நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்
உடுமலை: 'நீட்' தேர்வுக்கு தகுதியானவர்கள் மார்ச் 8ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.தேசிய தேர்வு முகமை சார்பில், ஆண்டு தோறும் மருத்துவ படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கு, 'நீட்' தேர்வினை நடத்தி வருகிறது. தற்போது 2026ம் ஆண்டுக்கான இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க அறிவித்துள்ளது.அதன் அறிவிப்பின்படி, எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் இணைய, 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். 'நீட்' தேர்வு மே, 3ம் தேதி, மதியம், 2:00 முதல் மாலை 5:00 மணி வரை நடக்கவுள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது.இத்தேர்வுக்கு தகுதியானவர்கள் பிப். 8 துவங்கி, மார்ச், 8ம் தேதி வரை விண்ணப்பிக்க, தேசிய தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) அறிவுறுத்தியுள்ளது.தேர்வுக்கு விண்ணப்பிக்கும் பொதுப்பிரிவினர், 1,700 ரூபாயும், எஸ்.சி. எஸ்.டி. பிரிவினர் ஆயிரம் ரூபாயும், பிற வகுப்பினர், 1,600 ரூபாயும் தேர்வுக் கட்டணமாக செலுத்த வேண்டும்.தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உட்பட 13 மொழிகளில் நீட் தேர்வு நடக்கவுள்ளது. htttps://nta.ac.in என்ற இணையதளத்தில் மேலும் தகவல்களை விண்ணப்பிப்போர் அறியலாம்.இத்தகவலை, திருப்பூர் மாவட்ட 'நீட்' தேர்வு ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.