உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / புற்றுநோய்க்கு மனைவி பலி : சோகம் தாங்காமல் ஐ.பி.எஸ். அதிகாரி தற்கொலை

புற்றுநோய்க்கு மனைவி பலி : சோகம் தாங்காமல் ஐ.பி.எஸ். அதிகாரி தற்கொலை

கவுகாத்தி: புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த தன் மனைவி மருத்துவமனையில் இறந்ததால், துக்கம் தாங்காமல் ஐ.பி.எஸ்., அதிகாரி மருத்துவமனையிலேயே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அசாமில் நடைபெற்று உள்ளது.அசாம் மாநிலம் சோனிட்புர் மாவட்ட எஸ்.பி.,யாக பணியாற்றி வந்தவர் சைலாதித்யா சைத்தியா. இவர் 2009ம் ஆண்டு ஐ.பி.எஸ். கேடர் ஆவார். இவரது மனைவி புற்றுநோய் பாதிப்புக்கு உள்ளாகியிருந்ததால், மனைவியை அருகில் இருந்து கவனித்து வர வேண்டி கடந்த 4 மாதமாக விடுமுறையில் இருந்தார்.புற்றுநோய் முற்றிய நிலையில் எஸ்.பி.,யின் மனைவி கடந்த சில நாட்களுக்கு முன் தனியார் மருத்துவமனையில் ஐ.சி.யூ.வில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இன்று (18.06.2024) சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் இறந்தார். இதையறிந்த சைலாதித்யா சைத்தியா, மனைவி இறந்த சோகம் தாங்காமல் மருத்துவமனை ஐ.சி.யூ. வளாகத்திலேயே தன் சர்வீஸ் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்ட அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Bala
ஜூன் 19, 2024 02:29

அன்புக்கு இது தீர்வல்ல, கட்டுமரம் இப்படி நடந்திருந்தால் தமிழ்நாட்டின் நிலையே வேறு நிலை.


Krishna
ஜூன் 18, 2024 23:37

One news says. Ex lover killed because he ditched him. Another news says officer took his life for his love. End of the day we all need love plus compassion and tolerance. Not aggression. Our education must needs change


எஸ் எஸ்
ஜூன் 18, 2024 20:44

அந்த பெண்மணி அற்புதமான மனைவியாக இருந்திருக்கிறார். ஓம் சாந்தி


Bharathanban Vs
ஜூன் 18, 2024 20:17

நல்ல மனிதர்... தவறான முடிவு


aaruthirumalai
ஜூன் 18, 2024 20:02

இந்த காலத்துல இப்படிப்பட்ட........


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை