| ADDED : பிப் 19, 2025 07:54 PM
பாலகாட்: மத்தியப் பிரதேசத்தில் நடந்த என்கவுன்டரில் பெண் மாவோயிஸ்ட்கள் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.சத்தீஸ்கர் எல்லைக்கு அருகிலுள்ள ம.பி., வனப்பகுதியில் நடந்த என்கவுன்டரில் மாநில காவல்துறையின் மாவோயிஸ்ட் எதிர்ப்பு ஹாக் படை மற்றும் உள்ளூர் போலீஸ் குழுக்கள் பங்கேற்றதாக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விஜய் தபார் தெரிவித்தார்.அவர் மேலும் கூறியதாவது:மாவட்ட தலைமையகத்திலிருந்து சுமார் 90 கி.மீ., தொலைவில் உள்ள ஒரு இடத்தில் காலை துப்பாக்கிச் சண்டை நடந்தது. சுப்கார் வனப்பகுதியில் உள்ள ரோண்டா வன முகாம் அருகே இந்த சம்பவம் நடந்தது. இதில், பெண் மாவோயிஸ்ட்கள் மூவர் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் சிலர் தப்பி விட்டனர்.சம்பவ இடத்தில் இருந்து துப்பாக்கிகள், செல்ப்-லோடிங் ரைபிள் மற்றும் ஒரு .303 ரைபிள் ஆகியவற்றை போலீசார் மீட்டனர். தப்பியவர்களைக் கண்டுபிடிக்க பன்னிரண்டு போலீஸ் குழுக்கள் தேடுதல் வேட்டையை மேற்கொண்டுள்ளோம் என்றார்.முதல்வர் பாராட்டு
மாவோயிஸ்டுகளை வீழ்த்திய மாநில போலீஸ் படையினருக்கு முதல்வர் மோகன் யாதவ் பாராட்டு தெரிவித்தார்.