உள்ளூர் செய்திகள்

பிளஸ் 1 மாணவன் சுட்டுக்கொலை

முசாபர் நகர்: உத்தர பிரதேச மாநிலத்தில், பள்ளிக்கு அருகே, பிளஸ் 1 மாணவனை, அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். உத்தர பிரதேச மாநிலத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலத்தின், ஷாம்லி மாவட்டத்தைச் சேர்ந்தவர், பிரேயன்சு, 16. இவர், பிளஸ் 1 படித்து வந்தார்.நேற்று, பள்ளிக்கு வெளியே நின்ற பிரேயன்சுவை, அடையாளம் தெரியாத மர்ம நபர்கள், துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.இது குறித்து தகவலறிந்த போலீசார், மர்ம நபர்களை தேடி வருகின்றனர். சம்பவம் நடந்த பள்ளியில், பாதுகாப்பு பணியில், ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்