உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தீபாவளிக்கு உயர்ந்தது மற்ற நாட்களில் உயரல: மது விற்பனை குறித்து அமைச்சர் புது விளக்கம்

தீபாவளிக்கு உயர்ந்தது மற்ற நாட்களில் உயரல: மது விற்பனை குறித்து அமைச்சர் புது விளக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஈரோடு: ''தீபாவளி நாளில் மது விற்பனை உயர்ந்துவிட்டது. மற்ற நாட்களில் உயரவில்லை என சந்தோஷப்படுங்கள்'' என, வீட்டு வசதி மற்றும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி கூறினார். ஈரோட்டில் அமைச்சர் முத்துசாமி, அளித்த பேட்டி: 'கடந்த, நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, இந்தாண்டு தீபாவளிக்கு 'டாஸ்மாக்'கில் விற்பனை அதிகமாகி இருக்கிறது. அதில் ஒட்டுமொத்த அரசு இயந்திரத்தையும் பயன்படுத்தி உள்ளனர்' என, தமிழக பா.ஜ., தலைவர் நாகேந்திரன் அங்கலாய்த்திருக்கிறார். வழக்கம் போல் தான் இந்தாண்டும் டாஸ்மாக்கில் மது பாட்டில்கள் விற்கப்பட்டன. இதற்காக, எந்த சிறப்பான நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்தாண்டை விட கூடுதல் விற்பனை என்பது தானாக நடந்தது. ஒவ்வொரு ஆண்டும், கடந்த ஆண்டை விட கூடுதலாக மது விற்பனை நடப்பது வழக்கமாகி விட்டது. கடந்தாண்டுகளில், டாஸ்மாக் விற்பனையை உற்று நோக்கினால், எல்லாருக்கும் அது புரியும். விற்பனை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கோடு, தமிழக அரசு எந்த தனி முயற்சியும் எடுக்கவில்லை. உடனே, 'தீபாவளி யன்று , 300 கோடி ரூபாய்க்கும் அதிகமாக மது விற்பனை நடந்துள்ளதே. சமூகம் எதை நோக்கிச் செல்கிறது என பலரும் கவலை தெரிவிக்கத் துவங்கி விட்டனர். எதையும் குற்றச்சாட்டாக பார்க்க முடியாது. குடிக்கும் பழக்கம் சமூகத்தில் அதிகமாகி இருக்கிறது. அதை மாற்ற என்னென்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து அரசுத் தரப்பில் யோசித்து வருகிறோம். குடி பழக்கத்தில் இருப்போரிடமும் கலந்து பேசி, அவர்களுடைய தரப்பையும் கேட்டு அறிந்து தான், எதையாவது செய்ய வேண்டும். இதில் சட்டத்தை வைத்துக் கொண்டு வேறு எதுவும் செய்து விட முடியாது. இது தான் யதார்த்த சூழல். இதை எல்லோரும் உணர்ந்து கொள்ள வேண்டும். குறிப்பிட்ட தீபாவளி நாளில் மது விற்பனை உயர்ந்திருந்தாலும், மற்ற நாட்களில் உயராமல் இருப்பதைப் பார்த்து சந்தோஷப்பட வேண்டும். தீபாவளிக்கான விற்பனை கூடுதல் என்றவுடன், அது ஏதோ தீபாவளி நாளில் மட்டும் உயர்ந்த எண்ணிக்கை அல்ல. தீபாவளிக்கு முதல் நாள் விற்பனையையும் சேர்த்துத்தான் பார்க்க வேண்டும். பண்டிகை சூழல் வந்ததும், அதிகம் பேர் கூடுதல் எண்ணிக்கையில் மது வாங்கி, குடிக்கின்றனர். பூரண மதுவிலக்கு அமல்படுத்தும் விஷயத்தையும் அரசுத் தரப்பில் ஆராய்ந்து கொண்டு தான் இருக்கிறோம். அது பற்றி விரிவாக பிறகு பேசலாம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Mani . V
அக் 25, 2025 04:07

மது உடலுக்கு, வீட்டுக்கு, நாட்டுக்கு கேடு என்பதையும் தாண்டி, இந்த சாராயச்சாமி ஸாரி மொத்துசாமி ஸாரி முத்துசாமி நாட்டுக்கு மிகவும் கேடானது, ஆபத்தானது. இது போன்ற ஆபத்தான மிருகங்களை என்கவுண்டரில் போட்டுத் தள்ளணும்.


Vasan
அக் 24, 2025 21:23

ரேஷன் கடையில் நிற்பது போல், ஒரு நீண்ட வரிசையில், அனைத்து சார மக்களையும், டாஸ்மாக் கடை வாசலில், கடை திறக்கும் முன்னதாகவே காலை வேளைகளில் பார்ப்பது மிக மிக கொடுமையாய் இருக்கிறது. அந்த வரிசையில் நிற்பவர்களின் தாயார் அவர்களை அந்த நிலைமையில் பார்த்தால் வயிற்றில் அடித்துக்கொண்டு அழுவார்கள். தமிழர்களை இந்த போதை பழக்கத்துக்கு அடிமையாக்கிய திராவிட கட்சிகளுக்கு பாவ மன்னிப்பே கிடையாது.


kjpkh
அக் 24, 2025 20:24

ஆஹா என்ன அருமையான கருத்துக்களை அமைச்சர்முத்துசாமி கூறியிருக்கிறார். மதுப்பிரியர் உடன் ஆலோசனை நடத்த வேண்டுமாம். இப்போது இருக்கும் சட்டம் போதாதாம். சமூகத்தில் குடிகாரர்கள் பெருகிவிட்டார்கள் என்று வருத்தப்படுகிறார். மதுவிலக்கு அமல்படுத்தி விடலாமே. இதற்கு ஏன் இவ்வளவு கவலைப்படுகிறார். கள்ளத்தனமாக குடிப்பவர்கள் மட்டும் தானே குடிப்பார்கள். அமைச்சர் முத்துசாமியின் கருத்துக்கள் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை.


பேசும் தமிழன்
அக் 24, 2025 19:45

மூடு.... டாஸ்மாக்கை மூடு என்று சென்ற ஆட்சியின் போது கோஷம்..... வீட்டுக்கு முன்னால் கோலம் போட்டது எல்லாம் பொய்யா கோபால் ???


theruvasagan
அக் 24, 2025 16:06

அமிச்சர் எப்பவும் போல தனது அதிரடியான கருத்தை கூறியுள்ளார். எதையும் குற்றச்சாட்டாக பார்க்க முடியாது. குடிக்கிறவன் அபிப்ராயத்தை கேட்டுவிட்டுதான் மதுவிலக்கு வேண்டுமா அல்லது வேண்டாமா என்று முடிவு செய்வாங்களாம். திருடுகிற பழக்கத்தையும் கூட மாத்த முடியாது ஆகையால் திருடனை கருத்தை கேட்டுவிட்டுதான் திருடுவது குற்றமா இல்லையா என்பதை ஒரு முடிவுக்கு வருவாங்க போல. ஏற்கனவே குடிகாரன்னு சொல்லாதீங்க. மதுபிரியர்கள்னு கவுரமாக சொல்லணும் என்கிற அறிவார்ந்த கருத்தை உதிர்த்த பண்பாளர் இவர்.


sankar
அக் 24, 2025 16:02

மஹா புத்திசாலி


rajan_subramanian manian
அக் 24, 2025 12:54

என்னே ஒரு தத்துவம். நேற்று ஒரு நூறு பேர் விஷ சாராயம் குடித்து இறந்தார்கள். இன்றும் அதன் முந்தினமும் ஒரு நாலு பேர் தான் இறந்தார்கள். ஆகவே ஒரு நாளில் நடந்ததை மட்டும் ஏன் பேசுகிறீர்கள்? மழை காலத்தில் மட்டும் தான் ரோடு காணவில்லை. மற்ற நாட்களில் குண்டும் குழியும் கண்ணில் தெரியுமாறு பார்க்கும்படி வைத்துள்ளதை ஏன் பாராட்டமாட்டர்களா? இனிமேல் யாராவது கேள்விகேட்பீர்கள் ?


Sun
அக் 24, 2025 09:46

பூரண மது விலக்கையும் அரசு ஆராய்ந்து கொண்டு இருக்கிறதாம்! அமைச்சர் கூறுகிறார்! இந்த வருடத்தின் மிகப் பெரிய ஜோக் இதுதான்.


KOVAIKARAN
அக் 24, 2025 09:35

பூரண மதுவிலக்கு அமல்படுத்தும் விஷயத்தையும் அரசுத் தரப்பில் ஆராய்ந்து கொண்டு தான் இருக்கிறோம் என்று சாராயம் விற்கும் துறை அமைச்சர் கூறுகிறார். கடந்த நான்கரை வருடங்களாக ஆராய்ந்துகொண்டு இருக்கிறீர்களா அமைச்சர் அவர்களே? நாங்கள் ஆட்சிக்கு வந்தால், சாராயக்கடைகளை மூடுவோம் என்று சொல்லித்தானே 2021ல் ஆட்சிக்கு வந்தீர்கள். ஆனாலும் இதுவரை ஒன்றும் செய்யவில்லை. இப்போது அடுத்த தேர்தல் நெருங்குவதால் மறுபடியும் அதே பழைய வாக்குறுதிகளை கொடுப்பதற்காக இப்போதே இவ்வாறு பேச ஆரம்பித்து விட்டீர்களா? நீங்கள் என்ன வாக்குறுதி கொடுத்தாலும், இந்த முறை தமிழக மக்கள் பொய்வாக்குறுதி, திருட்டு தீய திமுக விற்கு ஓட்டு போட்டு மறுபடியும் ஏமாறமாட்டார்கள்.


பேசும் தமிழன்
அக் 24, 2025 08:55

இன்னும் நூறு டாஸ்மாக் சாராய கடைகளை திறந்து வையுங்கள். தமிழர்கள் திருந்தி விடுவார்கள். அது தான் நீங்கள் அவர்களை திருத்த செய்யும் நல்ல காரியம். தமிழர்கள் தங்களுக்கு தாங்களே ஆப்பு வைத்து கொண்டு விட்டார்கள்..... இனி என்ன சொல்ல ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை