வாசகர்கள் கருத்துகள் ( 7 )
சுவாரஸ்யமான பழைய நிகழ்வு. எண்பதுகளில் நகரின் மையப் பகுதியில் இருந்த அரங்கத்தில் கவர்ச்சிகரமான ஆங்கிலப் படத்தைக் காண கட்டுக்கடங்காத கூட்டம். டிக்கெட் வாங்க வந்த ஒவ்வொருவரையும் ஆங்கில எழுத்துக்கள் ABCD சொல்லத் தெரியுமா என்று(TEST) கேட்டுப் பார்த்துதான் தியேட்டருக்குள் அனுமதிக்கப் போகிறோம் என்று போலீசார் ஒலிபெருக்கியில் அறிவித்தார்கள். அடுத்த நிமிடம் பெரும்பாலான கூட்டம் காலியானது.
தமிழ் படத்துக்கு கூட்டம் வரவில்லை என்று தான் ஆங்கில அறிவு மக்களுக்கு வர வேண்டும் என்று ஆங்கில படம் போட்டார்கள் என்ன ஒன்றும் புரியவில்லை என்று கதை சுருக்கத்தை தியேட்டர் வாசலில் வைத்தார்கள் வர வில்லையே கூட்டம் சரி இடை இடையே நீல பட போட்டார்கள் அது முடிந்த உடன் ஒட்டு மொத்த தியேட்டர் காலியாகிவிடும்... பிறகு திருமண மண்டபம், அடுத்து மால் ஆகிவிட்டது... மதுரை மட்டும் அல்ல எல்லா ஊரிலும் இதே கதை தான்.
மதுரையின் அடையாளம் அருள்மிகு மீனாட்சி அம்மன் கோயில் திருமலை நாயக்கர் மகால் போன்றவை.
ரயிலடி அருகே ரீகல் டாக்கீஸ் பகல் நேரத்தில் லைப்ரரியாக செயல்பட்டது. வெயிலால் கொஞ்சம் லேட்டாக சென்று புத்தகம் எடுத்து அரைப் பக்கம் படிப்பதற்குள் சார் டிக்கட் கவுண்டர் திறக்கும் நேரம். கிளம்புங்கன்னு குரல். ஆங்கிலப் படங்கள் மட்டுமே திரையிடுவர். இப்போ இருக்கா?
சிறுவயதில் மீனாட்சி கோவிலருகிலுள்ள டாக்கீஸ் சென்ற போது, கவுண்டருக்கு வெளியே பிளாட்பாரத்தில் டிக்கெட் விற்றார்கள். வாங்கி உள்ளே போய் உட்கார்ந்தால் அடுத்த நிமிடமே காலின் மீது பெருச்சாளி ஓடியது. பேனை ஒரு ஊழியர் குச்சியால் சுற்றி ஸ்டார்ட் செய்து விட்டுச் சென்றார். அருகிலிருந்த நபர் பட பிரிண்ட் புதிய காப்பியா என சந்தேகமாக கேட்டார். குறைந்தது இருபது பேர் பீடி பிடித்து இழுத்து விட்டுக் கொண்டு அரங்கத்தை புகைமண்டலமாக்கிக் கொண்டிருந்தனர். பாக்கெட் சாராய குடிமகன் ஒருவர் என்மீது சாய்ந்து தேய்த்துக் கொண்டே சென்றான். படம் ஓடிக் கொண்டிருந்தபோதே நெய் போளி முப்பது பைசா முறுக்கு பத்து பைசா ன்னு வியாபாரக் குரல். மூன்றாவது ரீல் ஓடியவுடன் இடைவேளை விட்டு புரஜக்டரில் ஃபிலிம் ரீல் மாற்றினர். ராட்சச கொசுக்கடி பொறுக்கவே முடியாமல் வெளியேறிவிட்டேன்.
நீங்கள் குறிப்பிடுவது இம்பீரியல் தியேட்டர். அது ஒரு மூன்றாம் தர தியேட்டர். நடுதட்டு மற்றும் குடும்பத்தினர் அங்கு செல்வதில்லை. பெரும்பாலும் அது சமூக விரோதிகளின் பொழுது போக்கிடமாக இருந்தது. நான் போகாத ஒரே தியேட்டர்.
நல்லதுதான் நாட்டுக்கு நல்லது. சினிமா மூலம் அரசியலுக்கு வந்து, மக்களை மடையர்களாக்கி ஆட்சியில் அமர்ந்த கட்சியினரை நினைத்து பாருங்கள். 1000 தலைமுறைக்கு வேண்டிய சொத்துக்களை சுருட்டிய களவாணி கழகங்களை நினைத்து பார்த்தாலே சினிமா ஒழிய வேண்டும் என்று நினைப்பீர்கள்.