உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / வாக்குறுதிகளுக்கு மோடி காரன்ட்டி; அ.தி.மு.க.,வுக்கு பா.ஜ., ஆலோசனை

வாக்குறுதிகளுக்கு மோடி காரன்ட்டி; அ.தி.மு.க.,வுக்கு பா.ஜ., ஆலோசனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'தமிழக சட்டசபை தேர்தலில், பல்வேறு புதிய அறிவிப்புகளை தேர்தல் வாக்குறுதிகளாக வெளியிடுமாறும், அதை நிறைவேற்ற பிரதமர் மோடி தலைமையிலான அரசு உதவி செய்யும்' எனவும், அ.தி.மு.க., தலைமைக்கு பா.ஜ., மேலிடம் ஆலோசனை வழங்கி உள்ள தகவல் வெளியாகி உள்ளது. கடும் அதிருப்தி இது குறித்து, பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது: https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=bfphr0z0&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கடந்த 2021 சட்டசபை தேர்தலின் போது, 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும்' என, தி.மு.க., தேர்தல் வாக்குறுதி அளித்தது. தேர்தலில் வெற்றி பெற்று அக்கட்சி ஆட்சி அமைக்க இந்த வாக்குறுதி முக்கிய காரணமாக இருந்தது. ஆனால், ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகளுக்கு பின், 2023 செப்டம்பரில் தான் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டது. அனைத்து மகளிருக்கும் என வாக்குறுதி அளித்துவிட்டு, 1.15 கோடி பேருக்கு தான் வழங்கப்படுகிறது. ஐந்து சவரனுக்கு உட்பட்ட தங்க நகைக்கடன் தள்ளுபடி, அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம், தொகுப்பூதிய பணியாளர்கள் பணி நிரந்தரம் உட்பட, எந்த வாக்குறுதியும் முழுதுமாக நிறைவேற்றப்படவில்லை. இதற்கு, தி.மு.க.,அரசின் நிர்வாகத் தோல்வியே காரணமாகக் கூறப்படுகிறது. கூடவே, தமிழக அரசு கடும் நிதி நெருக்கடியில் இருப்பதும், வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமைக்கு காரணம் என்றும் சொல்லப்படுகிறது. வாக்குறுதிகளை தி.மு.க., அரசு முழுதுமாக நிறைவேற்றாததால், அக்கட்சி மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். அதேசமயம், மஹாராஷ்டிரா, ம.பி., என, பா.ஜ., ஆளும் மாநிலங்களில், தமிழகத்தை விட கூடுதலாக மகளிருக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்படுகிறது. தொழில் துவங்க கடன் உட்பட பல திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. இது தொடர்பான அறிவிப்புகளை, பா.ஜ., தரப்பு தேர்தலுக்கு முன் வாக்குறுதிகளாக அறிவித்ததாலேயே, அந்த மாநிலங்களில் பா.ஜ.,வினர் கூடுதல் எண்ணிக்கையில் வெற்றி பெற்றனர். பிரதமராக மூன்றாவது முறை மோடி பொறுப்பேற்றுள்ளார். இதற்கு, அவர் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையே பிரதான காரணம். அதோடு, மத்தியில் ஸ்திரத்தன்மையோடு ஆட்சிப் பொறுப்பில் இருப்பதால், பிரதமர் மோடியால் நினைத்த மாத்திரத்தில் நிதி உள்ளிட்ட பல விஷயங்களில், எந்த மாநிலத்துக்கும் உதவிகளை செய்ய முடியும். நிதியுதவி எனவே, 'வரும் தமிழக சட்டசபை தேர்தலில், மகளிருக்கு மாதம், 2,500 ரூபாய் நிதியுதவி, தாலிக்கு தங்கம், தொகுப்பூதிய பணியாளர்கள் பணி நிரந்தரம் உட்பட, மக்கள் பயன்பெறும் வகையில் வாக்குறுதிகளை வெளியிடுங்கள். 'இதற்கான நிதி ஆதாரம் குறித்து கவலையே பட வேண்டாம். இது தொடர்பாக யார் விமர்சனம் செய்தாலும், அ.தி.மு.க., அளிக்கும் வாக்குறுதிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி 'காரன்ட்டி' அளித்துள்ளார். 'மத்திய அரசிடம் இருந்து நிதியுதவி பெற்று வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் என்று நம்பிக்கையோடு சொல்லுங்கள்' என பதிலளிக்குமாறு, அ.தி.மு.க., தலைமைக்கு பா.ஜ., தரப்பில் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

முருகன்
டிச 31, 2025 16:47

அ...மை என்பது உண்மை தான்


Srprd
டிச 31, 2025 16:07

Bsn all these senseless freebies. No free bus travel for anyone. If women have money to buy a phone for 30K, why do they need free bus travel? Stop this உரிமை தொகை and all this rubbish. It's plain bribe given pre election.


Haja Kuthubdeen
டிச 31, 2025 12:43

ஐந்து பவுனுக்கு மிகாமல் அனைத்து வங்கிகளிலும் பணக்கஸ்டத்தில் வைத்துள்ளோருக்கு முழுமையாக இல்லை என்றாலும் 70%சதவீதம் மாணியம் வழங்கினால் அதுவும் ஆட்சிக்கு வந்த முதல் கையெழுத்து என்றால் அதுவே வெற்றி என்பதை எடப்பாடியார் அறியனும்.


Oviya Vijay
டிச 31, 2025 12:30

நீங்கள் என்ன தான் கணக்கு சொன்னாலும் மத்திய அரசு தமிழகத்திற்கு நிதி ஒதுக்காமல் வஞ்சித்து வருகிறது என தமிழக மக்களின் மனதில் திமுக ஆழமாக பதிய வைத்து விட்டது. அதை அவர்களின் மனதில் இருந்து மாற்றுவது அவ்வளவு எளிதல்ல... மேலும் மாநில அரசால் அறிவிக்கப் பட்ட மகளிர் உரிமைத் தொகை மற்றும் மகளிருக்கான இலவச பஸ் பயணம் போன்ற சலுகைகளை அனுபவிக்கும் மக்களை பிஜேபி தன் பக்கம் இழுப்பதற்கு தலைகீழ் நின்றாலும் முடியாது... அதனால் தான் நான் தொடர்ந்து என் பதிவுகளில் கூறிக்கொண்டு வருகிறேன். தமிழகத்தில் மீண்டும் ஆளுங்கட்சியே ஜெயிக்கப் போகிறதென்று... பிஜேபி தமிழகத்தில் ஆட்சி அமைப்பது போல் கனவு வேண்டுமானால் கண்டு கொள்ளலாமே ஒழிய நிஜத்தில் வாய்ப்பில்லை. நினைவில் கொள்வீர்...


Muhammad Ghori,Chennai
டிச 31, 2025 14:54

அதெல்லாம் ஒரு பக்கம் கெடக்கட்டும்


Haja Kuthubdeen
டிச 31, 2025 16:01

சரி சரி ஓவியரே அழாதீங்க..சும்மா தமாஸ்..99%நிறைவேற்றிடீங்க...தில்லா நில்லுங்க...போறதுக்கு முண்ணாடி இந்த தூய்மைபணியாளர்கள்..செவிலியர்கள் ..உங்கள் ஆசிரியர்களுக்கு ஏதாவது நல்லது செஞ்சிட்டு கிளம்புங்க..இந்த செங்கவ்..நீட் பத்திலாம் பேசிடாதீங்க..மக்கள் செம கோபத்தில் கிடக்காய்ங்க..கடுச்சு வெச்சிடுவாங்க..தமாஸ்...


ரவீந்திரன்
டிச 31, 2025 21:46

போன முறை தமிழக மக்கள் ஸ்டாலினை நம்பினார்கள். ஆனால் அவரது அரசு 23ம் புலிகேசி போல் உள்ளதால் இந்த முறை யார் ஜெயித்தாலும் திமுக கடுமையாக தோற்கும் என்பதில் ஐயமில்லை


Oviya Vijay
டிச 31, 2025 12:01

இந்தியாவிலேயே முதன்முறையாக பெண்களுக்கான உரிமைத் தொகை என்று திமுக தன் தேர்தல் அறிக்கையில் அறிவித்து அதை நடைமுறைப்படுத்தியதையும், மாநகர பேருந்துகளில் பெண்கள் பயணிக்க இலவசம், மின்சாரம் இலவசம் போன்ற அறிவிப்புகளும் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தது. அடுத்து வந்த பல்வேறு மாநில தேர்தல்களில் திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸும் இதையே காப்பி அடித்து கர்நாடகா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்தது. இலவச அறிவிப்புகள் நாட்டிற்கு ஆபத்து என்று பொது மேடையில் பீலா விட்ட நம்ம ஜீ கட்சியும் மேற்கண்டவைகளையே தேர்தல் வாக்குறுதிகளாகக் கூறி சில மாநிலங்களில் ஆட்சியும் கைப்பற்றினர். மாநிலங்களைப் பார்த்து ஒன்றியமும், ஒன்றியத்தை பார்த்து மாநிலங்களும் காப்பி அடிப்பது ஒன்றும் புதிதல்ல. ஏதோ ஒரு வகையில் நல்லது நடக்கிறதா என்று பார்க்க வேண்டுமே தவிர அதை விடுத்து தங்கள் கட்சியினர் ஏதோ உத்தம புத்திரர்கள் என்பதைப் போல பாஜகவினர் இங்கே கூவிக் கொண்டுள்ளனர்...


Oviya Vijay
டிச 31, 2025 11:59

நீங்கள் என்ன தான் கணக்கு சொன்னாலும் மத்திய அரசு தமிழகத்திற்கு நிதி ஒதுக்காமல் வஞ்சித்து வருகிறது என தமிழக மக்களின் மனதில் திமுக ஆழமாக பதிய வைத்து விட்டது. அதை அவர்களின் மனதில் இருந்து மாற்றுவது அவ்வளவு எளிதல்ல... மேலும் மாநில அரசால் அறிவிக்கப் பட்ட மகளிர் உரிமைத் தொகை மற்றும் மகளிருக்கான இலவச பஸ் பயணம் போன்ற சலுகைகளை அனுபவிக்கும் மக்களை பிஜேபி தன் பக்கம் இழுப்பதற்கு தலைகீழ் நின்றாலும் முடியாது...


கந்தசாமி,மதகுபட்டி
டிச 31, 2025 15:03

கர்த்தரே இவர்கள் பண்ணும் பாவங்களை மன்னியுங்கள் ஏனென்றால் இவர் தன்னை ஒரு சங்கி என்று நீண்ட நெடிய கொடிய விளக்கம் கொடுத்து ஓவியமாக பறை சாட்டிக் கொணடவர்


அப்பாவி
டிச 31, 2025 11:49

வடை சூப்பரா இருக்கும். அதுக்கு நான் கேரண்ட்டி.


Venugopal S
டிச 31, 2025 11:12

மட்டமான அரசியல்!


Santhakumar Srinivasalu
டிச 31, 2025 08:57

தமிழ் நாட்டுக்கு கொடுக்க வேண்டிய நிதியை கொடுக்காமல் தேர்தல் அறிக்கைக்காக ஈபிஎஸ் க்கு கொடுக்கிறதா மத்திய அரசு?


Haja Kuthubdeen
டிச 31, 2025 16:03

இப்ப கொடுக்கலாம்தான்..தேர்தல் வருதா...எப்பவும் போல வேலய காட்டிடுவாய்ங்கன்னு பயம்..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை