வாசகர்கள் கருத்துகள் ( 32 )
ஒரு தொழிலும் செய்ய முடியாத நிலை வரும் ?
அமைச்சரெல்லாம் மக்களிடம் நேரடியா பேசபடாது. ஒரு தொழிலதிபரே இப்பிடி போட்டு வாங்குறாரு. மக்களிடம் பேசுனா இன்னும் செமையா அறிவுரைகள் கிடைக்கும். அமைச்சர் போய், எழுதிக்குடுத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிங்களை கேட்கட்டும்.
திருப்பூரிலும் கோவையிலும் ஜவுளி துறை வளர்ச்சி முன்னேற்றத்திற்கு பதிலாக ஜிலேபி வகைகள் பற்றி விவாதத்திற்கு அவசியமே இல்லை .
அன்னபூர்ணா ஹோட்டல் ஏகப்பட்ட தடவை ஈக்கள் செத்துக் கிடந்து உள்ளது இவர் பேச வந்துட்டாரு
இந்த அன்னபூர்ணா ஓனர்கிட்டா கேக்கனும்??? 1 கப்பு மாவு ஊத்தி 1 கப்பு சாம்பார் குடுத்து இட்டிலின்னா 1செட் 40ஓவாய் ? அதே இட்டிலிக்கு கிண்ணத்துல சாம்பார் ஊத்தி சாம்பார் இட்லின்னா 55ஓவாய்? அதே 1கப் மாவுல நீளம ஊத்தி தோசைன்னா 110 ஓவாய்? அதையவே குட்டையா ஊத்தோன ஊத்தாப்பம்னு 95 ஓவாய் ? அதே தோசை மேல இட்டிலிக்கு தர்ர பொடிய தூவுண பொடி தோசைன்ணு 125 ஓவாய் வாங்குறாறு? அதே 1 கப்பு மாவு அதே மாஸ்ட்டர் அதே gas ஒண்ணுமே புரியல கோவிந்தா???
அருமை நண்பா
குடிசை தொழில் என்று சொல்லி பலர் பல விதமான தின் பண்டங்களை தயாரித்து கடை கடையாக ஏறி இறங்கி விற்க வசதி இல்லை, இதை சிலர் சரியாக பயன்படுத்துகிறார்கள் எல்லாத்தையும் நானே வாங்கிக் கொள்கிறேன் என்று சொல்லி தயாரிப்பு ஸ்டிக்கர் ஒட்டி நம்பவே முடியாத லாபத்தில் விற்று அரசுக்கு வரி கட்டாமல் ஏமாற்றி ஊர் முழுவதும் சொத்துக்களை வாரி குவிக்கிறார்கள் பாரம்பரியம் ஒன்றுமில்லை எப்படி இது சாத்தியம்? வெறும் மிக்சர், முறுக்கு, விற்று பல கோடிகள் சொத்து, வாரிசுகளுக்கு ஆடம்பர திருமணம், .... ஒரே கொண்டாட்டம் தான். இவர்களுக்கு முகவரி கொடுத்தது யார்? மக்களே உஷார்....
பேக்கரி படு பிரபலம் நகரில் எங்கு பார்த்தாலும் இருக்கும் பயங்கர பிஸி அதன் முதலாளி தான் சங்கத் தலைவர்.... சின்ன பிரச்சினை விலை அதிகம் என்று மொட்ட கடிதம் போட்டு வருமானவரி துறை வந்து எல்லாத்தையும் வாரி கொண்டு.... முகவரியை தேடி இங்கு வந்து ஊரை வளைத்தவர் துணை தலைவர் எல்லா கல்வி நிறுவன கேன்டீனில் இவர்களின் முட்டை பப்ஸ் சப்ளை.... வாழ்நாள் முழுவதும் உழைத்தாலும் இப்படி சம்பாதிக்க முடியாது.... இவர்களின் நிழல் யார்? இவர்கள் கூடி பேசிய சத்தியமான உண்மை தான் இன்று உலகம் முழுவதும் பேசும் பொருளாக மாறிவிட்டது....
கீரிம் பன்/ ஜாம் பன் ₹.15/- தேங்காய் பன் ஒரு ரோல் ₹.40/- க்கு தரமாக சுத்தமாக தயாரித்து மகிழ்ச்சியாக குடும்பத்துடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறான் குறிப்பாக எந்த சங்கத்திலும் இல்லை... சங்கத்தை வைத்து ஒரு கூட்டத்தை சேர்த்து கண்டபடி விலையை ஏற்றி மக்களை பாடாபடுத்தும் இவர்களை நினைத்தால் ..... 60 பைசாவுக்கு குடித்த அதே டீ யில் பாதி தான் தருகிறார் விலை ரூபாய் 15/-. நீங்கள் நியாயமாக நடந்தால் இந்த சம்பவம் நடந்திருக்காது....
கடையில் வேலை செய்பவர்களுக்கு எல்லாம் ஒரே மாதிரியான கூலி/சம்பளம் தர முடியாதா? அதில் என்ன வித்தியாசம் ? லீவு போட்டால், தாமதமாக வந்தால் சரியாக கட்டிங் போட்டு தரும் கணினி அரசு வரி என்றால் பயந்து தொங்குதோ? விறகு, அரிசி, கடலை, தேயிலை, காப்பி கொட்டை , காய்கறி, பழங்கள் எல்லாம் நேரடியாக விவசாயிகளிடம் வாங்கினால் அதற்கு உண்டான வரியை கையில் இருந்து நாம் கட்டிவிட்டு அடுத்த மாதம் கழித்து விடலாம் இது நடைமுறை நேற்று வந்தது அல்ல. வரி கட்ட பிரியம் இல்லை என்றால் வணிகத்தை குறைத்து அளவாக வாழலாம் இலவச பட்டா வீடுகளும் தப்பித்து விடும். உங்க பாரம்பரியமான தொழிலை மறந்து விட்டு ஐயா தாமேதரசாமி சம்பாதித்து வைத்த பெயரையும், புகழையும் ஒரே நாளில் கெடுத்துக் கொண்டீர்கள்...
அக்கா வெங்காயம் பூண்டு சாப்பிட மாட்டார்கள்,தங்கை ஜிலேபி சாப்பிட மாட்டாரா? அதனால் அதற்கெல்லாம் வரி அதிகம் போடுவார்களோ?