உள்ளூர் செய்திகள்

மாணவர் சேர்க்கை

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது.சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை, முதுகலை, முதுகலை பட்டயம், பட்டயம்,எக்ஸிகியூடிவ் பட்ட படிப்புகள், மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கு, கடந்த மே 1 ம் தேதி முதல் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் தொடங்கி நடந்தது வருகிறது. இந்நிலையில், வரும் 30ம் தேதி மாணவர்கள் சேர்க்கை முடிய உள்ள நிலையில், சேர்க்கை பெற விரும்பும் மாணவர்கள், வரும் 30 ம் தேதிக்குள் பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.annamalaiuniversity.ac.in மூலம் விண்ணப்பித்து சேர்க்கை செய்து கொள்ளளாம் என பல்கலைக்கழக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்