அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பேடரப்பள்ளி மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில், 875 மாணவ, மாணவியர், தமிழ் மற்றும் ஆங்கில வழி கல்வி பயின்று வருகின்றனர்.ஓசூர் அதியமான் பொறியியல் கல்லுாரியில், 17வது தேசிய அளவிலான குங்பூ, கராத்தே, சிலம்பம், தேக்வாண்டோ போட்டிகள் நேற்று முன்தினம் நடந்தன. இதில், பேடரப்பள்ளி மாநகராட்சி நடுநிலைப் பள்ளி மாணவர்கள், 10 பேர் பங்கேற்றனர். இதில், குங்பூ போட்டியில் மாணவர்கள் வெற்றிவேல், மந்த்தோஸ், நிக்கில், பாலாஜி ஆகிய மாணவர்கள் வெற்றி பெற்று, கோப்பையுடன் நேற்று பள்ளிக்கு வந்தனர். அவர்களை, பள்ளி தலைமையாசிரியர் பொன்நாகேஷ் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.