உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / மத துவேஷத்தை துாண்டும் பாதிரியாரின் வெறுப்பு பேச்சு; ஹிந்து அமைப்புகள் கண்டனம்

மத துவேஷத்தை துாண்டும் பாதிரியாரின் வெறுப்பு பேச்சு; ஹிந்து அமைப்புகள் கண்டனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: கோவை சி.எஸ்.ஐ., இமானுவேல் சர்ச்சில் நடந்த கூட்டத்தில், பாதிரியாரின் வெறுப்பு பேச்சு, ஹிந்துக்களின் மத உணர்வுகளை துாண்டும் வகையில் அமைந்துள்ளதாக, கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=d12v4j6e&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கோவை சி.எஸ்.ஐ., இமானுவேல் சர்ச்சில் கடந்த மாதம், 16ம் தேதி நடந்த கூட்டத்தில் பாதிரியார் பிரின்ஸ் கால்வின் பேசும் வீடியோ ஒன்று, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவரது பேச்சு , ஹிந்துக்களின் மத உணர்வுகளை துாண்டும் வகையில் அமைந்துள்ளதாக, கண்டனங்கள் எழுந்து வருகின்றன. அந்த வீடியோவில் அவர் பேசியிருப்பதாவது:'என்ன தெரியும் கொழுக்கட்டையும், தேங்காய் மூடியையும் சாப்பிட்டு திரியுறே நீ. மாட்டு மூத்திரத்தையும் குடிச்சிட்டு திரியறே. என்னய்யா ஆன்மிகம் உங்களுக்கு. மாட்டை தின்பவன் கீழ் ஜாதி. மாட்டு மூத்திரத்தை குடிப்பவன் மேல் ஜாதி. இது எங்கையாவது வாழ்க்கையில இருக்குமா. அறிவுதான் இருக்குதா என்று தெரியல. மாட்டு சாணியை தின்பவன் மேல் ஜாதி; 'கிராஸ் பெல்ட்' அவரு!'சாணி வருதுல, அதை தின்பவன் கீழ் ஜாதி. இது என்னவென்று தெரியவில்லை. உலகத்தில் மலத்தை தின்னும் ஒரே ஒரு இனம் இங்குதான் இருக்கிறது. உலகத்தில் எந்த இனமும் மலத்தை திங்காது. இந்தியாவில் மட்டும்தான் மலத்தை தின்று, மூத்திரத்தை குடிக்கிறான். இப்படிப்பட்ட கேவலமான ஓர் இனத்தை, இந்தியாவில் வைத்துக்கொண்டு அவன் சொல்கிறான், 'உலகில் நான் பிரம்மாவின் தலையில் இருந்து வந்தேன் என்று!' 'தலையில் இருந்து வந்தவன் எதுக்குடா கீழ இருக்குறத திங்கறே. தலையில் இருந்து வந்தவன் தலையில்தான் நிற்கணும். நாம் மாட்டின் முன்னாடி நிற்போம். இவன் மாட்டின் பின்னாடி நின்றுகொண்டு எப்படா வாலை துாக்கும் என்று பார்க்கிறான்' இவ்வாறு, பிரின்ஸ் கால்வின் அந்த வீடியோவில் பேசியுள்ளார்.

இந்த பேச்சுக்கு, இந்து அமைப்பினர் மத்தியில், கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத், இந்து முன்னணி கோவை கோட்ட செயலாளர் கிருஷ்ணன் உள்ளிட்ட இந்து அமைப்பினர், கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, பாதிரியார் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் மற்றும் ரேஸ்கோர்ஸ் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர்.இந்நிலையில், சமூக வலைதளத்தில் பதிவிடப்பட்ட வீடியோ தொடர்பாக, பாதிரியார் பிரின்ஸ் கால்வின் மீது, பல்வேறு பிரிவுகளின் கீழ் கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனால் இதுவரை கைது செய்யப்படவில்லை.

'வருத்தம் தெரிவிக்கிறேன்!'

இதுகுறித்து, பாதிரியார் பிரின்ஸ் கால்வினிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது: நான் தனிப்பட்ட மதத்தை பற்றியோ, ஒரு அமைப்பு, ஜாதியை பற்றியோ பேசவில்லை. உணவின் அடிப்படையில் ஒருவரிடம் ஏற்றத்தாழ்வு பார்க்க முடியாது. ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு உணவு முறை இருக்கிறது. அந்த உணவின் அடிப்படையில் ஒருவன் தாழ்ந்தவன், ஒருவன் மேலானவன் என்று சொல்ல முடியாது.உதாரணமாக, மாட்டு இறைச்சி சாப்பிடுபவரை கீழ் ஜாதி என்கின்றனர். மாட்டு மூத்திரத்தை குடிப்பவர்களும், சாணத்தை சாப்பிடுபவர்களும் இருக்கிறார்கள். இரண்டும் ஒன்றுதான். இது என்ன கலாசாரமாக இருக்கும். கலாசாரம் என்றால் ஒரேமாதிரிதான் இருக்க வேண்டும். இந்த ஜாதி வேறுபாடுகள் கலாசாரத்தில் இருக்கிறது. அதுபற்றி கவனத்தில் கொள்ள வேண்டும் என்ற அர்த்தத்தில்தான் பேசினேன். எனக்கு எந்தவிதமான மத துவேஷமும் கிடையாது. ஹிந்து சமயத்தையும், கடவுள் பற்றியும் எதுவும் பேசவில்லை.வேறு யாரையும் புண்படுத்தும் நோக்கமும் எனக்கு இல்லை. என்னுடைய ஆலயத்தில் இருக்கும் சில பிரச்னைகளில் எனக்கு எதிரானவர்கள், வீடியோவை 'எடிட்' செய்து வெளியிட்டு பிரச்னை செய்கின்றனர். ஹிந்து சமயத்தை புண்படும்படி பேசியிருந்தால், மனதார வருத்தம் தெரிவிக்கிறேன். வரும் காலங்களில் கவனமுடன் பேச ஆயத்தம் ஆகிறேன்.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 41 )

Arul Narayanan
ஜூலை 05, 2024 19:17

பாராளுமன்றத்திலேயே இது போன்று பேசியவரை விட்டு விட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தால் ஆளாளுக்கு இப்படி தான் பேசுவார்கள்.


beindian
ஜூலை 04, 2024 21:14

அவரு சொன்னது உண்மைதானே இந்தியாவில் கீழே வருவதை குடிப்பதும் தின்பதும், வாயில் சாப்பிடவேண்டியதை கிழே கொட்டுவதும் நடக்கின்றது .


கத்தரிக்காய் வியாபாரி
ஜூலை 04, 2024 19:35

கள்ள சாராய சாவை திசை திருப்ப இது மாதிரி ஏதாச்சும் நடந்துக்கிட்டே இருக்கும்


ram
ஜூலை 04, 2024 16:27

வேலை செய்யமால் ஊழியம் செய்கிறேன் என்று மாதிரி .....


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 04, 2024 16:00

" உலகமே நல்ல தண்ணியை குடிச்சிட்டு சந்தோசமா இருக்கும் போது , வேங்கைவயல் டாங்க் தண்ணியை குடிச்சிட்டு ஒன்னுமே நடக்காத மாதிரி கமுக்கமா அறிவாலய வாசல்ல ஒக்காந்துருக்கியே ...யாருப்பா நீயி ???"


Ramani Venkatraman
ஜூலை 04, 2024 11:44

பேசறதெல்லாம் ஆவேசமாக பேசிவிட்டு, அப்பறம் சப்பைக்கட்டு கட்டுவது என்ன வேஷம். இந்து மதத்தை இழிவு படுத்தும் இவர்கள் தங்கள் தெய்வத்தை, இந்து மதக் கடவுள்கள் போல் சித்தரித்து தேரில் ஊர்வலம் செல்வது ஏன்...யாரும் கேட்க முடியாது என்ற நினைப்பதால் தானே...


Vijaya KoothanAMC
ஜூலை 04, 2024 10:00

இப்படி அடுத்தவர்களை பலிபீடத்தில் பற்றி பேச சொல்லவில்லை யேசு பெருமான். பாதிரியார் அன்பும் கரிசனையும் ஆன்மீகமும் தான் பேச சொன்னார். தயவுசெய்து பொறுப்பை துறந்துவிடுங்கள


Ravi Srinivasan
ஜூலை 04, 2024 08:45

ஒண்ட வந்த பிடாரி பிசாசு, ஊர் பிடாரிய விரட்டிச்சாம்


நிக்கோல்தாம்சன்
ஜூலை 04, 2024 05:24

இப்படி பேசுறான் என்றால் அருகில் இந்திய இறையாண்மையை எதிர்த்து போஸ்டரோ, இல்லை கருப்பு வண்ணத்தில் இந்தியாவை பிரிக்கும் வாசகமோ எழுதியிருப்பார்கள் அதனை மறைக்க ஊளையிடுகிறது


Pradeep
ஜூலை 04, 2024 00:05

Does any one from ruling party have guts to question this guy publicly? does any legal or law enforcement body have guts to register suo motto case and arrest him? He is a blot to all Christians out here.


மேலும் செய்திகள்