அரசு பள்ளி மாணவர் மன்ற செயல்பாடுகள் துவக்கம்
அரசு பள்ளிகளில் 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு மன்றம் நடத்த தனி பாடவேளை ஒதுக்கப்பட்டுள்ளது.இலக்கியம், சுற்றுச்சூழல் மற்றும் கலை பண்பாட்டு மன்றம் உள்ளிட்ட பல்வேறு மன்றங்கள் தொடங்கப்பட்டன. ஒவ்வொரு மன்றத்திற்கும் பொறுப்பு ஆசிரியர்கள் மற்றும் மாணவர் துாதுவர்கள் உண்டு.மன்றங்களுக்கு இடையே நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு துவக்க நாளில் பரிசுகள் வழங்கப்பட்டது. மன்றத்தை சிறப்பாக நடத்த உறுதிமொழி ஏற்று கொண்டனர்.