வாசகர்கள் கருத்துகள் ( 10 )
TVK Anaithu thoguthigalilum deposit gali..
நிஜத்தை விளக்கும் வகையில் கருத்துபடம்... ஆனால் இவருக்கு அறிவில்லை.... சினிமா போதை அப்படி....
ரொம்பவே அளவுக்கு அதிகமான முக்கியத்துவம் நாம் கொடுத்தால் அது தன்னை சிங்கம் என நினைத்துக் கொள்ளுமாம். அண்மையில் முகநூலில் நான் படித்த ஒரு வைர வரிகள்.
காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளோடு கூட்டணி வைப்பதற்கு தவெக முயற்சிக்கும். விஜய்யை முதல்வர் வேட்பாளர் என்று அவை ஒப்புக் கொள்ளலாம். காங்கிரஸ் கேட்கும் தொகுதிகள் அதற்குக் கிடைக்கலாம்.
திமுக எதிர்ப்பு ஓட்டுக்கள் பிரிந்து திமுக கூட்டணிக்கு புத்துயிர் வரும். 1989இல் அதிமுக இரண்டாக பிரிந்து ஓட்டுக்கள் பிரிந்து திமுக 146 இடங்களில் வென்றதை மறந்து விடக்கூடாது
முட்டாள்தனமான முடிவு. இது சினிமா இல்லை விஜய். உங்கள் முடிவால் பலனடையபோவது நிச்சயம் தி.மு.க.தான். ஒரு வலுவான கூட்டு இல்லாமல் உங்களால் கட்சியையும், உங்களையும் காப்பாற்றிக்கொள்ளவே முடியாது. உங்களுக்கு இந்த ஆலோசனையை கூறியவரின் பின்புலத்தை ஆலோசியுங்கள். விசாரியுங்கள். இன்று சகுனிகள் ஏராளம். எல்லாவற்றையும்விட இறந்துபோன 41 ஜீவன்கள் ஆன்மாக்களுக்காக ஒரு சிறிய தியாகம் செய்யுங்கள். இல்லையென்றால் அந்த ஆன்மாக்கள் உங்களை மன்னிக்காது.
ஐயா இது குருமா மற்றும் அழகிரிக்கு விடுக்கப்பட்ட சமிங்கஞை.
ஆதவன் அர்ஜீனா திமுகவின் பி டீம் போல் செயல்படுகிறார் போலும். இதேபோல் நிர்மல் குமார். முதல் தேர்தலிலே மே முதல்வர் ஆக இது சினிமா இல்லை.
எந்த நிர்வாகி? அது அதிமுக நிர்வாகி ஆக இருக்கும் அடுத்தவரை முதல்வர் ஆக்க ஒன்றும் சினிமாவை விட்டு விட்டு வரவில்லை
தவெக திமுகவின் கிளை கட்சி. மநீமை போல திமுகவால் ஓட்டுகளை பிடிப்பதற்காக உருவாக்கப்பட்டது. இதன் செயல்பாடுகள் அனைத்தும் திமுகவால் கட்டுப்படுத்தப்படும். இந்த கட்சி யாருடனும் கூட்டு சேர மாட்டார்கள். இந்த கட்சியின் ஒரே வேலை இளைஞர்கள் புதிய வாக்காளர்கள் ஓட்டுகளை பிரித்து அதிமுக போன்ற எதிர்க்கட்சிகளுக்கு செல்லாமல் செய்வது மட்டுமே. சென்ற சட்டமன்றத் தேர்தலில் மநீமையை உருவாக்கி திமுக வெற்றி பெற்றது. அதே போல இப்போது தவெகவை உருவாக்கி திமுக தேர்தல் களம் காணுகிறது. திமுகவின் சகோதர கட்சி என்பதை புரிந்து கொள்ள தவெக திமுகவை உருவாக்கிய இரு பெரும் தலைவர்கள் ஆன அண்ணாதுரை எம்ஜிஆர் இருவரை தனது கட்சியின் நாயகர்களாக காட்டுவதில் இருந்தே புரிந்து கொள்ளலாம். மேலும் எங்கே விட்டால் மக்கள் ஈவெராவை மறந்து போவார்களோ அதனால் திராவிடம் மறந்து போய் விடுமோ என்ற அச்சத்தில் அவ்வப்போது திமுக இளைஞர் இடையே ஈவெரா மறக்காமல் இருக்க இது போன்று சினிமாக்காரர்களை வைத்து அவ்வப்போது ஈவெராவுக்கு உயிர் கொடுத்து கொண்டு இருப்பார்கள். தவெக கட்சி திமுகவால் உருவாக்கப்பட்டது என்பதை புரிந்து கொள்ள தவெக அதிமுக கூட்டணி அழைப்பை நிராகரித்தே மிகச் சிறந்த உதாரணம். எந்த காரணமும் இல்லாமல் திரு.ஆதவ் அர்ஜூனா தவெக சென்றதே மற்றும் ஒரு உதாரணம். திமுகவின் ஆணைகளை கேட்டு ஒருங்கிணைத்து தவெகவில் செயல்படுத்துவதே இவரது வேலை. திரு.ஜோசப் விஜய் அவர்கள் இன்னமும் ஒரு விளையாட்டு பிள்ளையாக பணக்கார இளைஞர்களுக்கு உண்டான விளையாட்டு பிள்ளை போலவே இருப்பதாலும் திரு.ஜோசப் விஜய் அருகில் உள்ளவர்களுக்கு அரசியல் அனுபவம் குறைவாக இருப்பதாலும் கட்சி கூட்டங்களில் எதை எப்படி பேச வேண்டும் என்ற அனுபவம் இல்லாததாலும் அரசியல் அனுபவம் மற்றும் ஒரு கட்சியில் முக்கிய நிர்வாகியாக இருந்தவரும் ஏறத்தாழ திரு ஜோசப் விஜய் அவர்கள் வயதை ஒத்த திரு.ஆதவ் அர்ஜூனாவை திமுக அங்கே அனுப்பியுள்ளது. தமிழக இளைஞர்கள் சினிமா அடிமையானவர்கள் அறிவிலிகள் என்பதை நன்கு உணர்ந்து கொண்ட தேர்தல் வியூக நிபுணர் கொடுத்த ஆலோசனை சென்ற தேர்தலில் திமுக வெற்றி பெற உதவியது. அதே ஃபார்முலா அதே தேர்தல் வியூக நிபுணரால் தரப்பட்டு உருவாக்கப்பட்டது மற்றும் கட்சி உருவாக்கியதும் அதே தேர்தல் வியூக நிபுணர் தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இதே போல் கட்சிகளை உருவாக்கி தன்னுடன் இணைத்து கொண்டால் எப்போதும் தான் ஒரு மிகப் பெரிய கூட்டணி கட்சி என்பதை திமுக மக்களிடையே காட்டி கொள்ளவும் தொகுதி ஒதுக்கீடு செய்வதிலும் திமுகவிற்கு எந்த பிரச்சினையும் வராமல் தான் எப்போதும் பிக் பாஸ் என திமுக காட்டிக் கொள்ளவும் எதிர்காலத்தில் உதவும் என்பதும் திமுகவிற்கு உதவும். திரு. உதயநிதி ஸ்டாலின் மகன் திமுகவிற்கு தலைவராக வரும் பொழுது அவருக்கு எந்த வித தொல்லையும் எதிர்ப்பும் இல்லாமல் தமிழகத்தை தனது இஷ்டத்துக்கு ஆட்சி செய்து ராஜாவாக இருக்க வேண்டும் என்னும் நல்ல எண்ணத்தில் செய்யப்படும் திட்டமே இது. வாழ்க தமிழகம். தமிழகத்தில் மக்கள் தங்கள் பிற்போக்கு தனத்தை விட்டு முற்போக்கு சிந்தனையோடு பகுத்தறிவு உபயோகித்து மாறா விட்டால் இன்னும் ஜந்து அல்லது பத்து வருடங்களுக்கு பிறகு திமுக தானே எதிர் கட்சி நியமித்து தேர்தல் என்னும் நாடகத்தை நடத்தி தானே என்றும் நிரந்தரமாக தமிழகத்தை ஆளும்.