வாசகர்கள் கருத்துகள் ( 5 )
அன்று கம்ப்யூட்டர் வந்தால் வேலை பறிபோகும் என்றனர். இன்று ஏஐ வந்ததால் அதே நிலைதான் என்கின்றனர். ஒரு நான்கைந்து வருடங்களுக்கு அப்படி இருக்கலாம். பின்னர் சரியாகிவிடும் என்று நினைக்கிறேன். வேலைவாய்ப்பு அனைவருக்கும் கிட்டும்படி ஏஐ தொழில்நுட்பங்கள் உருவாகலாம் உருவாக்கலாம்.
ஏஐ தொழில்நுட்பம் காரணமாக இன்டெல், மைக்ரோசாப்ட், டிசிஎஸ் உள்பட 218 நிறுவனங்களில் 1,12,000 தொழில் நுட்ப ஊழியர்கள் தங்கள் வேலைகளை இழந்துள்ளதாக செய்தி. நாளை ஏஐ யை விட வேறு ஒன்று கண்டறியப்படும், அறிமுகப்படுத்தப்படும். பிறகு ஏஐ படித்தவர்களுக்கே வேலை போகும். வளர்ச்சி முக்கியம். ஆனால் அது மனிதகுலத்தை அழிப்பதாக இருக்கக்கூடாது.
ஏ.ஐ., பாடம் கற்பதால், மாணவர்களின் இயற்கையான சிந்திக்கும் திறன் பாதிக்கப்படாதா? அதெல்லாம் எப்பவோ போச்சு. என்று கால்குலேட்டர் போன்றவைகள் கண்டுபிடிக்கப்பட்டதோ, அன்றே மாணவர்களின் சுயமாக சிந்திக்கும் திறன் அழியத்தொடங்கிவிட்டது. இரண்டு பிளஸ் இரண்டு எவ்வளவு என்றால், 60, 70 க்கு முந்தைய மாணவர்கள் அவர்கள் கற்ற வாய்ப்பாட்டின் மூலம் விடை கூறுவார்கள். பிறகு பிறந்த மாணவர்கள் கால்குலேட்டர் உதவியுடன் கூற ஆரம்பித்தார்கள். இப்பொழுது மொபைல் போன், கம்ப்யூட்டர், லேப்டாப் என்று உபயோகித்து விடை கூறுகிறார்கள். இது என்னுடைய கணிப்பு. உங்கள் கணிப்பு என்னவோ அதை பதிவிடலாம் - என்னை திட்டாமல்
எங்களுக்கு ஏ ஐ என்ற ஒரு புண்ணாக்கும் வேண்டாம். எங்கள் திராவிட மாடல் ஆட்சியில் இ வி ராமசாமி நாயக்கர் கொள்கைகளே போதும்.
1-ம் வகுப்பு முதலாகவே ஆரம்பிக்கலாமே. ஏன் 3-ம் வகுப்பு வரை காத்திருக்க வேண்டும்?