உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் /  தி.மு.க.,வில் பதவி பறிபோகும் யாரையும் கைவிடப்போவதில்லை: ஸ்டாலின் உறுதி

 தி.மு.க.,வில் பதவி பறிபோகும் யாரையும் கைவிடப்போவதில்லை: ஸ்டாலின் உறுதி

சென்னை: தி.மு.க.,வின் மறுசீரமைப்பு தலைமை நிலைய பிரதிநிதிகள் கூட்டம், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தலைமையில் நேற்று நடந்தது. அதில், ஸ்டாலின் பேசியதாவது: பிரதிநிதிகள் அனைவரும், மாவட்டங்களுக்கு சென்று, எந்தவித அழுத்தங்களுக்கும் அடிபணியாமல், அவரவர் பணிகளை சரியாக செய்ய வேண்டும். கட்சியின் அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் கேட்க வேண்டும். 'கிளை முதல் தலைமை வரைக்குமான பொறுப்புகளுக்கு, தேர்தல் தான் நடக்கும் என, ஸ்டாலின் அறிவித்துள்ளதால், நேர்மையான தேர்தலாக நடக்கும்' என, கட்சியினரிடம் சொல்ல வேண்டும். செயற்குழு தீர்மானங்களின் அடிப்படையில், பலருக்கு பதவி பறிபோகும். எனினும், அவர்கள் யாரையும் கைவிடப்போவதில்லை. 'அனைவருக்கும் தகுதிக்கேற்ப வேறு பதவிகளை வழங்கும் வகையில் ஸ்டாலின் முடிவெடுப்பார்' என்பதையும் எடுத்து சொல்லுங்கள். மறுசீரமைப்பு பணி முடிந்த பின், உறுப்பினர் சேர்க்கை தொடங்க வேண்டும். வேர்கள் வலிமையாக இருந்தால்தான், ஆலமரம் உறுதியாக நிற்கும். நம் கட்டமைப்பு தான் நம்மை தாங்கி நிற்கும் ஆணிவேர். அதை பலப்படுத்தும் பொறுப்பு உங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கொள்கையற்ற, கட்டமைப்பு இல்லாத கட்சிகள் வரும், போகும். மின்மினிப் பூச்சிகள் நிரந்தரம் கிடையாது; சூரியன் தான் நிரந்தரம். கட்சியை மறு சீரமைப்போம்; மீண்டும் வெல்வோம். இவ்வாறு, ஸ்டாலின் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

Mani . V
செப் 04, 2026 05:32

"......கொள்கையற்ற, கட்டமைப்பு இல்லாத கட்சிகள் வரும், போகும். மின்மினிப் பூச்சிகள் நிரந்தரம் கிடையாது சூரியன் தான் நிரந்தரம். கட்சியை மறு சீரமைப்போம் மீண்டும்....." பாலிடால் எதிர்க்கட்சி தலைவராக நீடித்தால் திமுக வுக்கு வெகு விரைவில் சஙகு தான்


M Ramachandran
செப் 04, 2026 04:04

aduththa karapaan pooochi. udhay nidhikku mattum thani sirappu


Vasan
செப் 04, 2026 03:25

ஒரு வேலை, ஸ்டாலின் தனது பதவியே பறிபோவதை குறிப்பிடுகிறாரோ?


sankaranarayanan
செப் 03, 2026 21:39

கொள்கையற்ற, கட்டமைப்பு இல்லாத கட்சிகள் வரும், போகும். மின்மினிப் பூச்சிகள் நிரந்தரம் கிடையாது ஆனால் வாரிசு அரசை மட்டும் இவர்கள் கடைபிடிப்பார்கள் இல்லாவிட்டால் பல ஆயிரக்கணக்கான சொத்துக்கள் வங்கி பல்லாயிரக்கணக்கை பல கோடி பணம் யாருக்கும் வெளியே போய்விடக்கூடாதே


Renukadevi,Srirangam
செப் 03, 2026 20:43

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு முதலில் ரிட்டையர்ட்மெண்ட் கொடுத்து விட்டு அடுத்த தாத்தாவான ஸ்டாலின் நீங்களும் இளைஞர்களுக்கு வழிவிட்டு வீட்டில் நிரந்த ஓய்வு எடுங்கள். அதுவே தமிழக மக்களின் தீராத ஆசை


தப்பு
செப் 03, 2026 19:35

தேர்தல் நிதி வசூலிக்க முடிவெடுக்கும்போது கண்டிப்பாக பதவி உங்களை தேடி வரும்


பைரவன்
செப் 03, 2026 16:54

யாரையும் கை விட மாட்டோம். ஏன்னா அவனுக நம்மள மாட்டி விட்ருவானுங்க.


Ganesun Iyer
செப் 03, 2026 16:20

நமக்கு நாமே...


பிரேம்ஜி
செப் 03, 2026 15:00

கழக வழக்கப்படி வழ வழ கொழ கொழ அறிவுரை! இது வந்து ஒன்றும் மாறிவிடாது மாற்றிவிடாது! தலைமை இருப்பை அவ்வப்போது காட்டிக் கொள்ள வேண்டும்! அதற்குத்தான் இது! அதுதான் கெத்து!


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 03, 2026 14:38

வேர்கள் வலிமையாக இருந்தால்தான், ஆலமரம் உறுதியாக நிற்கும். ..... கழகம் ஆலமரமல்ல .... விஷ மரம் ..... ஆலமரமாவது நிழல் தரும் .... கழகத்தால் மக்களுக்கு கிஞ்சித்தும் பயன் இல்லை ....


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை