புதிதாக 30 மத்திய பல்கலைக்கழகங்கள்?
புதிதாக 30 மத்திய பல்கலைக்கழகங்களை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்று யு.ஜி.சி. முன்னாள் தலைவர் கூறியுள்ளார். கர்நாடக பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் யு.ஜி.சி. தலைவர் சுகதேவ் தொராட், இந்திய உயர்கல்வியின் தரத்தை உயர்த்த 30௦ புதிய மத்திய பல்கலைக்கழகங்களை தொடங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் அவர், "உயர்கல்வி துறையில் இந்தியா போட்டிபோடும் அளவிற்கு சிறந்து விளங்க வேண்டும் என்பதில் பிரதமர் மன்மோகன் சிங் ஆர்வமாக உள்ளார். இதைத்தவிர நாட்டின் பின்தங்கிய பகுதிகளில் 372 கல்லூரிகளை அமைக்க ஒப்புக்கொண்டுள்ள அவர், 2% உதவித்தொகை வழங்கவும் சம்மதித்துள்ளார்" என்றார்.