உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / மருந்து, மாத்திரையும் இல்லை புகார் அளிக்க வசதியும் இல்லை

மருந்து, மாத்திரையும் இல்லை புகார் அளிக்க வசதியும் இல்லை

சென்னை: முதல்வர் மருந்தகத்தில், வாடிக்கையாளர்கள் கேட்கும் மருந்து கிடைக்காதது தொடர்பாக புகார் அளிக்க, பொது தொலைபேசி எண் உள்ளடக்கிய வசதி ஏற்படுத்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு, மக்களிடம் எழுந்துள்ளது.தமிழக அரசு, மக்களுக்கு குறைந்த விலையில் தரமான மருந்து, மாத்திரைகள் கிடைக்க, மாநிலம் முழுதும் 1,000 முதல்வர் மருந்தகங்களை துவக்கியுள்ளது. தனியார் தொழில் முனைவோரும், கூட்டுறவு சங்கங்களும் இவற்றை நடத்துகின்றன.இந்த மருந்தகங்களில், வெளிச்சந்தையை விட, 50 முதல் 75 சதவீதம் வரை குறைந்த விலைக்கு மருந்துகள் விற்கப்படுகின்றன. கேட்கும் மருந்துகள் கிடைக்காதது உள்ளிட்டவை தொடர்பாக புகார் அளிக்க வசதி ஏற்படுத்துமாறு, வாடிக்கையாளர்களிடம் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது:தனியார் மருந்தகங்களில் கேட்கும் மருந்துகள் இல்லை என்றாலும், பதிவு செய்து வாங்கி வைப்பதாகவும், நாளைக்கு வருமாறும் கூறுவர். முதல்வர் மருந்தகத்தில், சில மருந்து, மாத்திரைகள் கிடைப்பதில்லை. நாளைக்கு வந்தால் கிடைக்குமா என்றாலும் பதில் இல்லை.மருந்தக வேலை நேரமும் தெரிவதில்லை. இது குறித்து, கூட்டுறவு அதிகாரிகளிடம் கேட்டாலும் தகவல் தெரிவிப்பதில்லை. எனவே, முதல்வர் மருந்தகம் தொடர்பாக புகார் தெரிவிக்கவும், சந்தேகங்களை கேட்கவும், தொலைபேசி எண் அறிவிக்க வேண்டும். மேலும், மருந்தகத்தை நிர்வகிக்கும் அதிகாரிகளின் மொபைல் போன் எண்களையும் தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

ரூ.27 லட்சம்

முதல்வர் மருந்தகம் திட்டத்தை, முதல்வர் ஸ்டாலின், பிப்., 24ல் துவக்கி வைத்தார்.இம்மாதம், 3ம் தேதி வரை, தனியார் நடத்தும் மருந்தகங்களில், 13.72 லட்சம் ரூபாய்; கூட்டுறவு மருந்தகங்களில், 13.69 லட்சம் ரூபாய் என, மொத்தம், 27.42 லட்சம் ரூபாய்க்கு மருந்துகள் விற்பனையாகி உள்ளன.இத்திட்டத்தால் இதுவரை, 50,053 பேர் பயன் அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

JAYACHANDRAN RAMAKRISHNAN
மார் 06, 2025 11:22

கொஞ்சம் பொறுமையாக இருக்கவும். பிரதம மந்திரி மருந்தகங்கள் ஆன பணம் இன்னும் தமிழக அரசுக்கு வரவில்லை. வந்தவுடன் அதனை படை மாற்றி முதலமைச்சர் மருந்தகங்களுக்கு தரப்படும். அதன் பின்னர் மருந்துகள் கிடைக்கும். இந்த மத்திய அரசின் பணத்தை மடை மாற்றத்தான் தமிழக அரசு முதலீடு செய்து இப்போது ஆரம்பித்து உள்ளது. அடுத்த தவணை மத்திய அரசின் பிரதம மந்திரி மருந்துகங்களுக்கான பணம் வந்தவுடன் அக்கவுண்ட் மாற்றி உடனடியாக விடுக்கப்படும். அதற்கு பின் இது போன்ற சிரமம் இருக்காது. எப்படி மத்திய அரசின் பிரதமர் காப்பீடு திட்டம் பணம் வாங்கி முதலமைச்சர் காப்பீடு திட்டமாக தரப்படுகிறதோ அது போல இதுவும் தடையின்றி கிடைக்கும். சிரமத்திற்கு மன்னிக்கவும்.


ஆரூர் ரங்
மார் 06, 2025 10:55

அரசு ஆஸ்பத்திரிகளில் பெரும்பாலான மருந்துகள் இருப்பு வைப்பதில்லை. மருந்தாளுநர் பதவிகளில் பாதி நிரப்பப்படாமல் காலியாகவே உள்ளன. அதை சரிசெய்ய முயற்சிக்காமல் அரசே வணிகம் செய்வது தவறு. சுய தொழிலாக சிறு கடைகள் நடத்தும் பார்மசி டிப்ளமா படித்தவர்களுக்கு கடும் பாதிப்பு.


ஆரூர் ரங்
மார் 06, 2025 10:50

வாடிக்கையாளர்கள் யாருமில்லாத முதல்வர் மருந்தகத்தில் நான்கு பேரை வேலைக்கு வைத்துள்ளனர். நான்கு நாட்களுக்கு முன் ஆஸ்பத்திரி பார்மசியைத் தவிர்த்துவிட்டு முதல்வர் மருந்தக கடையில் விசாரித்தேன். டாக்டர் சீட்டில் எழுதியிருந்த நான்கு மருந்துகளும் ஸ்டாக் இல்லை. நால்வரும் ஒரு யூடியூபருக்கு பேட்டி கொடுப்பதில் மும்முரமாக இருந்தனர். வெறுத்துப்போய் மத்திய அரசின் ஜன் அவுஷதி கடையில் எல்லாவற்றையும் வாங்கினேன். தயவு செய்து ஏட்டிக்குப் போட்டியாக திட்டங்களைத் துவக்கி மக்களது வரிப்பணத்தை வீணடிக்க வேண்டாம்.


vijai hindu
மார் 06, 2025 14:34

அவங்க அப்பாவும் வீட்டு பணமா இது மக்களோட வரி பணம் அதான்


Rajendiran G
மார் 06, 2025 08:25

Makal.methu.Akarainal.podavillai.


RAMAKRISHNAN NATESAN
மார் 06, 2025 08:19

23P சுயநினைவுடன் உள்ளாரா ?


naranam
மார் 06, 2025 07:47

வாய்ச் சொல்லில் வீரரடா!


கி ராஜராஜேஸ்வரி நன்மங்கலம்
மார் 06, 2025 06:41

மக்கள் மருந்தகம் என்ற பெயரில் மத்திய அரசு கொண்டு வந்த திட்டத்தை செயல்படுத்த விடாமல் அல்லது அதே போன்று கிட்டத்தட்ட அதையே காப்பியடிப்பது போல் திட்டங்களை தொடங்கியுள்ளனர். மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களுக்கு ஆதரவளிக்காமல் அதை எதிர்ப்பது போல் எதிர்த்து விட்டு வேறு பெயரில் அதே திட்டங்களை அமல்படுத்துகின்றனர். தேசிய கல்வி திட்டத்தையும் எதிர்த்து விட்டு அதில் உள்ள எல்லா அம்சங்களையும் தாங்கள் கொண்டு வந்தது போல் தங்கள் பெயரில் ஆரம்பிப்பது என்னவென்று சொல்வது இவர்களின் செயலை? இவர்களுடைய பயமெல்லாம் எங்கே தேசிய கட்சி தமிழகத்தில் காலூன்றி விடுமோ என்பது தான் என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது.அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்


அப்பாவி
மார் 06, 2025 06:21

இதே மருந்துகளை மக்கள் வாங்கி தனியார் மருந்தகங்களுக்கு வித்து அவிங்க அதே மருந்தை அதிக விலைக்கு வித்தாலும் வியப்பில்லை. திருட்டு திராவிடனுக்கு தெரியாத ட்ரிக்கே இல்லை.


SUBBU,MADURAI
மார் 06, 2025 07:34

உண்மையிலேயே இது நம்ம அப்புசாமி கருத்துதானா நம்பவே முடியல...


மாலா
மார் 06, 2025 04:28

மக்கள் மருந்தகமும் இதே நிலதான் மருந்து ச.தரம் சரியில்ல வெட்டி வேல


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை