உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / விளம்பரங்களுக்கு முக்கியத்துவம்: அடையாளம் இழக்கும் அரசு பஸ்கள்

விளம்பரங்களுக்கு முக்கியத்துவம்: அடையாளம் இழக்கும் அரசு பஸ்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பல்லடம் : அரசு போக்குவரத்து கழகம் விளம்பரங்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருவதால், அரசு பஸ்கள் தங்கள் அடையாளத்தை இழந்து வருகின்றன. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், 8 கோட்டம் வாயிலாக 21 ஆயிரம் பஸ்களை இயக்கி வருகிறது. 1.20 லட்சம் ஊழியர்கள் பணிபுரிகின்றனர். சமீப காலமாக, அரசு போக்குவரத்து கழகம், வருவாயை பெருக்கும் நோக்கில் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கிறது. இதன்படி, பஸ்களில் விளம்பரம் செய்தல், பார்சல் புக்கிங், விரைவு பஸ்கள் வசதி, சுற்றுலா செல்ல சிறப்பு பஸ்கள் என, பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பஸ்களின் பின்புறம் விளம்பரம் செய்யப்பட்டு வந்த நிலையில், நாளடைவில் இது விரிவடைந்து, தற்போது ஒட்டுமொத்தமாக பஸ் முழுவதும் விளம்பரங்கள் செய்யப்பட்டு வருகிறது. இதனால், இவை அரசு பஸ்களா, தனியார் பஸ்களா என்ற கேள்வி எழுகிறது. கிராம மக்கள் பலர், பஸ் நிறம், எண்கள் ஆகியவற்றையே அடையாளம் கொண்டு பஸ் ஏறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். திடீரென, இதுபோல் பஸ்கள் அடையாளமே தெரியாத வகையில் விளம்பரங்களாக மாறியிருப்பது, மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. ஓட்டை ஒடிசல் பஸ்களாலும், சேவை குறைபாடுகளாலும் போக்குவரத்து கழகம் சிக்கித் தவித்து வரும் நிலையில், இதுபோல் விளம்பரங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் தருவது மக்கள் மத்தியில் வெறுப்பை மட்டுமே ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Karthikeyan
ஜூன் 17, 2024 15:48

இதேபோன்ற ஒரு அரசு பேருந்தை பார்த்து நான் அதிர்ந்துவிட்டேன்... கட்டு மரத்தோட மகன் டோப்பா தலையனோட விடியா ஆட்சியின் எத்தனையோ அலங்கோலங்களில் இதுவும் ஒன்று...துட்டை வாங்கிட்டு இவனுங்களுக்கு ஓட்டு போட்ட ஜனங்களுக்கு இதுவம் வேண்டும்...


Ramamurthy N
ஜூன் 15, 2024 08:38

அரசு போக்குவரத்து கட்டணத்தையும் உயர்த்த கூடாது, விளம்பரம் மூலம் வருமானத்தை பெருக்கக் கூடாது என்றால் போக்குவரத்து ஊழியர்களுக்கு எப்படி சம்பளம் கொடுக்க இயலும்? ரயில்வே சாதாரண ரயில்களுக்கு பதிலாக வந்தேபாரத் போன்ற ரயில்கள் மூலம் வருமானத்தை பெருக்கியுள்ளார்கள், அதனை கேட்க யாருக்கும் தகுதியில்லை?


Phoenix
ஜூன் 16, 2024 09:38

பஸ் விளம்பரங்களுக்கு பதில் சொல்லாமல் இப்ப ஏன் ரயில்வே துறையை இழுக்கிறீங்க


KALIDAS C
ஜூன் 14, 2024 20:16

விளம்பரங்கள் மூலமாக வருவாய் ஈட்டுவது தவறில்லை. ஆனால் உரிய நிறுத்தங்கள் வரும்பொழுது அந்த இடத்தை முன்கூட்டியே பார்த்து அறிந்து படிக்கட்டுக்கு வந்து இறங்குவதற்கு ஆயத்தமாக முடியாமல் தடுமாறும் சூழல் உள்ளது. வெளியில் ஒளிரும் தன்மையுள்ள ஸ்டிக்கர்கள் ஓட்டப்படுவதால் பயணிகளுக்கு வெளியில் கடந்து செல்லும் இடத்தை அறிய முடிவதில்லை.


Ravi
ஜூன் 14, 2024 18:32

Very true, Pathetic to see the state of bus condition and very sad to see bus with so many stickers all over the body, importance is not given to Place names instead shop ads are highlighted all over the bus fully, already so many accidents due to bad road condition, now ads is also added in the list - Sad to see TN buses in this state never have seen such degradation. What will other states think of when they see our busss


கி ராஜராஜேஸ்வரி நன்மங்கலம்
ஜூன் 14, 2024 15:24

விளம்பரங்களே மிகுதியாக காணப்படும் இன்றைய பேருந்துகள் ஆல் குழப்பமே ஏற்படுகிறது என்பது உண்மையே.பேருந்துகள் எங்கிருந்து வருகின்றன எங்கு செல்கின்றன என்பதை புரிநது கொள்ள முடியாத அளவு விளம்பரங்கள் பேருந்துகளை ஆக்கிரமிக்கின்றன. வேறு ஊருக்கு செல்லும் வயதானவர்கள் உரிய இடத்திற்கு செல்லும் பேருந்துகளை இனம் பிரிக்க முடியாமல் தவற விடும் அவலமும் ஏற்படுகிறது.எனவே விளம்பரங்களை குறைத்து கொண்டு பழைய மாதிரியே பேருந்துகளின் வண்ணங்கள் இருந்தால் மிகவும் சிறப்பாக இருக்கும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.


S Sivakumar
ஜூன் 14, 2024 13:10

விளம்பரம் செய்ய அனுமதி கொடுத்து வருமானம் ஈட்டுவது தவறாக இல்லை. ஆனால் வருமானம் அனைத்தும் இன்றைய அறிவியல் முறைப்படி(ERP) உடனே அரசு இருப்புக்கு செல்லும் படி செய்ய வேண்டும்.


G VEERAMANIKANDAN
ஜூன் 14, 2024 10:45

இரயில் பெட்டிகளிலும் விளம்பரங்கள் உள்ளது. அதை பற்றிய செய்தி வருவது இல்லையே...


hari
ஜூன் 14, 2024 12:01

பக்கத்து இலைக்கு பாயசம் வரலியே.. இதுவரை உன் கேள்வி வீரமணி.....


vijai
ஜூன் 14, 2024 08:55

இந்த அரசு கிட்ட வேற என்ன எதிர்பார்க்க முடியும் ஸ்டிக்கர் ஒட்டுதல் விளம்பர அரசு டாஸ்மார்க் அரசு


SP
ஜூன் 14, 2024 08:29

டீசல் கணக்குக்காக இயக்காமல் மக்கள் தேவைக்காக இயக்கினால் நிச்சயம் லாபகரமாக இருக்கும்.


Bharathi
ஜூன் 14, 2024 07:50

Aatchiye vilambaram


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ