உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / அமித் ஷாவை சந்தித்ததாலேயே தமிழகத்துக்கு நிதி வந்தது: பழனிசாமி

அமித் ஷாவை சந்தித்ததாலேயே தமிழகத்துக்கு நிதி வந்தது: பழனிசாமி

பெரம்பலுார்: ''தமிழக சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணி 210 தொகுதிகளில் வெற்றி பெறும்,'' என்று, அ.தி.மு.க., பொதுச்செயலரும், முன்னாள் முதல்வருமான பழனிசாமி பேசினார். பெரம்பலுார் மாவட்டம், குன்னத்தில் நடந்த, 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' கூட்டத்தில், பழனிசாமி பேசியதாவது:ஏழை மக்களை ஸ்டாலின் ஏமாற்றுகிறார். 100 நாள் வேலை திட்டத்துக்கான சம்பளத்தை, ஏழை மக்களுக்கு கொடுக்கவில்லை. ஆனால், மத்திய அரசு மீது குற்றஞ்சாட்டுகிறார்.இது தொடர்பாக மத்திய அமைச்சரிடம் நானே பேசினேன். அப்போது, 'இந்த திட்டம் தொடர்பான முறையான கணக்கை தமிழக அரசு காட்டவில்லை; அதனால், நிதி ஒதுக்கீடு செய்யவில்லை' என்றார். 'தமிழகத்தின் நலனுக்காக, நிதியை நீங்கள் விடுவித்துதான் ஆக வேண்டும்' என நாங்கள் கோரிக்கை வைத்ததும், அதை ஏற்று நிதி விடுவிக்கப்பட்டது. இப்படித்தான், எல்லா திட்டங்களிலும் ஏழைகள் வயிற்றில் அடிக்கும் அரசாக, ஸ்டாலின் அரசு செயல்படுகிறது.இங்கு கொடி பறக்கிறது, காரணம் காற்று. காற்று கண்ணுக்குத் தெரிவதில்லை. இப்படி கண்ணில் பார்க்க முடியாத விஷயங்களில் கூட ஊழல் செய்கிறவர்கள் தான் தி.மு.க.,வினர்.தி.மு.க.,வுக்கு மக்கள் செல்வாக்கு குறைந்து விட்டது. அந்த காரணத்தால், மக்களை குழப்பி பத்திரிகைகளில் பேட்டி அளிப்பதற்கென்றே, நான்கு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.கூடுதல் தலைமைச் செயலர் அமுதா, 1.5 கோடி பேரிடம் மனு வாங்கினோம். அதில், 1.1 கோடி மனுவுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். அப்படியென்றால், எந்தெந்த மனுவுக்கு தீர்வு காணப்பட்டது என்ற விபரத்தையும் சொல்ல வேண்டும். யார் தவறாக தகவல் சொன்னாலும், அ.தி.மு.க., ஆட்சி அமைந்ததும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஐ.ஏ.எஸ், அதிகாரிகள் பொதுவானவர்களாகத்தான் செயல்பட வேண்டும். உண்மையை மட்டுமே பேச வேண்டும். தி.மு.க.,வுக்கு உடந்தையாக இருக்காதீர்கள்.தி.மு.க.,தான் முக்கியம் என்றால், பதவியை ராஜினாமா செய்துவிட்டு தி.மு.க.,வில் சேர்ந்து கொள்ளலாம்.சட்டசபைத் தேர்தலில் 200 இடங்களில் வெல்வோம் என, தி.மு.க., கனவு கண்டு கொண்டிருக்கிறது. ஆனால், அ.தி.மு.க., கூட்டணிதான் 210 தொகுதிகளில் வெல்லப் போகிறது.நான் கள்ளத்தனமாக அமித் ஷாவை சந்தித்ததாக தி.மு.க.,வினர் கூறுகின்றனர். அவர் என்ன பாகிஸ்தானியரா, கள்ளத்தனமாக சந்திக்க? மக்கள் பிரச்னையை தீர்க்க அமித் ஷா வீட்டு கதவை நாங்கள் தட்டியதால் தான், 100 வேலை நாள் திட்டத்துக்கான பணம் கிடைத்தது. மக்கள் அனைவரும் ஓரணியில் உள்ளனர். தி.மு.க.,தான் வேறு அணியில் உள்ளது.தி.மு.க.,வில் உறுப்பினராக சேருங்கள் என கெஞ்சி கூத்தாடி பிச்சை எடுக்கின்றனர். அந்த அளவுக்கு இழிவான நிலைக்கு அப்பாவும், மகனும் சென்று விட்டனர். தி.மு.க.,வில் உறுப்பினராக சேராதவர்களுக்கு உரிமைத்தொகை நிறுத்தப்படும் என கூறுகின்றனர். அவர்கள் நிறுத்தினால், யாரும் கவலைப்பட வேண்டாம்; நாங்கள் ஆட்சிக்கு வந்ததும், உடனே வழங்குவோம். நிறுத்தப்பட்ட மாதத்துக்கும் சேர்த்து வழங்குவோம்.தேர்தலில் அ.தி.மு.க., தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். ஆட்சிக்கு வந்ததும், தி.மு.க., ஆட்சியில் நிறுத்தப்பட்ட அனைத்து திட்டங்களும் செயல்படுத்தப்படும். நாங்கள் மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம். ஸ்டாலினுக்கு பை பை சொல்வோம். இவ்வாறு பழனிசாமி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

ராஜா
ஜூலை 17, 2025 01:58

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் காக்கா குருவி போல சுட்டு 12 கொலை செய்த பாவத்துக்கு தண்டனை கிடைக்கும் தலைவரே, வடக்கன்ஸ் க்கு வாலாட்டி தப்பித்து விடலாம் என்று கனவு காணாதீர்கள், சாத்தான்குளம் கொலை வழக்கும் சும்மா விடாது என்ன நான் சொல்றது!!!


K.n. Dhasarathan
ஜூலை 16, 2025 21:35

அப்போ தூத்துக்குடி வெள்ளம் புயல் சேதமான பொது ஏன் நிதி வரவில்லை ? பாவம் காக்கை உட்கார பணம் பழம் விழுந்தது, நீங்கள் ஏனைய்யா போஸ்டர் போடா அலையறீர்கள் ? தமிழக கல்விக்கோ, மதுரை அய்ய்ம்ஸ் க்கோ நீங்கள் கேட்டால் நிதி வருமா ? அப்படி வாங்கி கொடுத்து பேர் வாங்கி கொள்ளலாமே ஏன் செய்யவில்லை ? பொய் சொன்னாலும் பொருத்தமாக சொல்லவேணாமா ?


R.P.Anand
ஜூலை 16, 2025 17:56

நாலரை ஆண்டுகள் சுரண்டி தின்றாகி விட்டது. இது இன்னும் 15 ஆண்டுகள் எதிர் கட்சியாக இருக்க தேவைப்படும்


venugopal s
ஜூலை 16, 2025 13:13

இவர் அமித்ஷாவை சந்தித்ததால் தமிழகத்துக்கு நிதி வரவில்லை, இவருக்குத் தான் பீதி வந்து பேதி ஆகி கூட்டணி அமைக்க ஒத்துக் கொண்டார்!


vivek
ஜூலை 16, 2025 16:40

அட வீணா போன வேணு அங்கே விசிக 25 சீட்டு கேட்குது


ராமகிருஷ்ணன்
ஜூலை 16, 2025 11:30

திறமையற்ற திருட்டு திமுக எந்த கணக்குகளையும் காட்டாமல் மத்திய அரசு தருகிற பணத்தையும், 5 லட்சம் கோடிகளை கடன் வாங்கி வாரி சுருட்டி முழுங்கி ஏப்பம் விடுவதை வழக்கமாக வைத்துள்ளார்கள். இவனுங்க ஆட்சியில் தமிழக அரசு திவாலாகும் நிலையில் உள்ளது. மக்கள் உஷாராக இருக்க வேண்டும்.


Oviya Vijay
ஜூலை 16, 2025 09:56

2026 தேர்தல் முடிவுகள் வரும் நாளில் எடப்பாடி மைண்ட் வாய்ஸ்: இம்புட்டு கூட்டம் சேர்த்துமா நாம தோத்தோம். இதில் அறியா உண்மை என்னவென்றால் கூட்டத்தைக் காண்பிக்காவிட்டால் வசவு விழுகும் எனக் கூட்டத்தை சேர்த்தவர்கள் ஒவ்வொரு ஏரியா நிர்வாகிகள். எப்படியாவது ஜெயித்து விட்டால் திரும்பவும் சம்பாதிக்க ஆரம்பித்து விடலாம் என்பது அவர்களின் எண்ணம். ஆனால் 2026 தேர்தலில் மக்கள் நாமம் போடுவார்களேயானால் இப்போது நிர்வாகிகள் வட்டிக்கு வாங்கி தண்ணியாக செலவு செய்யும் பணம் எல்லாம் கானல் நீராய்ப் போய்விடும். கோடிக்கணக்கில் பதுக்கிய தலைமையோ சுக வாழ்வு வாழ நிர்வாகிகள் நிலைமையோ அந்தோ பரிதாபம். ஜாக்கிரதை...


vivek
ஜூலை 16, 2025 10:46

அந்தோ பரிதாபம்...


vivek
ஜூலை 16, 2025 10:49

நான் பலமுறை கூறியது போல தோற்றவுடன் வேற ஒரு போலி பெயரில் கருத்து போடுவார்


vivek
ஜூலை 16, 2025 11:23

முதல்ல விசிக கட்சிக்கு 25 சீட்டு ஒதுக்கு....அப்புறம் கதை உடலாம்


pmsamy
ஜூலை 16, 2025 09:43

ரெண்டு பேரும் திருடனுங்க பெருசா எப்படி திருடுவது என்று திட்டம் போட்டு இருக்கீங்க


vivek
ஜூலை 16, 2025 11:37

பார்த்து பானை உடைய போகுது


பேசும் தமிழன்
ஜூலை 16, 2025 08:07

மத்திய அரசு கொடுத்த பணத்துக்கு கணக்கு கேட்டால்.. அதை கொடுக்காமல்.. மறுபடியும் பணம் கேட்டால் எப்படி.. கொடுத்த பணம் உண்மையான பயனாளிகளுக்கு சென்றதா... இல்லை இடையில் யாராவது ஆட்டையை போட்டு விட்டார்களா என்று மக்களுக்கு தெரிய வேண்டும் அல்லவா !!!


அப்பாவி
ஜூலை 16, 2025 06:30

காரியவாஸ்தே கத்தே கால ஹிடி என்று கன்னட பழமொழி உண்டு. காலில் விழுந்தா குடுக்க மாட்டாங்களா?


SUBBU,MADURAI
ஜூலை 16, 2025 06:12

அதிமுக பாஜக கூட்டணி Jell ஆகிவிட்டது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை