உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / திருப்பதியில் நேரு அன்னதானம்: அமலாக்கத்துறை புகாருக்கா... பிறந்த நாள் ஏற்பாடா?

திருப்பதியில் நேரு அன்னதானம்: அமலாக்கத்துறை புகாருக்கா... பிறந்த நாள் ஏற்பாடா?

அமலாக்கத்துறை வழக்கில் இருந்து தன்னை காப்பாற்ற, திருப்பதி வெங்கடாஜலபதியிடம் அமைச்சர் நேரு வேண்டிக் கொண்டு, 44 லட்சம் ரூபாய் நேர்த்திக்கடன் செலுத்தியதாக சமூக வலைதளங்களில் பரப்பரப்பான விவாதமாகி உள்ளது. திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில், தினமும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு திருமலை - திருப்பதி தேவஸ்தானத்தின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா அன்னப்பிரசாதம் அறக்கட்டளை சார்பாக மூன்று வேளை அன்னதானம் வழங்கப்படுகிறது. இந்த அன்னதான சேவைக்காக, ஒரு நாள் முழு செலவான 44 லட்சம் ரூபாயை நன்கொடையாக அளிக்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=lcaudb4l&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0காலை 10 லட்சம், மதியம் 17 லட்சம் மற்றும் இரவு 17 லட்சம் ரூபாய் என மூன்று வேளைக்கான செலவை தேவஸ்தானத்திடம் முன்கூட்டியே செலுத்தி விட்டால், நன்கொடையாளர் பெயரில், குறிப்பிட்ட நாள் முழுதும் அன்னதானம் அளிக்கப்படுகிறது. நன்கொடை அளித்தவர் பெயர், கோவிலை சுற்றியுள்ள டிஜிட்டல் போர்டுகளில் ஒளிர்ந்து கொண்டு இருக்கும். அந்த வகையில் நேற்று முன்தினம் தி.மு.க.,வின் முதன்மை செயலரும், நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சருமான நேரு, 44 லட்சம் ரூபாய் செலுத்தி, திருப்பதி கோவிலில் அன்னதானம் வழங்கி உள்ளார். அவரது பெயரும், வழங்கிய தொகையும் கோவிலை சுற்றி டிஜிட்டல் போர்டுகளில் ஒளிபரப்பானது. நேற்று முன்தினம் நேருவின் பிறந்த நாள் என்பதால், அதற்காக அன்னதான நன்கொடை அளிக்கப்பட்டதாக, நேரு ஆதரவாளர்கள் கூறுகின்றனர். ஆனால், அமலாக்கத்துறை புகாரில் சிக்கியிருக்கும் அவர், அதில் இருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள வெங்கடாஜலபதியிடம் வேண்டிக் கொண்டு, அன்னதான நேர்த்திக்கடன் செலுத்தி உள்ளார் என, சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசுகின்றனர். இது குறித்து அமைச்சர் நேருவிடம் கேட்டபோது, ''எங்கள் குடும்பம் சார்ந்த நிறுவனத்தின் சார்பில் என் பிறந்த நாளுக்காக, ஓராண்டுக்கு முன்பே அன்னதானத்துக்காக திருப்பதி கோவிலுக்கு தொகை செலுத்தி இருந்தனர். ''அந்த வகையில் தான், அன்னதானம் அளிக்கப்பட்டது. அதை கோவில் டிஜிட்டல் போர்டில் போட்டுள்ளனர். மற்றபடி, வேறு எதற்காகவும் அன்னதானம் செய்யவில்லை,'' என்றார். திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் நேற்று முன்தினம் அன்னதான செலவு 44 லட்சம் ரூபாயை அமைச்சர் நேரு வழங்கியதால், கோவிலின் டிஜிட்டல் போர்டில் அவரது பெயர் ஒளிபரப்பானது. - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 31 )

kalyanasundaram
நவ 12, 2025 17:56

you can cheat public but NOT GOD


jkrish
நவ 12, 2025 03:19

நயவஞ்சகம் என்பதை தெரிந்தும் ஒருவரை வாழ்த்துவதும் போற்றுவதும், நமக்கும் அதில் ஏதும் கிடைக்காத என்ற நப்பாசை தான். இது தான் இன்றைய நிலைமை..


Easwar Kamal
நவ 12, 2025 01:50

தமிழ நாட்டில் கொள்ளை அடித்த பணத்தை ஆந்திராவுக்கு வாரி இறைக்கிறணுவ. இது எல்லாம் அந்த அண்ணாமலையோ அல்லது எடப்பாடியோ அப்படியே கண்டும் காணாமல் போய் விடுவார்கள். இதை எல்லாம் மேடையில் பேசினால் அடுத்த முறை எவனாவது திருப்பதிக்கு இந்த மாதிரி லட்சங்களை தூக்கி எரிவானா ? இந்த கடவுள் கூட இப்படி பட்ட பாவ பணத்தை வ்மகி உண்டியலில் போட்டு கொள்வதுதான் வேதனை.


ராஜ்
நவ 11, 2025 21:28

நேரு பக்கா தெலுங்குகாரர்


தமிழ்வேள்
நவ 11, 2025 20:39

09.11.2025 அன்று திருப்பதியில் அன்னதானத்தில் தின்றவர்கள் நேருவின் பாவத்தை பிரித்து வாங்கி கொள்கிறார்கள் என்பது இதன் பொருள்....


Kulandai kannan
நவ 11, 2025 19:26

திருப்பதி சென்றதற்காக சிவாஜியை நீக்கிய கட்சி திமுக.


சிட்டுக்குருவி
நவ 11, 2025 19:20

எல்லோருக்கும் நாத்திகத்தை போதிப்பாங்க ,அவங்களுக்கு பிரச்சனை வரும் போது ஆத்திகத்தை கடைப்பிடிப்பாங்க . இதுதான் உலகம்போற்றும் திராவிட மாடல் .


ஆரூர் ரங்
நவ 11, 2025 18:04

தெலுங்கர் தெலுங்குப் பகுதி ஆலயத்துக்கு கொடுத்தால் நமக்கென்ன? ஓ . அது நம்ம வரிப்பணத்தில்..சுருட்டியதா?


surya krishna
நவ 11, 2025 16:35

இவர்கள் தி க வழி வந்த கூட்டம் நம்புங்கள் கேவலம்...


V Gopalan
நவ 11, 2025 16:01

Against the principle of DMK, how Minister Shri KN Nehru donated Rs.44,00,000-00. Let this should be forwarded to his DMK cadre who was criticising Thiruppathi after the visit. So, preaching is very easy but to practice is very difficult.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை