உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / திண்டுக்கல்லில் ராகுல் பங்கேற்கும் மாநாடு: 3 லட்சம் பேரை திரட்ட காங்., அதிரடி திட்டம்

திண்டுக்கல்லில் ராகுல் பங்கேற்கும் மாநாடு: 3 லட்சம் பேரை திரட்ட காங்., அதிரடி திட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

'காங்கிரஸ் கட்சியை விமர்சித்து பேசிய, அமைச்சர் ஐ.பெரியசாமியின் சொந்த மாவட்டமான திண்டுக்கல்லில், ராகுல் பங்கேற்கும் மாநாட்டை நடத்த வேண்டும்' என, தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் விருப்பம் தெரிவித்துள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. சட்டசபை தேர்தலில், தமிழக காங்கிரஸ் கட்சிக்கு, லோக்சபா தொகுதிக்கு ஒரு சட்டசபை தொகுதி; 10 சட்டசபை தொகுதிகளுக்கு ஒரு அமைச்சர் என, 4 அமைச்சர் பதவி வேண்டும் என்ற நிபந்தனையுடன், கூட்டணி அமைக்கவும், தேர்தலை சந்திக்கவும், டில்லி மேலிடம் திட்டமிட்டுள்ளது. அடையாள அட்டை இதற்காக காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் பணி துவக்கப்பட்டுள்ளது. கிராம கமிட்டி நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு, அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் பணி நடந்து வருகிறது. இதுவரை 24,000 கிராம கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் நிர்வாகிகள் எண்ணிக்கை, 2 லட்சத்தை தாண்டியுள்ளது. நிர்வாகிகள் நியமனம் முடிந்த பின், கட்சி நிர்வாகிகள், துணை அமைப்புகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் என, மொத்தம் 3 லட்சம் பேர் பங்கேற்கும் மாநாட்டை நடத்த ஆலோசிக்கப்பட்டுள்ளது. தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அளித்த பேட்டியில், 'விரைவில் ராகுல் தலைமையில், தமிழகத்தில் 3 லட்சம் பேர் பங்கேற்கும் மிகப் பெரிய மாநாடு நடத்தப்படும்' என்றார். இதற்கிடையில் சமீபத்தில், வேடசந்துார் தெற்கு ஒன்றியத்தில் நடந்த, தி.மு.க., நிர்வாகி இல்ல திருமண விழாவில் பங்கேற்ற அமைச்சர் பெரியசாமி பேசுகையில், 'பணக்காரர் வீட்டு நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே காங்கிரஸ் தலைவர்கள் வருவர்' என்றார். பதிலடி அவருக்கு பதிலடி தரும் வகையில், காங்கிரஸ் எம்.பி., கார்த்தி, 'பெரியசாமியின் கருத்து குப்பை' என்றார். இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் பலத்தை காட்டவும், அமைச்சர் பெரியசாமி விமர்சனத்திற்கும் பதிலடி தரவும், திண்டுக்கல்லில் ராகுல் பங்கேற்கும் மாநாடு நடத்த வேண்டும் என, தமிழக காங்கிரசார் விருப்பம் தெரிவித்துள்ளனர். அம்மாவட்ட நிர்வாகிகளிடம். மாநாடு தேதி குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. பீஹார் மாநில சட்டசபை தேர்தல் பணியில் ராகுல் ஈடுப்பட்டிருப்பதால், திண்டுக்கல்லில் நடத்தும் மாநாட்டிற்கு, அவர் வருவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அவர் வரவில்லை என்றால், திண்டுக்கல்லில் பொதுக்கூட்டம் மட்டும் நடத்தி, அதில் தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கரை பங்கேற்க வைக்க ஆலோசிக்கப்பட்டுள்ளது. பீஹார் சட்டசபை தேர்தல் முடிந்த பின், தமிழக சட்டசபை தேர்தல் பணிகளில், ராகுல் நேரடியாக கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளார். எனவே, அவர் பங்கேற்கும் மாநாடு, ஜன., மாதம் நடக்க வாய்ப்பு இருக்கிறது என, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

nsathasivan
நவ 11, 2025 07:30

3 லட்சத்திற்கு எத்தனை சைபர் என்று தெரியுமா? தமிழ் நாடு முழுக்க எல்லா காங்கிரஸ் தொண்டர்கள் வந்தாலும் 3000 கூட தேடாதே?


panneer selvam
நவ 04, 2025 18:04

It is very easy task , just award the contract to DMK for gathering of people for conference .


surya krishna
அக் 16, 2025 21:09

இலங்கை தமிழர்களை படுகொலை செய்த காங்கிரஸ் கூட்டணி கட்சிகளுக்கு மானமுள்ள தமிழர்கள் யாரும் ஓட்டு போடக்கூடாது, கூட்டமும் கூட கூடாது....


சாமானியன்
அக் 16, 2025 17:52

தமிழக காங்கிரஸின் பகல் கனவு பலிக்காது. கூட்டம் 10000 த்தை தாண்டாது.


பேசும் தமிழன்
அக் 16, 2025 17:17

என்னாது 3 லட்சம் பேரா.... எங்கே இருந்து இத்தனை ஆட்களை கொண்டு வருவார்கள்.... ஒரு வேளை கர்நாடகா மற்றும் கேரளாவில் இருந்து அழைத்து வந்தாலும் வருவார்கள் போல் தெரிகிறது.... தமிழகத்தில் இல்லாத கான் கிராஸ் கட்சியில் இருப்பதே 4 பேர் தான்.... இந்த லட்சணத்தில் 3 லட்சம் பேரை கூட்டி மாநாடு போட போகிறார்களாம்.


கலைஞர்
அக் 16, 2025 16:05

காமெடினாலும் ஒரு லிமிட் வேண்டாமா


A viswanathan
அக் 16, 2025 19:07

3000 பேரை கூட்டமுடியாது அத்தனை கோஷ்டி உளாளது உள்ளே


Barakat Ali
அக் 16, 2025 15:25

அத்தினி தொண்டர்கள் இருக்காய்ங்களா ????


Vijay D Ratnam
அக் 16, 2025 13:59

இப்பவே சொல்லிப்புட்டோம். கரெக்ட்டா இருக்கோணும்.


ராமகிருஷ்ணன்
அக் 16, 2025 12:44

கூட்டம் ஏற்பாடு செய்யும் போது, ஆங்காங்கே பெரிய பெரிய லென்ஸ் மாட்டிவிட்டு அது வழியே பார்த்து கூட்டம் வந்து விட்டது என்று ஆறுதல் பட்டுக் கொள்ளுங்கள்.


Vasan
அக் 16, 2025 12:22

ஜவுளி கடை ட்ரயல் ரூம் போல 4 புறமும் ராட்சச கண்ணாடி வாடகைக்கு வாங்கி வைத்து விட்டால், 3000 பேர் கூட்டம், 100 மடங்கு அதிகரித்து 300000 பேர் கூட்டமாக கண்ணுக்கு தெரியும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை