உள்ளூர் செய்திகள்

பாரதிதாசன் கலை கல்லூரியில் இரண்டு நாள் -சர்வதேச மாநாடு

ஈரோடு: ஈரோடு அருகே பாரதிதாசன் கலை அறிவியல் கல்லுாரியில், இன்டர் டிசிப்பிளினரி அப்ரோச்சஸ் இன் லைப் சயின்ஸ் அன்ட் ரிசர்ச் சர்வதேச மாநாடு, இரண்டு நாள் நடந்தது. கல்லுாரி தாளாளர் என்.கே.கே.பெரியசாமி தலைமை வகித்தார். முதல்வர் காமேஷ் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். பொருளாளர் முருகன், இணை செயலாளர்கள் வசந்தி சத்யன், பரிமளா ராஜா, தலைமை செயல் அதிகாரி நரேன் ராஜா, நிர்வாக அலுவலர் அருள் குமரன் கலந்து கொண்டனர். உயிர் வேதியியல் துறை தலைவர் செல்வி வரவேற்றார். பாரதியார் பல்கலை உயிர் தகவலியல் துறை ஜெயகுமார் ஆகியோர், தங்கள் துறை சார்ந்த கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். பல்வேறு கல்லுாரி மாணவர்கள் மதிப்பாய்வுரைகளை சமர்ப்பித்தனர். சிறந்த ஆய்வு கட்டுரைகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்