உள்ளூர் செய்திகள்

பாரதியாரின் தமிழ் பங்களிப்பை ஆய்வு செய்ய வேண்டும்: கவர்னர் ஆர்.என்.ரவி

சென்னை: பாரதியார் சிறந்த தேசியவாதி, அவரது தமிழ் பங்களிப்பை ஆய்வு செய்ய வேண்டும் என தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கூறினார்.சென்னை கவர்னர் மாளிகையில் நடந்த உத்தரகண்ட் மாநிலம் உருவான தின விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாவது:பாரதியார், வஉசி உள்ளிட்டோர் ஆங்கிலேயர்களுக்கு எதிராக பெரிய அளவில் போராட்டங்களை மேற்கொண்டனர். பாரதியார் உள்ளிட்டோரின் போராட்டங்களால் இந்தியர்களின் எண்ணங்களை ஆங்கிலேயர்கள் புரிந்து கொண்டனர்.பாரதியார் சிறந்த தேசியவாதி. அவரது தமிழ் பங்களிப்பை ஆய்வு செய்ய வேண்டும். பாரதியாரால் சுதந்திர போராட்டத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்தும் பெரிய அளவில் ஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்