உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / த.வெ.க.,வுக்கு தாவியும் பதவியின்றி பரிதவிக்கும் அதிமுக மாஜிக்கள்

த.வெ.க.,வுக்கு தாவியும் பதவியின்றி பரிதவிக்கும் அதிமுக மாஜிக்கள்

சென்னை: அ.தி.மு.க.,வில் இருந்து, கட்சி மாறி வந்த முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோருக்கு, பதவிகளை கொடுக்காமல், த.வெ.க., காலம் தாழ்த்தி வருகிறது. சட்டசபை தேர்தல் தோல்விக்கு பின், அ.தி.மு.க.,வில் இருந்து ஏராளமான கட்சி நிர்வாகிகள் விலகி, த.வெ.க.,வில் இணைந்து வருகின்றனர். எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்து விட்டு, கட்சியில் இணைந்தவர்களுக்கு, த.வெ.க.,வில் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=fcyfh21r&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஆனால், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட சில பிரமுகர்களுக்கு, எவ்வித பதவியும் த.வெ.க.,வில் வழங்கவில்லை. இதனால், அவர்கள் பரிதவித்து வருகின்றனர். இது குறித்து, த.வெ.க.,வில் இணைந்த சிலர் கூறியதாவது: த.வெ.க.,வில் இணையும் முன், நடந்த பேச்சின்போது, 'கட்சி பதவி தருகிறோம்; வாரிய பதவி தருகிறோம்' என, ஆசை வார்த்தை காட்டினார்கள். அதனால், அ.தி.மு.க.,வில் கட்சி பதவிகளை உதறி விட்டு, த.வெ.க.,வில் இணைந்தோம். ஆனால், எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்து விட்டு, த.வெ.க.,வில் இணைந்தவர்களுக்கு கிடைக்கும் முக்கியத்துவம் எங்களுக்கு இல்லை. ஆரம்பத்தில், கட்சி நிகழ்ச்சிகளில் முன்னுரிமை கிடைத்தது. தற்போது, பதவி இல்லாததால், மரியாதையும் முன்னுரிமையும் குறைந்து வருகிறது. அதே நேரத்தில், அமைச்சர்களின் சிபாரிசால் தொழிலுக்கு எந்த பிரச்னையும் இல்லை. இதையே காரணமாக வைத்து, பதவி கேட்கும் போதெல்லாம், 'அதுதான் தொழில் நல்லா நடக்கிறதே' என தட்டிக்கழிக்கின்றனர். வாரிய பதவி கேட்டால், 'அதை, முதல்வரிடம் தான் கேட்க வேண்டும்' என, மழுப்புகின்றனர். பல ஆண்டுகளாக பதவியில் இருந்து விட்டு, தற்போது சும்மா இருப்பதாலும், எங்களை நம்பி வந்தவர்களுக்கும் பதவி வாங்க முடியாததாலும், கட்சிக்குள்ளும் வெளியிலும் மரியாதை இல்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

Natchimuthu Chithiraisamy
ஆக 29, 2026 19:36

கிடைக்கும் கண்டிப்பாக வயதாக வேண்டும். எடப்பாடியை கொச்சை படுத்த நினைத்த போது கூட நினைவில் வந்திருக்க வேண்டும் தனக்கு கிடைத்த பணம் பதவி MGR ஜெயலலிதா மூலமாக என்று.


ஆரூர் ரங்
ஆக 29, 2026 19:30

அதிமுகவிலயே இருந்திருந்தால் இளவரசர் போஸ்ட்டா கிடைச்சிருக்கும்? ஏதோ குவாரி, கந்து வட்டி பிசினஸ் தடைபடாம இருந்தா சரி.


கந்தசாமி
ஆக 29, 2026 19:49

எந்தக் கட்சியில் யாருக்கு இளவரசர் போஸ்டிங் தரப்பட்டுள்ளது? அதைச் சொல்லுங்கள் முதலில்?


Anantharaman Srinivasan
ஆக 29, 2026 19:09

அதிமுகலிருந்து பதவி வெறி பிடித்து ஓடிவந்த பிரமுகர்களுக்கு இதுவரை எந்த பதவியும் தரவில்லை. இருந்தாலும் அமைச்சர்களின் சிபாரிசால் தொழிலுக்கு எந்த பிரச்னையும் இல்லை. மக்களே கவனியுங்கள் ..தொழிலுக்கு பங்கமில்லையாம். என்ன தொழில் ? வேறு என்ன தொழில் இருக்க முடியும் அதுதாங்க கமிஷன் கலெக்ஷன் கரப்ஷன். மாற்றத்தை விரும்பினோம். ஏமாற்றத்தை காண்கிறோம்.


R SRINIVASAN
ஆக 29, 2026 18:59

தன்னை தூய சக்தி என்று சொல்லி கொள்ளும் தவேக ஏன் இந்த ஊழல் பெருச்சாளிகளை கட்சியில் சேர்த்து கொள்கிறது


Haja Kuthubdeen
ஆக 29, 2026 14:41

எலிக்கு தலையா இருப்பதை விட சிங்கத்துக்கு வாலா இருந்து இருக்கலாம்டா துரோகிகளா...


சந்துரு
ஆக 29, 2026 13:06

அதிக எதிர் பார்ப்போட ஒரு படத்தை பார்க்க பிளாக்ல டிக்கட் வாங்கிட்டு கூட்டத்துல முதல் ஆளா கேட்டை எல்லாம் தள்ளி விட்டுட்டு முண்டியடிச்சுப் போய் முதல் வரிசையில உட்கார்ந்தால் படம் சரியான மொக்கப் படம். இப்ப இந்த பீலிங்தான் முண்டியடிச்சு ஓடிப் போய் த.வெ.கவுல சேர்ந்தவங்களுக்கு.


SENTHIL NATHAN
ஆக 29, 2026 11:59

அரசன் அன்று கொள்வான் இறைவன் நின்று கொல்வான். கொன்னுட்டான்


prakash
ஆக 29, 2026 11:37

ஓட்டு போட்ட மக்கள் பரிதவிக்கிறார்கள் தொழிலார்கள் பரிதவிக்கிறார்கள் விவசாயிகள் பரிதவிக்கிறார்கள் விலைவாசி உயர்வால் பரிதவிக்கிறார்கள் தற்குறிகள் முட்டு கொடுக்கிறார்கள் மிசனரிகள் முட்டு கொடுக்கிறார்கள்


T.S.SUDARSAN
ஆக 29, 2026 11:17

அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதை. முன்பு நம்பி சென்றவர்கள் கதை நிரைய இருக்குது. தங்கள் தவறுகளை தானே உணரும் நேரம். எம் ஜி யர் & ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்த வினை இப்போ அறுவடை பண்ணுகிறார்கள். எதிர்காலம் இல்லை.


Anand
ஆக 29, 2026 10:52

அரசனை நம்பி புருஷனை கைவிட்டது போல...


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை