வாசகர்கள் கருத்துகள் ( 16 )
கடன் கொடுத்தவன் தற்கொலை செய்து கொண்டால் கடன் வாங்கியவனுக்கு தண்டனை
அப்படியானால் இனிமேல் கடன் கொடுக்கும் வங்கிகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் குறைந்து விடும்.. அது பரவாயில்லையா? கடன் வாங்குபவர்கள் தங்கள் தகுதிக்கு மீறி வாங்குவதும் வாழ்க்கையில் சிக்கலுக்கு ஒரு காரணம். ஒரு புறம் வங்கிகள் கடன் கொடுக்கக் கூவி கூவி அழைக்கின்றன.. மறு புறம் மக்களின் பேராசையும் சேர்ந்தே இது போன்ற பிரச்சனைகளுக்குக் காரணமாக அமைகின்றன. தேர்தல் வாக்குறுதிகளை மனதில் வைத்துக் கொண்டு எத்தனையோ மக்கள் கடன் எப்படியும் தள்ளுபடியாகி விடும் என்ற பேராசை கொண்டு கடன் வாங்குகிறார்கள். இனிமேல் கடன் கொடுப்பவர்கள் பாடு திண்டாட்டம் தான்!
இனிமே வசூல் பண்ண முடியலைன்னா யாராவது வட்டம், மாவட்டம் காலில் விழுந்து கெஞ்சினா பாதியாவது வசூல் பண்ண முடியும். மீதி பாதி அவங்க பாக்கெட்களுக்குள்? அதுக்கு வசதியாதான் சட்டம் கொண்டு வர்றாங்களா?
முதலில் ஹெல்மெட்டிற்கு பணம் வாங்குவதை நிறுத்தச் சொல்லுங்கள்
பணம் இல்லாத போது கிடைக்கும் அனுபவம் மற்றும் அறிவுரைகள் உங்கள் வாழ்க்கையின் செம்மை படுத்த உதவும் அதற்காக பணம் இல்ல வாழ்க்கையினை வாழ முயற்சி செய்ய வேண்டாம் அது ஓர் நரகம் ஆதலினால் கடன் இல்லா வாழ்க்கையினை வாழ முயற்சி செய்யுங்கள் குழந்தைகளுக்கு சிறு வயது முதல் சேமிப்பு பழக்கத்தை கற்றுக் கொடுங்கள் பணம் சம்பாதிப்பது மிகவும் சுலபமான காரியம் என்று குழந்தைகளிடம் சொல்லி வளர்க்காதீர்கள் ஏனெனில் இவ்வாறு சொல்லி வளர்த்தால் அவர்கள் பணத்தை செலவு செய்த பின் பணத்தை சம்பாதிக்கும் முயற்சி செய்வார்கள் இது மிகவும் தவறான உதாரணமாகும் கடன் வாங்கி மொய் வைப்பது ,கடன் வாங்கி திருமணம், கடன் வாங்கி பைக் கார் வீடு வாங்குவது இவை எல்லாம் நம்மை நாமே ஊக்குவித்துக் கொண்டிருந்தால் மிகப்பெரிய கடன் சுமை ஏற்பட்டு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிஷமும் நம் சுயமாக சிந்திக்க இயலாமல் கடன் கடன் என்று வாழ்க்கையை முழுவதும் கழிந்து விடும் ஆதலினால் கடன் வாங்காதீர்கள்
காவலர்கள் கட்டாயமாக பொது மக்களை மடக்கி, அதட்டி, மிரட்டி, பணம் புடுங்குகிறார்கள். . இதனாலும் சில இளைஞர்கள் ஏன் பணம் பறிபோனது என்று வீட்டில் சொல்ல இயலாமல் பொய்கள் சொல்லியும் தற்கொலைக்கும் தூண்டப்படுகிறார்கள். தரவில்லை என்றால் தங்கள் வண்டியில் அறைக்கு அழைத்து செல்கின்றனர். இதையும் கவனிக்குமா அரசு.
அப்ப யாரும் கடன் கேட்காதீர்கள் கடன் கொடுக்காதீர்கள், டாஸ்மாக் கில் 10 ரூபாய் அடாவடியாக புடுங்குகிறார்கள் அவர்களை இச்சட்டத்தில் நிறுத்தி தக்க தண்டனை வாங்கித் தருவாரு
உண்மையிலேயே கடன் தேவைப்படுபவர்களுக்கு இனி யார் கடன் தருவார்கள். கடன் கொடுத்தவர்களுக்கு சில கண்டிஷன்கள் போடும்போது வாங்கியவர்களுக்கும் கண்டிஷன் போட வேண்டியதுதானே?
திமுக காரன் எத்தனை பேர் வட்டிக்கு பணம் விடுறாங்க அவங்க வசூல் பண்ணும் போது போலீஸ வச்சு ரவுடி வச்சு மிரட்டு வாங்க அங்க போய் போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுக்க முடியாது. எப்படி கடன் கொடுப்பான் இதெல்லாம் ஒரு சட்டம் .தேவைக்கு பணம் கடன் கொடுக்கிறார்கள் ஆனால் திரும்பி கேட்கக் கூடாது என்றால் இனிமே கடன் யாரும் கொடுக்க மாட்டார்கள்
ஒரு மாசாம் கரண்ட் பில் கட்ட்லேன்னா ஃப்யூசைப் புடுங்கிட்டு போற களவாணிகள், வீட்டு வரி, புதை சாக்கடை வரி கட்டலேன்னா அபராதம் விதிச்சு வசூலிக்கும் நல்லவங்களுக்கு இந்த விதி பொருந்துமா?
நிரவ் மோடி மல்லையா இவர்களை எதுக்குய்யா கைது செய்யனும். வங்கி மேலாளர் ரிசர்வ் வங்கி உயர்அதிகாரி இவர்களை 5 ஆண்டு உள்ளே தள்ளுமா இந்த சட்டம். ஓட்டுவங்கி அரசியலும் ஓட்டு வங்கி சட்ட திட்டங்களும். பாழா போகும் நாடும் மக்களும். ஆயிரம் ரூபாய்க்கு ஓட்டுபோடும் நீங்கள் அனுபவிக்க வேண்டும்.