உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ரூ.13,179 கோடிக்கு மின்சாரம் கொள்முதல்; நீதிமன்றம் விசாரிக்க பா.ம.க., வலியுறுத்தல்

ரூ.13,179 கோடிக்கு மின்சாரம் கொள்முதல்; நீதிமன்றம் விசாரிக்க பா.ம.க., வலியுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: “அதிக விலைக்கு தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து, அனுமதிக்கப்பட்ட அளவை விட, இரு மடங்கு மின்சாரத்தை, தமிழக மின் வாரியம் வாங்கிய மர்மம் கண்டறியப்பட வேண்டும்,” என பா.ம.க., தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.

அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

கடந்த 2023 -- 24ம் ஆண்டில், 7,373 கோடி யூனிட் மின்சாரத்தை, பல்வேறு ஆதாரங்களில் இருந்து 42,575 கோடி ரூபாய்க்கு வாங்க, மின்சார வாரியத்திற்கு ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் அளித்திருந்தது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=qouzw1ng&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

அரசுக்கு இழப்பு

ஆனால், மின்சார வாரியம், 917.6 கோடி யூனிட் மின்சாரத்தை கூடுதலாக தனியாரிடமிருந்து வாங்கி யுள்ளது. இதற்காக 1 யூனிட்டுக்கு சராசரியாக 14.36 ரூபாய் வீதம், 13,179 கோடி ரூபாயை மின்வாரியம் கூடுதலாக செலவழித்துள்ளது.மின்சார தேவையை காரணம் காட்டி, சராசரியாக 5.57 ரூபாய்க்கு வாங்க வேண்டிய மின்சாரத்திற்கு 6.93 ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது. கூடுதலாக தேவைப்படும் மின்சாரத்தை, மத்திய அரசின் மின் உற்பத்தி நிலையங்களில் வாங்கியிருந்தால், அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருக்காது. மிகக்குறைந்த விலையில் மின்சாரம் வழங்கும் மத்திய மின் நிறுவனங்களிடம், அனுமதிக்கப்பட்ட அளவை விட 302 கோடி யூனிட் மின்சாரத்தை, குறைவாக வாங்கிய மின் வாரியம், அதிக விலைக்கு தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து, அனுமதிக்கப்பட்ட அளவை விட இரு மடங்கு மின்சாரத்தை வாங்கிய மர்மம் கண்டறியப்பட வேண்டும். இதுகுறித்து உயர் நீதிமன்ற மேற்பார்வையில் விசாரணை நடத்த, தமிழக அரசு உடனே உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அன்புமணி கூறியுள்ளார்.

உண்மை இல்லை

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை:மின்சார வாரியம் இழப்பில் இயங்குவதாகவும், அது லாபத்தில் இயங்க, மின் கட்டணம் உயர்த்தப்படுவதாகவும், தமிழக அரசின் சார்பில் கூறப்படுகிறது. இது ஒரு மாயை. மின் கட்டணம் உயர்த்தப்படாததால், மின் வாரியம் இழப்பை எதிர்கொண்டு வருகிறது. மின் கட்டணத்தை உயர்த்தினால், மின் வாரியம் லாபத்தில் இயங்கும் என்பதில் உண்மை இல்லை.கடந்த 2022 செப்., மாதம், மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. அந்த ஆண்டின், ஏழு மாதங்களில் மட்டும் மின்சார வாரியத்திற்கு 23,863 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைத்தது. ஆண்டு முழுதும் கணக்கிட்டால், 31,500 கோடி ரூபாய் கூடுதல் வருமானம் கிடைத்திருக்கக்கூடும். அதற்கு முன் மின் வாரியம், ஆண்டுக்கு சுமார் 9 ,000 கோடி ரூபாய் இழப்பில் இயங்கி வந்தது. மின் கட்டணம் உயர்த்தப்பட்ட பின், 2022-23ம் ஆண்டில் மின் வாரியத்திற்கு குறைந்தது 14,000 கோடி ரூபாய் லாபம் கிடைத்திருக்க வேண்டும். ஆனால், மின் வாரியத்தின் இழப்பு, அந்த ஆண்டில் 10,000 கோடி ரூபாயாக அதிகரித்தது.மின் வாரியத்தின் இழப்புக்கு காரணம், தனியாரிடமிருந்து அதிக விலைக்கு மின்சாரம் வாங்குவதுதான். அதற்கு முடிவு கட்டி, நிலுவையில் உள்ள மின் திட்டங்களை செயல்படுத்தினால், மின் வாரியத்தை லாபத்தில் இயக்க முடியும். எனவே, ஜூலை மாதம் முதல், மின் கட்டணத்தை உயர்த்தும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

வயிற்றில் அடிக்கலாமா?

தி.மு.க., அரசு பொறுப்பேற்ற பின், 2022ம் ஆண்டு வீடுகள், குறு, சிறு தொழில் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், என அனைத்திற்கும், மின் கட்டணம் இரண்டு மடங்குக்கும் மேலாக உயர்த்தப்பட்டது, இதர மின்சேவை கட்டணங்களும் பன்மடங்கு உயர்த்தப்பட்டன.தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், மின் கட்டணம் வாயிலாக, ஆண்டுக்கு 6,000 ரூபாய் மிச்சமாகும் என அறிவித்து விட்டு, 6,000 ரூபாய்க்கும் மேலாக, மின் கட்டணத்தை உயர்த்தி பொதுமக்கள் வயிற்றில் அடித்துள்ளது. ஆண்டுதோறும் மின் கட்டணத்தை உயர்த்தும் தி.மு.க., அரசு, மீண்டும் மின் கட்டணத்தை உயர்த்த உத்தேசித்துள்ளது. முதல்வர் உடனே தலையிட்டு, மின் கட்டண உயர்வுக்கு அனுமதி மறுக்க வேண்டும். பன்னீர்செல்வம், முன்னாள் முதல்வர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

திருட்டு திராவிடன்
மே 19, 2025 21:52

ராமதாஸ் ஐயா இந்த நேரம் ஸ்டாலின் கூட்டணிக்கு அழைத்து இருந்தால் ....


அப்பாவி
மே 19, 2025 09:26

ஏன் பொதுநல கேஸ் போடக்கூடாது?


JAYACHANDRAN RAMAKRISHNAN
மே 19, 2025 08:12

மின்சார வாரியத்தை இலாப கரமாக மாற்ற வேண்டும் என்றால் லல்லு பிரசாத் அவர்களின் தொழில் கொள்கை பின்பற்ற வேண்டும். அதாவது எந்த புதிய திட்டத்திற்கும் நிதியை கொடுக்க கூடாது. புதிய திட்டங்கள் பற்றி பேச வேண்டும் ஆனால் நிதி தரக்கூடாது. செலவுகளை குறைக்கிறேன் என்று புதிய மின் இணைப்புகள் தரக்கூடாது. இருக்கும் மின் இணைப்புகளுக்கு சரியாக மின்சாரம் தரக் கூடாது. அணில்கள் அதிகமாக வளர்க்க வேண்டும். மத்திய அரசு கொடுக்கும் மின்சாரத்திற்கு பணம் கொடுக்க கூடாது. அது அப்படியே சேர்ந்து சேர்ந்து யாருக்கும் தெரியாமல் ஒரு நாள் மத்திய அரசு தள்ளுபடி செய்து விட வேண்டும்.


முக்கிய வீடியோ