உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / பொதுக்குழு வாயிலாக கூட்டணிக்கு கதவடைப்பு: விஜய் முடிவால் த.வெ.க., நிர்வாகிகள் அப்செட்

பொதுக்குழு வாயிலாக கூட்டணிக்கு கதவடைப்பு: விஜய் முடிவால் த.வெ.க., நிர்வாகிகள் அப்செட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சமீபத்தில் நடந்த த.வெ.க., பொதுக்குழு வாயிலாக, அக்கட்சியின் தலைவர் விஜய் கூட்டணிக்கு கதவடைப்பு செய்ததால், கட்சியினர் கடும் 'அப்செட்' ஆகி இருப்பதாக கூறப்படுகிறது. கரூர் சம்பவத்துக்குப் பின், ஒரு மாத காலத்துக்கு த.வெ.க., செயல்பாடுகளில் தொய்வு ஏற்பட்டது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=8rk6lboi&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0வழக்குகளால் நிலை குலைந்து போன நிர்வாகிகள், அடுத்து என்ன செய்வது என புரியாமல் தவித்தனர். 41 பேர் பலியான சம்பவம் தொடர்பான விசாரணையை, சி.பி.ஐ.,க்கு உச்ச நீதிமன்றம் மாற்றி உத்தரவிட்ட பின் தான், த.வெ.க., தொண்டர்களும், நிர்வாகிகளும் நிம்மதி அடைந்தனர். நடந்த சம்பவத்திற்கு, த.வெ.க., தலைவர் விஜய் கூட்டத்துக்கு தாமதமாக வந்ததே காரணம் என, போலீஸ் மற்றும் ஆளும் கட்சி தரப்பில் குற்றம்சாட்டப்படும் நிலையில், 'தி.மு.க.,வின் திட்டமிட்ட சதியே காரணம்' என, த.வெ.க., தரப்பில் கூறி வந்தனர். அதற்கேற்ப, கரூர் சம்பவத்தில் இரங்கல் வீடியோ வெளியிட்ட த.வெ.க., தலைவர் விஜய், 'என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்; என் கட்சித் தொண்டர்களை பழிவாங்காதீர்கள்' என, முதல்வருக்கு கோரிக்கை விடுத்தார். ஆணித்தரமாக இதனால், ஏற்கனவே தி.மு.க., - த.வெ.க., இடையே எரிந்து கொண்டிருந்த எதிர்ப்பு கூடுதலானது. இதையடுத்து, வரும் சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்ற கோபம் த.வெ.க.,வினரிடம் காணப்படுகிறது. 'தி.மு.க., கூட்டணியை வீழ்த்த வேண்டும் என்றால், த.வெ.க., தனித்து நிற்பதால், அது நடந்து விடாது' என, கட்சியின் ஒவ்வொரு தொண்டரும் நிர்வாகியும் சொல்லத் துவங்கினர். தனித்து நிற்பதால், தி.மு.க.,வுக்கு எதிரான ஓட்டுகள் பிரிந்து, மீண்டும் தி.மு.க.,வே வெற்றி பெறும் என்பதை, அக்கட்சியினர் ஆணித்தரமாக நம்புகின்றனர். இதனால், கடந்த 5ல் கூட்டப்பட்ட கட்சி பொதுக்குழு கூட்டத்தில், 'கூட்டணி தொடர்பாக ஏற்கனவே விஜய் அறிவித்த முடிவில் இருந்து, அவர் எப்படியும் பின்வாங்குவார்; சில சமரசங்களுக்கு உட்படப் போவதாக அறிவிப்பார்' என, அவரது கட்சியினர் எதிர்பார்த்தனர். ஆனால் வழக்கம்போல, 'தி.மு.க., - த.வெ.க., இடையே தான் போட்டி' என்றும், 'நானே முதல்வர் வேட்பாளர்' என்றும் பொதுக்குழுவில் விஜய் அறிவித்து விட்டதால், ஒட்டுமொத்த த.வெ.க.,வினரும் அதிர்ச்சியில் உள்ளதாக த.வெ.க., வட்டாரங்கள் கூறுகின்றன. அக்கட்சி வட்டாரங்கள் மேலும் கூறியதாவது: கட்சி துவங்கியபோது, தி.மு.க., மீது இருந்த வெறுப்பு, கரூர் சம்பவத்துக்குப் பின் விஜய்க்கு அதிகமாகி உள்ளது. சட்டசபை தேர்தலில் எந்த சமரசத்துக்கும் சென்று, தி.மு.க.,வை வீழ்த்தியாக வேண்டும் என்ற மனநிலையில் தான் இருந்தார். கள நிலவரம் கரூர் சம்பவத்தால் ஏற்பட்ட கொந்தளிப்புகளே அதற்கு காரணம். அதை மையமாக வைத்து தான், 'கட்சியின் பொதுக்குழுவை கூட்டி விவாதித்து, நல்ல முடிவெடுக்க வேண்டும்' என நினைத்தார். அதற்கேற்ப, கடந்த 5ல் பொதுக்குழு கூட்டப்பட்டது. ஆனால், அதற்கு முன் விஜயை சந்தித்த கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிலர், வழக்கம் போல விஜய் மனதை மாற்றி விட்டனர். அதனால், 'கூட்டணி என்றாலும், முதல்வர் வேட்பாளர் விஜய் தான் என்று, பொதுக்குழுவில் அறிவிப்போம்' என, உசுப்பி விட்டுள்ளனர். அவர்களுடைய கருத்துகளை ஏற்ற விஜய், பொதுக்குழுவில் அதற்கேற்ப பேசினார்; தீர்மானங்களும் தி.மு.க.,வுக்கும், அரசுக்கும் எதிராகவுமே இருந்தன. கட்சியின் தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனாவும், தி.மு.க., மீதான வன்மத்தையே வெளிப்படுத்தினார். இதை கட்சியினர் வெகுவாக ரசித்தாலும், 'கள நிலவரம் அறியாமல், தனித்து போட்டி என்பதுபோல தீர்மானம் நிறைவேற்றியது, அ.தி.மு.க., கூட்டணிக்கு கதவடைக்கும் விஷயம்' என கொந்தளித்தனர். 'வலுக்கட்டாயமாக கூட்டணி கதவுகளை ஏன் அடைக்க வேண்டும்?' என, கேட்டு அங்கலாய்க்கும் கட்சியினர், 'இதே நிலை தொடர்ந்தால், த.வெ.க., வெற்றியடைய வாய்ப்பில்லை' என்ற முடிவுக்கும் வந்து விட்டனர். தனித்து போட்டியிடும்பட்சத்தில், தி.மு.க., எதிர்ப்பு ஓட்டுகள் பிரிந்து, அக்கட்சிக்கு சாதகமாக அமையும் என்ற அடிப்படையான விஷயத்தைக்கூட யாரும் புரிந்து கொள்ளவில்லை. வெற்றி உறுதி த.வெ.க.,வை மையமாக வைத்து அரசியல் செய்வதும், அக்கட்சி சார்பில் 'சீட்' பெற்று, தேர்தலை எதிர்கொள்வதும் ஆபத்தானது என்ற முடிவுக்கு, பெரும்பாலான கட்சியினர் வந்துள்ளனர். இதனால், 'சீட்' பெறும் முயற்சியில் இருந்த த.வெ.க., நிர்வாகிகள் பலரும் தங்கள் முடிவில் இருந்து பின்வாங்கி உள்ளனர். வெற்றி உறுதி என்ற நிலைப்பாட்டில் இல்லாத த.வெ.க., சார்பில் தேர்தல் களத்துக்கு செல்வது உசிதமல்ல என முடிவெடுத்து, கட்சியில் 'சீட்' பெறும் முனைப்பில் காய் நகர்த்தி வந்த அனைவரும் திடீரென அமைதியாகி விட்டனர். இந்த விரக்தி மனநிலை, கட்சியின் அடிமட்டத்தில் இருந்து மேல் மட்டம் வரை வியாபித்திருக்கிறது. ஏற்கனவே, அனைத்து அரசியல் நிகழ்வுகளையும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டிருக்கும் தி.மு.க., தலைமை, தற்போது த.வெ.க.,வின் இந்த நிச்சயமற்ற சூழலையும், தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தும் முனைப்பில் இருக்கிறது. இவ்வாறு அக்கட்சி வட்டாரங்கள் கூறின. - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Sanjay
நவ 09, 2025 09:52

TVK Anaithu thoguthigalilum deposit gali..


பாரத புதல்வன்
நவ 09, 2025 09:48

நிஜத்தை விளக்கும் வகையில் கருத்துபடம்... ஆனால் இவருக்கு அறிவில்லை.... சினிமா போதை அப்படி....


Sun
நவ 09, 2025 09:30

ரொம்பவே அளவுக்கு அதிகமான முக்கியத்துவம் நாம் கொடுத்தால் அது தன்னை சிங்கம் என நினைத்துக் கொள்ளுமாம். அண்மையில் முகநூலில் நான் படித்த ஒரு வைர வரிகள்.


Swaminathan L
நவ 09, 2025 09:26

காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளோடு கூட்டணி வைப்பதற்கு தவெக முயற்சிக்கும். விஜய்யை முதல்வர் வேட்பாளர் என்று அவை ஒப்புக் கொள்ளலாம். காங்கிரஸ் கேட்கும் தொகுதிகள் அதற்குக் கிடைக்கலாம்.‌


எஸ் எஸ்
நவ 09, 2025 09:17

திமுக எதிர்ப்பு ஓட்டுக்கள் பிரிந்து திமுக கூட்டணிக்கு புத்துயிர் வரும். 1989இல் அதிமுக இரண்டாக பிரிந்து ஓட்டுக்கள் பிரிந்து திமுக 146 இடங்களில் வென்றதை மறந்து விடக்கூடாது


rasaa
நவ 09, 2025 08:56

முட்டாள்தனமான முடிவு. இது சினிமா இல்லை விஜய். உங்கள் முடிவால் பலனடையபோவது நிச்சயம் தி.மு.க.தான். ஒரு வலுவான கூட்டு இல்லாமல் உங்களால் கட்சியையும், உங்களையும் காப்பாற்றிக்கொள்ளவே முடியாது. உங்களுக்கு இந்த ஆலோசனையை கூறியவரின் பின்புலத்தை ஆலோசியுங்கள். விசாரியுங்கள். இன்று சகுனிகள் ஏராளம். எல்லாவற்றையும்விட இறந்துபோன 41 ஜீவன்கள் ஆன்மாக்களுக்காக ஒரு சிறிய தியாகம் செய்யுங்கள். இல்லையென்றால் அந்த ஆன்மாக்கள் உங்களை மன்னிக்காது.


duruvasar
நவ 09, 2025 08:31

ஐயா இது குருமா மற்றும் அழகிரிக்கு விடுக்கப்பட்ட சமிங்கஞை.


VENKATASUBRAMANIAN
நவ 09, 2025 08:29

ஆதவன் அர்ஜீனா திமுகவின் பி டீம் போல் செயல்படுகிறார் போலும். இதேபோல் நிர்மல் குமார். முதல் தேர்தலிலே மே முதல்வர் ஆக இது சினிமா இல்லை.


முருகன்
நவ 09, 2025 07:56

எந்த நிர்வாகி? அது அதிமுக நிர்வாகி ஆக இருக்கும் அடுத்தவரை முதல்வர் ஆக்க ஒன்றும் சினிமாவை விட்டு விட்டு வரவில்லை


JAYACHANDRAN RAMAKRISHNAN
நவ 09, 2025 05:54

தவெக திமுகவின் கிளை கட்சி. மநீமை போல திமுகவால் ஓட்டுகளை பிடிப்பதற்காக உருவாக்கப்பட்டது. இதன் செயல்பாடுகள் அனைத்தும் திமுகவால் கட்டுப்படுத்தப்படும். இந்த கட்சி யாருடனும் கூட்டு சேர மாட்டார்கள். இந்த கட்சியின் ஒரே வேலை இளைஞர்கள் புதிய வாக்காளர்கள் ஓட்டுகளை பிரித்து அதிமுக போன்ற எதிர்க்கட்சிகளுக்கு செல்லாமல் செய்வது மட்டுமே. சென்ற சட்டமன்றத் தேர்தலில் மநீமையை உருவாக்கி திமுக வெற்றி பெற்றது. அதே போல இப்போது தவெகவை உருவாக்கி திமுக தேர்தல் களம் காணுகிறது. திமுகவின் சகோதர கட்சி என்பதை புரிந்து கொள்ள தவெக திமுகவை உருவாக்கிய இரு பெரும் தலைவர்கள் ஆன அண்ணாதுரை எம்ஜிஆர் இருவரை தனது கட்சியின் நாயகர்களாக காட்டுவதில் இருந்தே புரிந்து கொள்ளலாம். மேலும் எங்கே விட்டால் மக்கள் ஈவெராவை மறந்து போவார்களோ அதனால் திராவிடம் மறந்து போய் விடுமோ என்ற அச்சத்தில் அவ்வப்போது திமுக இளைஞர் இடையே ஈவெரா மறக்காமல் இருக்க இது போன்று சினிமாக்காரர்களை வைத்து அவ்வப்போது ஈவெராவுக்கு உயிர் கொடுத்து கொண்டு இருப்பார்கள். தவெக கட்சி திமுகவால் உருவாக்கப்பட்டது என்பதை புரிந்து கொள்ள தவெக அதிமுக கூட்டணி அழைப்பை நிராகரித்தே மிகச் சிறந்த உதாரணம். எந்த காரணமும் இல்லாமல் திரு.ஆதவ் அர்ஜூனா தவெக சென்றதே மற்றும் ஒரு உதாரணம். திமுகவின் ஆணைகளை கேட்டு ஒருங்கிணைத்து தவெகவில் செயல்படுத்துவதே இவரது வேலை. திரு.ஜோசப் விஜய் அவர்கள் இன்னமும் ஒரு விளையாட்டு பிள்ளையாக பணக்கார இளைஞர்களுக்கு உண்டான விளையாட்டு பிள்ளை போலவே இருப்பதாலும் திரு.ஜோசப் விஜய் அருகில் உள்ளவர்களுக்கு அரசியல் அனுபவம் குறைவாக இருப்பதாலும் கட்சி கூட்டங்களில் எதை எப்படி பேச வேண்டும் என்ற அனுபவம் இல்லாததாலும் அரசியல் அனுபவம் மற்றும் ஒரு கட்சியில் முக்கிய நிர்வாகியாக இருந்தவரும் ஏறத்தாழ திரு ஜோசப் விஜய் அவர்கள் வயதை ஒத்த திரு.ஆதவ் அர்ஜூனாவை திமுக அங்கே அனுப்பியுள்ளது. தமிழக இளைஞர்கள் சினிமா அடிமையானவர்கள் அறிவிலிகள் என்பதை நன்கு உணர்ந்து கொண்ட தேர்தல் வியூக நிபுணர் கொடுத்த ஆலோசனை சென்ற தேர்தலில் திமுக வெற்றி பெற உதவியது. அதே ஃபார்முலா அதே தேர்தல் வியூக நிபுணரால் தரப்பட்டு உருவாக்கப்பட்டது மற்றும் கட்சி உருவாக்கியதும் அதே தேர்தல் வியூக நிபுணர் தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இதே போல் கட்சிகளை உருவாக்கி தன்னுடன் இணைத்து கொண்டால் எப்போதும் தான் ஒரு மிகப் பெரிய கூட்டணி கட்சி என்பதை திமுக மக்களிடையே காட்டி கொள்ளவும் தொகுதி ஒதுக்கீடு செய்வதிலும் திமுகவிற்கு எந்த பிரச்சினையும் வராமல் தான் எப்போதும் பிக் பாஸ் என திமுக காட்டிக் கொள்ளவும் எதிர்காலத்தில் உதவும் என்பதும் திமுகவிற்கு உதவும். திரு. உதயநிதி ஸ்டாலின் மகன் திமுகவிற்கு தலைவராக வரும் பொழுது அவருக்கு எந்த வித தொல்லையும் எதிர்ப்பும் இல்லாமல் தமிழகத்தை தனது இஷ்டத்துக்கு ஆட்சி செய்து ராஜாவாக இருக்க வேண்டும் என்னும் நல்ல எண்ணத்தில் செய்யப்படும் திட்டமே இது. வாழ்க தமிழகம். தமிழகத்தில் மக்கள் தங்கள் பிற்போக்கு தனத்தை விட்டு முற்போக்கு சிந்தனையோடு பகுத்தறிவு உபயோகித்து மாறா விட்டால் இன்னும் ஜந்து அல்லது பத்து வருடங்களுக்கு பிறகு திமுக தானே எதிர் கட்சி நியமித்து தேர்தல் என்னும் நாடகத்தை நடத்தி தானே என்றும் நிரந்தரமாக தமிழகத்தை ஆளும்.


முக்கிய வீடியோ