வாசகர்கள் கருத்துகள் ( 1 )
வங்காள விரிகுடா இனிதே வரவேற்கிறது.
மேலும் செய்திகள்
நீதிபதி சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய முடியுமா? அடுத்தது என்ன?
9 hour(s) ago | 41
விஜய் பொதுக்கூட்ட திடலில் த.வெ.க.,வினர் துாய்மை பணி
11 hour(s) ago | 4
ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து, நேற்று மாலை வினாடிக்கு, 50,000 கன அடியாக அதிகரித்துள்ளதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால், கர்நாடகாவில் உள்ள அணைகளுக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. கபினி அணை தனது முழு கொள்ளளவை எட்டியதால், பாதுகாப்பு கருதி உபரி நீர் அப்படியே காவிரியில் திறக்கப்படுகிறது.நேற்று மாலை கபினியில் வினாடிக்கு, 61,316 கனஅடி நீரும், கே.ஆர்.எஸ்., அணையிலிருந்து, 2,566 கன அடி நீர் என மொத்தம், 63,882 கனஅடி நீர் தமிழகத்திற்கு காவிரியில் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் நீர்வரத்து நேற்று மாலை 6:00 மணிக்கு வினாடிக்கு, 50,000 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
வங்காள விரிகுடா இனிதே வரவேற்கிறது.
9 hour(s) ago | 41
11 hour(s) ago | 4