உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் /  3 சீட் கேட்கும் பார்வர்டு பிளாக்: அ.தி.மு.க., அதிர்ச்சியோ அதிர்ச்சி

 3 சீட் கேட்கும் பார்வர்டு பிளாக்: அ.தி.மு.க., அதிர்ச்சியோ அதிர்ச்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைக்க முடிவு செய்துள்ள அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி, மூன்று தொகுதிகளை ஒதுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது. கட்சியின் தமிழ் மாநில குழுக்கூட்டம் உசிலம்பட்டியில் நடந்தது. இதில், 'சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைப்பது; சிங்கம் சின்னத்தில் போட்டியிடுவது' என உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, சென்னையில் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை, தமிழ் மாநில பொதுச் செயலர் கதிரவன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் சந்தித்தனர். இந்நிலையில், கதிரவன் கூறுகையில், “அ.தி.மு.க., கூட்டணியில், ஏற்கனவே உசிலம்பட்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன். கடந்த தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் உசிலம்பட்டி தொகுதி ஒதுக்கப்பட்டது. ''தற்போது, வரும் தேர்தலில் மீண்டும் அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைக்க முடிவு செய்து, இது தொடர்பாக பழனிசாமியை சந்தித்தோம். உசிலம்பட்டி, துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, நெல்லை மாவட்டம் நாங்குநேரி ஆகிய தொகுதிகளை கேட்க உள்ளோம்,” என்றார். இப்படி கதிரவன் கூறியதை சற்றும் எதிர்பார்க்காத அ.தி.மு.க.,வினர் கடும் அதிர்ச்சியில் உள்ளதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

V K
நவ 15, 2025 22:29

பழனி கொடுத்துட்டு போ நீ முதல்வர் வேட்பாளர் இல்லை நீ போட்டி போடுவது அதிமுக பொது செயலாளர் பதவிக்கு


பிரேம்ஜி
நவ 15, 2025 18:55

கூட்டணிக்கு குழி தோண்டும் ஈ.பி.எஸ்! எப்படியும் தோல்விதான்! அது அதிமுக 3 சீட்டு ஃபார்வடுக்கு கொடுத்து தோற்கலாம்! தவறில்லை!


ஜெகதீசன்
நவ 15, 2025 15:52

கூட்டனிக்கு பலம் சேர்க்க பல சிறிய கட்சிகளுடன் அனுசரித்து தான் போகனும். மூன்று கேட்டால் இரண்டை கொடுத்து சரிக்கட்ட வேண்டியது தான்.


N Sasikumar Yadhav
நவ 15, 2025 12:48

பீகார் மாதிரி கூட்டணி அமைக்கனும்


duruvasar
நவ 15, 2025 10:48

டர் காட்டிட்டோம் என நினைத்திருக்கிறார் போலும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை