உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தி.மு.க., கூட்டணிக்கு குடைச்சல் கொடுக்கிறதா காங்., - வி.சி., கட்சிகள்?

தி.மு.க., கூட்டணிக்கு குடைச்சல் கொடுக்கிறதா காங்., - வி.சி., கட்சிகள்?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

'காமராஜர் ஆட்சி அமைப்பது தான் எங்கள் நோக்கம்' என, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையும், 'நடிகர் விஜய் சரியான திசையில் பயணிக்கிறார்' என, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனும் கூறியுள்ளதால், தி.மு.க., கூட்டணியில் மீண்டும் புகைச்சல் கிளம்பி உள்ளது.சமீபத்தில், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, சேலத்தில் நிருபர்களிடம் கூறுகையில், 'தி.மு.க., கூட்டணியில் உள்ள கட்சிகள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்த துவங்கி உள்ளன.

விரிசல் கிடையாது

கடந்த 41 மாதங்களாக மவுனமாக இருந்த கூட்டணி கட்சித் தலைவர்கள், தற்போது தி.மு.க., ஆட்சியை விமர்சனம் செய்கின்றனர் என்றால், அது விரிசல் ஏற்பட்டிருப்பதாக தானே அர்த்தம்' என்றார்.சென்னையில் நடந்த திருமண விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், 'தி.மு.க., கூட்டணியில் விவாதங்கள் இருக்குமே தவிர விரிசல் கிடையாது' என, பழனிசாமி புகாரை மறுத்தார். இந்த சூழலில், செல்வப்பெருந்தகையும், திருமாவளவனும் இப்படி பேசியிருப்பது, ஆளும் கூட்டணியில் பல சந்தேகங்களை கிளப்பி உள்ளது.

இது தொடர்பாக, ஆளும் கூட்டணி வட்டாரத்தில் கூறப்படுவதாவது:

தி.மு.க., கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக, பழனிசாமி கூறியது போலவே, அடுத்தடுத்து நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. முரசொலி செல்வம் படத்திறப்பு விழாவின்போது, முதல்வர் ஸ்டாலின், தி.க., தலைவர் வீரமணி, திருமாவளவன், நடிகர் சத்யராஜ் ஆகியோர் தனி அறையில் அமர்ந்து பேசினர்.அப்போது, தி.மு.க., கூட்டணியில் திருமாவளவன் நீடிக்க வேண்டும் என்றும், மாயவலையில் சிக்கி விடக் கூடாது என்றும், அவரிடம் வீரமணி, சத்யராஜ் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர். அவர்களிடம் திருமாவளவன், 'நாங்கள் தி.மு.க., கூட்டணியில் தான் இருப்போம்' என்றார்.

நெருக்கடி

இதற்கிடையில், புதுச்சேரியில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், 'விஜய் சரியான திசையில் பயணிக்க துவங்கியுள்ளார். சமூக நீதி பார்வைக் கொண்டவராக அரசியல் களத்தில் அடியெடுத்து வைக்கிறார். விளிம்பு நிலை மக்களுக்காக, ஒரு இயக்கத்தை துவங்கியிருக்கிறார் என நம்ப முடிகிறது. அவருக்கு என்னுடைய வாழ்த்துகள்' என கூறியுள்ளார்.விஜய் கட்சியை தி.மு.க., தலைமை விரும்பவில்லை. அதனால் தான், விஜய் கட்சித் துவங்குவதாக அறிவித்தப் பின், அது குறித்து எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் அமைதி காக்கிறது தி.மு.க., அப்படியிருக்கும்போது, தி.மு.க., கூட்டணியில் நீடிக்கிற திருமாவளவன் எப்படி விஜய்க்கு வாழ்த்து சொல்லலாம் என்ற கேள்வி எழுகிறது.அதேபோல், திருப்பத்துாரில் நடந்த மருது சகோதரர்கள் நினைவு தினத்தில் பங்கேற்ற செல்வப்பெருந்தகை, 'நாங்கள் சத்திரம், சாவடி நடத்த கட்சி நடத்தவில்லை. நாங்களும் ஆட்சிக்கு வர முயற்சி எடுத்து வருகிறோம். தமிழகத்தில் காமராஜர் ஆட்சி அமைப்பதுதான் எங்களுடைய நோக்கம்' என்றார். இப்படி இரு தலைவர்களும் நெருக்கடி அளிக்கும் வகையில் பேசியிருப்பதை, ஆளும் தலைமை ரசிக்கவில்லை.இவ்வாறு அந்த வட்டாரத்தில் கூறப்படுகிறது. - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

SP
அக் 26, 2024 22:09

இவர்களை யாருமே கூட்டணி சேர்க்காமல் ஒருதேர்தலிலாவது தனித்து விட வேண்டும்.அப்பொழுதுதான் இவர்கள் சுயரூபம் தெரியும் ...கூட்டணியில்லை என்றால் செல்லாக்காசாகி விடுவார்கள்..


பேசும் தமிழன்
அக் 26, 2024 18:29

அறிவாலயத்தில் இருந்து ஆளுக்கு ஒரு எலும்பு துண்டை (பெட்டி) போட்டால்.... வாலை ஆட்டி கொண்டு இருப்பார்கள்.


vijai
அக் 26, 2024 16:59

திருமாவளவன் தொகை இரண்டு பேரையும் கூட்டணியில் இருந்து கழட்டி விட்ட தெரியும்


nv
அக் 26, 2024 16:31

இவங்கள கூடா நட்பு கூட்டம் என்று ஒதுக்கி தள்ள வேண்டும் மக்கள்


theruvasagan
அக் 26, 2024 15:58

ஒரு குட்டிக்கதை. இரண்டு அன்னக்காவடிகள் தாங்கள் மாட மாளிகை கூடகோபுரம் கட்டப்போவதாக சொல்லிக் கொண்டு ஊரெல்லாம் திரிந்தார்களாம். இப்படி பேசிக் கொண்டே போய்க் கொண்டிருக்கும்போது பசியெடுக்கும் அல்லவா. அப்போது. பேசினதை எல்லாம் மறந்துவிட்டு வயிற்றை நிரப்ப தங்களுக்கு வழக்கமாக பிச்சை போடுபவன் வீட்டு வாசலுக்குச் சென்று ஐயா சாமி. பசி வயித்த கொல்லுது. பழஞ்சோறா இருந்தாலும் பரவாயில்லை. கொண்டு வந்து போடுங்க தர்மதுரையே என்று கெஞ்சினாங்களாம். பிச்சை எடுத்த சாப்பிட்ட பிறகு மறுபடியும் அதே பழங்கதையாம்.


வைகுண்டேஸ்வரன்
அக் 26, 2024 14:03

லேட்டஸ்ட் சங்கி திருமா, 2026 தேர்தலோடு கோவிந்தா ஆகி ஓ பி எஸ், சரத்குமார், கிருஷ்ணசாமி, வாசன், ராமதாஸ் போன்றோர் அடங்கிய பஜனை கோஷ்டியின் மூலையில் உக்கார வைக்கப்படுவார். அவரது அரசியல் அஸ்தமனம் ஆரம்பித்து விட்டது. செல்வப் பெருந்தகை, தமிழ்நாடு காங்கிரஸ் க்கு போட்டியிட அதிகமா இடங்கள் கேட்பாதற்கு அடித்தளம் போடறார். ஸ்டாலின் மற்றும் அவரது ப்ரோ ராகுல் தான் முடிவெடுப்பார்கள்.


krishna
அக் 26, 2024 16:10

EERA VENGAAYAM VAIKUNDESWARAN SANGI ENDRAAL DHEIVIGAM DESA PATRU. UNNAI PONDRA 200 ROOVAA COOLIE OOPIS ENDRAAL OSI QUARTER 200 ROOVAA COOLIE.


krishna
அக் 26, 2024 11:45

NEENGA VERA 2026 ELECTION ANNOUNCE SEIDHAAL INDHA VEERARGAL GARIVAALAYAM NOKKI PICHAI PAATHIRAM EENDHI PADAI EDUPPAR.BEGGERS HAS NO CHOICE.NIRANDHARA GOPALAPURAM AAYUTKAALA KOTHADIMAI KUMBAL.


SUBBU,MADURAI
அக் 26, 2024 14:28

திமுகவிற்கு கொடச்சல் கொடுத்துக் கொண்டிருந்த வைகோ போன்றவர்களே அறிவாலய அடிமையாகி அமைதியாகி விட்ட பின் இந்த கொத்தடிமைகளான திருமாவளவன், செல்வப்பெருந்தகை போன்ற தாழ்வான்கள் திமுக போடும் எலும்புத் துண்டை கவ்விக் கொண்டு வாலாட்டுவதை தவிர இவன்களுக்கு வேறு போக்கிடம் கிடையாது இப்படியிருக்கும் நிலையில் இவர்களா திமுகவிற்கு குடைச்சல் கொடுக்க போகிறார்கள் அப்படி எதுவும் நடக்க வாய்ப்பில்லை.


சுந்தரம் விஸ்வநாதன்
அக் 26, 2024 10:47

கொடச்சல் குடுக்கறது எல்லாம் கிடையாது . போடற எலும்புத்துண்டு சின்னதா இருக்குன்னு மட்டும் அப்பப்ப சொல்லிக்கிட்டே போட்டதை பொறுக்கிக்கிட்டு போய்க்கிட்டே இருப்போம்.


மோகனசுந்தரம்
அக் 26, 2024 10:01

இவனுங்க எல்லாம் சோற்றால் அடித்த பிண்டங்கள். முதுகெலும்பில்லாத முதலைகள். தன்மானமற்ற தற்குறிகள். தைரியம் இல்லாத தறுதலைகள்


அன்பு
அக் 26, 2024 11:22

இதெல்லாம் திமுக இயக்கும் நாடகம். இவர்கள் நடிக்கிறார்கள்.


VENKATASUBRAMANIAN
அக் 26, 2024 08:34

சீட் பேரம் நடத்த இப்படியெல்லாம் பேச வேண்டியுள்ளது. திருட்டு கும்பல்


முக்கிய வீடியோ