளம் பஞ்சபடி கேப்பீங்க அதுக்கெல்லாம் எங்கே போறது சும்மா இப்படியே இன்னும் ஒரு வருஷத்தை ஓட்டிட்டோம்னா அப்புறம் வாக்குறுதி கொடுத்து மறுபடியும் ஆட்சிக்கு வந்து ஆமாம் குடுக்கறோம்ன்னு சொன்னோம் எப்போ குடுக்கறோம்ன்னு தேதி சொன்னம்மான்னு ஒரு பிட்ட போடத்தான் நம்ம அடிமைக்கூடங்களும் அடிமை வூடகங்களும் காத்துகிட்டு இருக்காங்களே


தாமரை மலர்கிறது
பிப் 22, 2025 02:14

அரசு வேலை என்பது நூறு நாள் மகாத்மா காந்தி வேலை மாதிரி சும்மா தூங்கிவிட்டு சம்பளம் வாங்குவது. அதன் சுமை தனியாரின் மீது தான் வரியாக விழும். அதனால் அரசு பள்ளிகள் அனைத்தையும் தனியாரிடம் விட வேண்டும். அந்த பள்ளிகள் அவர்களே ஆசிரியர்களை தேர்வு செய்துகொள்ள அனுமதிக்க வேண்டும். ஒரு மாணவனுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை அரசு அந்த பள்ளிக்கு நிதியாக கொடுக்க வேண்டும். அவ்வளவு தான். அரசே பள்ளியை நடத்துவது முட்டாள்தனம்.


seshadri
பிப் 22, 2025 00:36

பேரம் இன்னும் முடியவில்லை முடிந்த உடன் பணி நியமன ஆணை வழங்கப்படும்.


ஆரூர் ரங்
பிப் 21, 2025 21:56

சம்பளம் எங்கிருந்து கொடுக்க? உங்க..ப்பன் வீட்டிலிருந்தா? ஏற்கனவே கஜானா காலி.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை