கற்பகம் உயர்கல்வி கழகம் சார்பில் உயிர் உரம் தயாரிக்கும் பயிலரங்கு
பயிலரங்கின் முதல் நாள், கற்பகம் உயர்கல்வி கழகத்தின் துணைவேந்தர் வெங்கடாசலபதி பேசுகையில், ரசாயனம் இல்லாத இயற்கை உரங்களினால், மண் வளம் பெருகும், பூச்சிகளை கொல்லாமல் இயற்கை பூச்சிவிரட்டிகளைப் பயன்படுத்தி, ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க பாடுபடுவோம், என்றார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தமிழ்நாடு விவசாய பல்கலை கழகத்தின் நுண்ணுயிரியல் துறை தலைவர் சிவக்குமார், உயிர் உரம், மண்புழு உரம், ஜீவாமிர்தம், மீன் அமிலம், உயிர் உரம் தயரிப்பு முறைகள் குறித்து செயல் விளக்கம் அளித்தார்.