உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / பொது மேடையில் தி.மு.க., - கம்யூ., மோதல்

பொது மேடையில் தி.மு.க., - கம்யூ., மோதல்

தி.மு.க., துணைப் பொதுச்செயலர் ஆ.ராஜாவும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலர் வீரபாண்டியனும், கருத்து மோதலில் ஈடுபட்டது, இரு கட்சிகளிலும் பேசுபொருளாக உருவெடுத்து உள்ளது. செங்கல்பட்டு அடுத்த மறைமலைநகரில் நடந்த சுய மரியாதை இயக்க நுாற்றாண்டு நிறைவு விழாவில், தி.மு.க., துணை பொதுச்செயலர் ஆ.ராஜா பேசியதாவது: ஈ.வெ.ராமசாமியை கம்யூனிஸ்ட் கட்சியினர் அன்று எதிர்த்தனர். சிங்காரவேலர் விமர்சித்தார்; ஜீவா எதிர்த்தார். அன்று பொதுவுடைமைவாதிகள், திராவிட இயக்கத்தை விமர்சித்தனர்; விலகி நின்றனர். இன்று அவர்கள் எல்லாரும் வந்து, ஈ.வெ.ராமசாமி தேவை என சொல்கின்றனர். அதேபோல், எப்படியெல்லாம் இருந்த காங்கிரஸ், இன்றைக்கு எப்படி இருக்கிறது தெரியுமா? அன்று ஈ.வெ.ராமசாமியை விமர்சித்தனர். நாட்டை துண்டாடுகிறோம் என்றனர். அந்த காங்கிரஸ் கட்சி, இப்போது தமிழகத்தில் தி.மு.க., எடுக்கிற நிலைப்பாடு தான் எங்கள் நிலைப்பாடு என்கிறது. காங்கிரஸ் உருவாக்கிய அரசியல் சட்டத்தை காப்பாற்றும் தகுதி, திறமை தி.மு.க.,வுக்கு தான் இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலர் வீரபாண்டியன் பேசியதாவது:

ஆ.ராஜாவுக்கு பதில் சொல்ல விரும்புகிறேன். ஈ.வெ.ராமசாமியிடம் ஜீவா, சிங்காரவேலர் ஆகியோர் முரண்பட்டனர். அது பகையாக அல்ல; வளர் முரண். அவர்கள் இருவரையும், ஈ.வெ.ராமசாமி துரோகி என சொல்லவில்லை. ஆ.ராஜாவுக்கு அறிவுறுத்த விரும்புகிறேன். நாங்கள் முரண்பட்டது உண்மை. ஈ.வெ.ராமசாமிக்கு தீங்கு செய்யவில்லை; துரோகம் செய்யவில்லை. கருத்தாழத்தில் முரண்பட்டோம். அவர் இப்போது தேவைப்படுகிறார். அதனால், இந்த மேடைக்கு வந்துள்ளோம். ஆனால், அவர் வந்து சேர்ந்த இடம் கம்யூனிசம், சமத்துவம் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். கருப்பு - சிவப்பு கொடி தற்காலிகம். கருப்பு மறைந்து, உலகம் முழுதும் சிவப்பு கொடி மட்டும் தான் பறக்கும் என சொன்னவர், ஈ.வெ.ராமசாமி என்பதையும் மறந்துவிட முடியாது. இவ்வாறு அவர் பேசினார். ஈ.வெ.ராமசாமியை சுட்டிக்காட்டி, கம்யூனிஸ்ட் கட்சியையும், காங்கிரசையும் விமர்சித்து ஆ.ராஜா பேசியதற்கு பதிலடி தரும் வகையில், அதே மேடையில் வீரபாண்டியன் பேசியது, தி.மு.க., மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மத்தியில் சலசலப்பை உருவாக்கி, பேசுபொருளாகி உள்ளது. - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

N Sasikumar Yadhav
அக் 07, 2025 16:27

இதென்ன பிரமாதம் . கேரளாவில் பாருங்க புள்ளிராஜா இன்டி கூட்டணி கட்சிகளான சீனக்கைக்கூலிகளான கம்யூனிஸ்டுகளும் ஊழல்மிகு இத்தாலிய கான்கிராஸ்க்காரன்களும் வெட்டுகுத்து அளவுக்கு போவானுங்க


மணி
அக் 07, 2025 15:55

ஈவெராவை தி மு க வினரும் திமுகவை ஈவெராவும் வசை பாடாத நாளே இல்லை என்றிருந்த காலத்தை மறந்ததேனோ ராசா அவர்கள்


rajan_subramanian manian
அக் 07, 2025 11:03

அடேங்கப்பா. ஒரே தமாசு தான் போங்க.முதலாளிக்கும் கொத்தடிமைக்கும் ஒரு சின்ன மனஸ்தாபம். ஆயுத பூஜை பொரி கடலை இன்னும் ஒரு பாக்கெட் கூட கொடுத்தால் கீழே விழுந்து கிடக்க தயார்.


Subburamu K
அக் 07, 2025 10:54

Friendly match before the elections.


ஆரூர் ரங்
அக் 07, 2025 10:44

கம்யூனிசம், அது அப்படியே, சர்க்கரை பூசப்பட்ட விஷ மாத்திரை. ஜாக்கிரதை! - ​​21-2-1943 அன்று திருச்சியில் ராமசாமி ஆற்றிய உரை.


ஆரூர் ரங்
அக் 07, 2025 10:40

அக்காலத்தில் நம்பூதிரிபாடு, ரணதிவே, ராமமூர்த்தி, சாரு மஜூம்தார், SA டாங்கே, புத்ததேவ பட்டாச்சார்யா,( பிறகு)சோம்நாத் சட்டர்ஜி, சீதாராம் யெச்சூரி போன்ற பிராமணர்களே கம்யூனிஸ்டு கட்சியின் முக்கிய தலைவர்களாக ஆதிக்கம் செலுத்தினர். அதனால்தான் ஈவேரா பிராமணர்கள்தான் கம்யூனிசத்தை பரப்புகின்றனர். ஏற்றத்தாழ்வு பற்றி எங்களுக்கு உபதேசம் செய்ய அவர்கள் யார் என்று திட்டினார்.


ஆரூர் ரங்
அக் 07, 2025 10:18

அரசியல் சட்டத்தைக் காப்பாற்றும் தகுதி அதனை எரித்து அவமதித்த திமுகவுக்கே உண்டு. WELL SAID ...


ராமகிருஷ்ணன்
அக் 07, 2025 08:39

விலைவாசி ஏறி விட்டது. அமவுண்ட் அதிகம் தேவைப்படுகிறது, அதான்


suresh Sridharan
அக் 07, 2025 08:30

கம்யூனிஸ்ட் நாட்டின் தேவைக்கில்ல அவர்களுடைய உள் தேவைக்கு என்று போனதே ஒரு காலத்தில் கம்யூனிஸ்ட் ஒரு உழைப்பு மிகப்பெரிய உழைப்பு இன்று அண்டிப் பிழைப்பு


KOVAIKARAN
அக் 07, 2025 07:57

கருப்பு அமங்கலத்தின் அடையாளம். சிவப்பு ஆபத்தின் அடையாளம். இரண்டும் ஒன்றுசேர்ந்தால்? அமங்கலமான, ஆபத்தான ஆட்சிதான்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை