தேசிய கருத்தரங்கம்
காரைக்குடி: காரைக்குடி அழகப்பா பல்கலை., மகாத்மா காந்தி படிப்பு மையத்தின் சார்பில் மன ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கு துவக்க விழா நடந்தது.அழகப்பா பல்கலை., துணைவேந்தர் க.ரவி தலைமையேற்றுப் பேசினார். அழகப்பா பல்கலை., தொலைநிலைக் கல்வி இயக்குனர் கண்ணபிரான் வாழ்த்தினார். கல்வியியல் கல்லுாரி முதல்வர் சிவக்குமார் பேசினார். மகாத்மா காந்தி படிப்பு மைய இயக்குனர் பரிமளா பாத்திமா வரவேற்றார். உதவி பேராசிரியர் சாந்தி நன்றி கூறினார்.