வாசகர்கள் கருத்துகள் ( 1 )
நிதி வருவாய் கூடுதல் என்றால் நாட்டு மக்கள் சுபிச்சமாய் உள்ளனர் மற்றும் வரி செலுத்தும் அளவிற்கு மக்கள் வருவாய் கூடியுள்ளது.
புதுடில்லி; அடுத்த நிதியாண்டில், அரசின் நிகர வரி வருவாய், 28.20 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து 'கேர்எட்ஜ் ரேட்டிங்ஸ்' நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நடப்பு நிதியாண்டுடன் ஒப்பிடுகையில், 2025 - 26ம் நிதியாண்டில், அரசின் நிகர வரி வருவாய் 10.40 சதவீதம் அதிகரிக்கும். மொத்த வரி வருவாய் 41.40 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும். நிகர வரி வருவாய் 28.20 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும்.வரி வசூல் 23.30 லட்சம் கோடி
நடப்பு ஆண்டைப் போலவே, அடுத்த நிதியாண்டிலும் நேரடி வரி வசூல், ஜி.எஸ்.டி., வசூல் ஆகியவை ஆரோக்கியமான வளர்ச்சி காணும். கம்பெனி வரி வருவாய் நடப்பு நிதியாண்டை விட, அடுத்த நிதியாண்டில் 11.40 சதவீதம் உயரும். ஒட்டுமொத்த நேரடி வரி வசூல் 23.30 லட்சம் கோடி ரூபாயை எட்டும். மறைமுக வரி வளர்ச்சி 11.90 சதவீதம் அதிகரித்து, 18.10 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும். ஜி.எஸ்.டி., வசூல் 11.40 சதவீதம் உயர்ந்து 11.80 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும். சுங்க வரி வசூல் குறிப்பிடத்தக்க வளர்ச்சி கண்டு, 20 சதவீத உயர்வை பதிவு செய்யக்கூடும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நிதி வருவாய் கூடுதல் என்றால் நாட்டு மக்கள் சுபிச்சமாய் உள்ளனர் மற்றும் வரி செலுத்தும் அளவிற்கு மக்கள் வருவாய் கூடியுள்ளது.