உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / 24 மணி நேரமும் மதுக்கடைகளை திறப்பேன் தி.மு.க., மாஜி எம்.எல்.ஏ., பேச்சால் அதிர்ச்சி

24 மணி நேரமும் மதுக்கடைகளை திறப்பேன் தி.மு.க., மாஜி எம்.எல்.ஏ., பேச்சால் அதிர்ச்சி

பம்மல் : ''என் கையில் அதிகாரம் கிடைத்தால், 24 மணி நேரமும் டாஸ்மாக் கடையை திறந்து வைப்பேன்; குடிக்கிறவர்கள், குடித்துவிட்டு சாகட்டும்,'' என தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ.,வும் தலைமைக்கழக பேச்சாளருமான நெல்லிக்குப்பம் புகழேந்தி பேசியது, அக்கட்சியினரையே அதிர வைத்திருக்கிறது.

தடுமாற்றம்

சென்னை பம்மல் பகுதியில் நடந்த தி.மு.க., அரசின் நான்காண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=6vtm1g4b&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கடந்த சட்டசபை தேர்தலின்போது, 'நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் டாஸ்மாக் கடையை மூடுவோம்' என முதல்வர் ஸ்டாலின் கூறினார். இதனால், பெண்கள் அனைவரும் ஒட்டுமொத்தமா தி.மு.க.,வுக்கு ஓட்டு போடுவாங்கன்னு நினைத்தோம். இதையே தீவிர பிரசாரம் ஆக்கினோம். ஆனால் எதிர்தரப்பில், இதே விஷயத்தை தி.மு.க.,வுக்கு எதிராக திருப்பி, தீவிர பிரசாரம் மேற்கொண்டனர். ஒவ்வொரு டாஸ்மாக் கடை சேல்ஸ்மேனும், சூப்பர்வைசரும், தேர்தலுக்கு மூன்று நாள் முன்பு, 'இன்றுதான் டாஸ்மாக் கடைக்கான கடைசி. இனிமேல் டாஸ்மாக் கடை இருக்காது' என, கடைக்கு மது வாங்க வருவோரிடம் சொன்னார்கள். அவர்கள் சொன்னது போலவே, தேர்தல் விதிமுறைகள்படி, தேர்தலுக்கு மூன்று நாட்களுக்கு முன், டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. கடைகள் மூடப்பட்டதால், 'குடி'மகன்கள், மது கிடைக்காமல் தடுமாறினர். தி.மு.க., தரப்பு மீது கடும்கோபம் அடைந்தனர். 'மூன்று நாட்களுக்கு கடைகள் மூடப்பட்டதற்கே இத்தனை கஷ்டம் என்றால், நிரந்தரமாக கடைகளை மூடினால் என்னாகும்?' என குடிகாரர்கள் அனைவரும் நினைத்து, தி.மு.க.,வுக்கு எதிராக பொங்கினர்.

குடித்து சாகட்டும்

குடிகாரர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, தி.மு.க.,வுக்கு எதிராக ஓட்டளித்தனர். விளைவு - அத்தேர்தலில் தி.மு.க.,வுக்கு தோல்வி. அதனால், தி.மு.க., ஆட்சிக்கு வரமுடியாமல் போனது. கடந்த 2021ல் நடந்த தேர்தலில் நிறைய பேர், 'இம்முறை டாஸ்மாக்கை மூடுவீர்களா?' என கேட்டனர். வாயைத் திறப்போமா நாங்கள்? டாஸ்மாக்கை மூடும் பிரச்னையில், வாயை மொத்தமாக மூடிக்கொண்டு விட்டோம்.எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால், டாஸ்மாக் கடையை, 24 மணி நேரமும் திறந்து வைப்பேன். குடிக்கிறவர்கள்தான், டாஸ்மாக்கிற்கு குடிக்கப் போவர். இனி, யாராலும் அவர்களை திருத்த முடியாது. அவர்களாக திருந்தினால் மட்டுமே உண்டு.எதற்காக இதைக் கூறுகிறேன் என்றால், குடிக்கிறவர்கள் நாட்டுக்கு தேவையில்லை, 24 மணி நேரமும் குடித்துவிட்டு சாகட்டும். மற்றவர்களை வைத்து ஆட்சி நடத்திக் கொள்ளலாம். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூன் 24, 2025 07:26

"குடியாத வீடு விடியாது "என்பது கழகத்தின் கொள்கை ...


lana
ஜூன் 20, 2025 15:35

உண்மையில் இது oru வகையில் நல்லது தான். இப்போ illegal ஆக திறந்து இருப்பதால் கூடுதல் விலை unaccounted சரக்கு என்று அரசின் வருவாய் திருடப்பட்டது. ஆனால் ஒன்று இப்படி சொன்னாலும் நம்ம ஆளுங்க ராசபட்டு குடிக்கிறது நிறுத்த போறது இல்லை. ஒன்று மட்டும் நிச்சயம் அடுத்த தலைமுறை என்ற ஒன்று இங்கு தறுதலை ஆக மட்டுமே இருக்கும். நம்மை நம் சொத்து களை வேறு மாநில அல்லது நாட்டினர் ஆளும் வாய்ப்பு மிக அதிகம்


c.mohanraj raj
ஜூன் 20, 2025 14:24

அவர் ஒன்றும் புதிதாகச் சொல்லவில்லை 24 மணி நேரமும் மது கிடைக்கின்றது


ஆரூர் ரங்
ஜூன் 20, 2025 12:57

கள்ளச் சாராயம் குடித்து இறந்த உத்தமர்களுக்கு 10 லட்சம் கொடுத்த மஹா பிரபு வம்சம். டாஸ்மாக் பிரியர்களுக்கும் இன்ஷூரன்ஸ் ஏற்பாடு செய்யலாம். வழக்கம் போல கலைஞர் மதுப் பிரியர்கள் காப்பீட்டுத் திட்டம் என பெயரிடலாம்.


Ramesh Sargam
ஜூன் 20, 2025 12:52

இப்ப மட்டும் என்னா நடக்குதாம்? டாஸ்மாக் கடைகள் 24 மணி நேரமும் திறந்துதான் கிடக்கிறது.


சுரேஷ் பாபு
ஜூன் 20, 2025 07:12

இவரோட தலைவர்கள் என்ன நினைக்கிறார்களோ அதை அப்படியே சொல்லிட்டாரு ..! எவன் செத்தா எனக்கென்ன நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சரி என்ற குறிக்கோள்.


Balaji
ஜூன் 20, 2025 06:57

The Ex MLA is telling that he will officially make the liquor shop open for 24 hours which is now being done unofficially.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை